வல்லிக்கண்ணன் கடிதங்கள் 14

வல்லிக்கண்ணன்                                                                          சென்னை 15-1-2002

அன்பு மிக்க ...., வணக்கம். 
               உங்கள் 27-12-2001 கடிதம் கிடைத்தது. 

         28ல், வள்ளலார் குடியிருப்பு நலச் சங்கம் தயாரித்த 2002 வாழ்த்து வெளியீடு ஒன்று அனுப்பினேன். பலவிதமான தகவல்கள் கொண்ட சிறு பிரசுரம். ஜனவரி 8 அன்று ‘சின்னப் புறாக்களும் துப்பாக்கிக் குண்டுகளும்’ என்கிற ஏ.எச்.ரசூல் ‘மைலாஞ்சி’ கவிதைகளுக்கான ஆதரவுக் கட்டுரைகளின் தொகுப்பு அனுப்பினேன். கிடைத்திருக்கும்.

நானும் பதிவர் ஆனேன்

         இது எனக்கு ஓர் அரிய நிகழ்வு. புதுக்கோட்டை மாவட்டத்தை விட்டுப் போவதற்கு முன்னால் நான் கலந்து கொண்ட கடைசி விழாவின் மேடை கவிஞர் தங்கம் மூர்த்தியினுடையது. அன்று எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புப் பேச்சாளர். தலைமையேற்றவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் முனைவர் சுப்பையா.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 13

வல்லிக்கண்ணன்                                                                          சென்னை 12-12-2001

அன்பு மிக்க நண்பர் ...., வணக்கம்.

       உங்கள் 10ஆம் தேதிக் கடிதமும், இன்லண்டு தாள்கள், ஸ்டாம்புகளும் நேற்று கிடைக்கப் பெற்றேன். நன்றி. சந்தோஷம்.

      கண்கள் சரியாகிவிட்டன. 45 நாட்களுக்குப் பிறகு கண் மருத்துவரிடம் டெஸ்ட் பண்ணி, கண்ணாடிக்கான விவரம் எழுதி வாங்கியாச்சு. கடையில் கண்ணாடிக்கும் ஆர்டர் பண்ணியாச்சு. அது வெள்ளியன்று கிடைக்கும்.

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்