வல்லிக்கண்ணன் கடிதங்கள் 2


      தமிழின் மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன். அவரோடான நட்பு மிக இனியது. நம் கை பிடித்து அழைத்துப்போவது. இன்று அவர் பருவுடலாய் இல்லை. ஆனால், அவரின் எழுத்துகளும் எண்ணங்களும் நம்மோடு உலவுகின்றன. 

    அவர் எழுதிய கடிதங்கள் தனி வகையிலானவை. புதிதாக எழுத வருவோர்க்கு ஆர்வத்தையும் தொடர் தூண்டலையும் தருபவை. பெரும்பாலும் அஞ்சலட்டையை அழகுபடுத்தியவை அவரின் கடிதங்கள்.  என் போன்ற எத்தனையோ பேருக்கு அவைதான் தமிழில் வாசிக்க, எழுத வழிகாட்டிய பாடப்புத்தகங்கள். 

சுவாசித்தலுக்கான நியாயங்கள்


Meaning to Breathe

அவசரமாய்ப் போகும்போது
ரோட்டில்கிடந்த முள்ளை
எடுத்துப் போடாமல் வந்ததற்கு
மனசு குத்தியதுண்டா?

பறப்பதற்கு அனுமதிப்போம்


      கோடை விடுமுறை முடியப்போகிறது. மாணவர்களோடு பெற்றோர்களும் அடுத்த வகுப்பிற்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். பலர் அதே பள்ளிக்கும் சிலர் வேறு பள்ளிக்கும் போக இருக்கிறார்கள். பள்ளியை மாற்றிக்கொள்ள விரும்புபவர்களுக்குக் கல்வி ஆண்டுத் தொடக்கம் ஒரு வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்.

     மறுபடியும் வழக்கம்போல ஆயிற்று. தொடர்ந்து இனி அந்தப் பள்ளிக்குப் போக மாட்டேன் என்று சொல்லிவிட்டான். கடந்த வருட ஆரம்பத்திலேயே சொன்னான். வகுப்பு மாறினால் சூழல் மாறும் என எண்ணினோம். இந்த ஒரு கல்வியாண்டு மட்டும் போ. அதன் பிறகும் மாறத்தான் வேண்டும் என்றால் மாறிக்கொள்ளலாம் எனத் தேற்றி அனுப்பினோம். ஓர் ஆண்டு முடிந்தது. மகனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

விளையாடிய காலம்


அவர்களெல்லாம்
இங்கிலீசில் எகிறி
வாத்தியார் விளையாட்டு விளையாட

நட்ட கல்லும் பேசுமே…


 ஆங்கிலேயர் பயன்படுத்திய சோழர் காலத்துப் பெருவழி

      வரலாற்றின் மாற்றங்கள் குறித்துப் பாதைகள் கவலைப்படுவதில்லை. அவை தம்மை மிதிப்பவர்களையும் வரலாற்றில் மதிப்பு மிக்கவர்களாக்கித் தம் போக்கிலும் மாறுதல்களை உள்வாங்கியபடி சென்றுகொண்டே இருக்கின்றன. 

    நான்குவழிச் சாலை என்றும் ஆறுவழிச் சாலை என்றும் இன்று பேசப்படுகிறது. இன்றைய பெருஞ்சாலைகள் எல்லாம் ஏதோவொரு காலத்தில் பொதுமக்களும் வணிகக் குழுவினரும்  மன்னர்களின் குதிரைகளும் நால்வகைப் படைகளும் கடந்துபோன பாதைகள் தான். புதுக்கோட்டை மாவட்டத்திலும் இது போன்ற பாதைகள், பெருவழிகள் இருந்ததற்கான பதிவுகள் உள்ளன.

முத்தொள்ளாயிரத்தில் அஃறிணை உயிர்கள்


     
Dr. N. ARULMURUGAN
முழுக்க முழுக்க அதீதக் கற்பனையும் அசாத்தியப் புனைவுமாக ஓர் இலக்கியம் இருக்க முடியுமா? அதை எல்லாரும் கொண்டாட முடியுமா? காலம் காலமாகப் படித்துப் பூரித்துப்போக முடியுமா? முடியும் என்பதற்கான உதாரணங்களுள் ஒன்றுதான்  முத்தொள்ளாயிரம். இலக்கியத்தில் புனைவு இருக்கலாம். ஆனால், புனைவே இலக்கியமாக இருப்பதும் புனைவிலக்கியமாக இருப்பதும் முத்தொள்ளாயிரத்தின் தனிச் சிறப்பு. முத்தொள்ளாயிரம் என்பது ஒரு தொகுக்கப்பட்ட நூல் என்பதும் அதில் கடவுள் வாழ்த்தோடு 109 பாடல்கள் கிடைத்துள்ளன என்பதுமான அதன் பெயர்க்காரணம் முதற்கொண்டு கட்டமைப்பு மற்றும் எண்ணிக்கை பற்றிய புனைவுகள் வரை இதில் அடக்கம்.

சித்தன்ன வாசல் ஏழடிப்பட்டம்: மீட்க வேண்டிய ஓவியப் பிரதி

Dr. N. ARULMURUGAN CEO PDK
சித்தன்ன வாசல் நுழைவாயில்
      திருமயம் பாறை ஓவியங்களைப் பார்த்த பின்பு ஏதேனும் பாறையைப் பார்க்கும்போதெல்லாம் கண்கள் அதே போன்ற ஓவியங்களைத் தேடத் தொடங்கிவிட்டன. சித்தன்ன வாசலிலும் இதுவரை அறியப்படாத ஓவியங்கள் இருப்பதைக் கண்டபோது என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்