வல்லிக்கண்ணன் கடிதங்கள் 4

வல்லிக்கண்ணன்                                                                            சென்னை 4-7-2001
........,

   வணக்கம். உங்கள் 27-6-2001 கடிதம்… நலம் அறிந்து மகிழ்ந்தேன். நான், அண்ணி, பிள்ளைகள் எல்லோரும் நலம்.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 1

வல்லிக்கண்ணன்                                                                                சென்னை 26-5-2001

 .... வணக்கம். நீங்கள் சென்னையிலேயே இருக்கிறீர்களோ. அல்லது ஊர் திரும்பி விட்டீர்களோ – தெரியவில்லை. இருப்பினும் ஊர் முகவரிக்கே இக்கடிதம் எழுதுகிறேன்.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 3

வல்லிக்கண்ணன்                                                             சென்னை 29-5-2001

அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். சென்னையில் நீங்கள் எத்தனை எழுத்தாளர்கள் – பத்திரிகைக்காரர்கள் – புத்தக வெளியீட்டாளர்களைக் கண்டு பேசினீர்களோ, தெரியாது. அது நல்ல அனுபவமாகத் தான் இருந்திருக்கும். பொதுவாக, மனிதர்கள் பல ரகம். ஒவ்வொருவரும் விதம் விதமான நோக்குகளும் போக்குகளும் உடையவர்கள்.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 2


      தமிழின் மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன். அவரோடான நட்பு மிக இனியது. நம் கை பிடித்து அழைத்துப்போவது. இன்று அவர் பருவுடலாய் இல்லை. ஆனால், அவரின் எழுத்துகளும் எண்ணங்களும் நம்மோடு உலவுகின்றன. 

    அவர் எழுதிய கடிதங்கள் தனி வகையிலானவை. புதிதாக எழுத வருவோர்க்கு ஆர்வத்தையும் தொடர் தூண்டலையும் தருபவை. பெரும்பாலும் அஞ்சலட்டையை அழகுபடுத்தியவை அவரின் கடிதங்கள்.  என் போன்ற எத்தனையோ பேருக்கு அவைதான் தமிழில் வாசிக்க, எழுத வழிகாட்டிய பாடப்புத்தகங்கள். 

சுவாசித்தலுக்கான நியாயங்கள்


Meaning to Breathe

அவசரமாய்ப் போகும்போது
ரோட்டில்கிடந்த முள்ளை
எடுத்துப் போடாமல் வந்ததற்கு
மனசு குத்தியதுண்டா?

பறப்பதற்கு அனுமதிப்போம்


      கோடை விடுமுறை முடியப்போகிறது. மாணவர்களோடு பெற்றோர்களும் அடுத்த வகுப்பிற்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். பலர் அதே பள்ளிக்கும் சிலர் வேறு பள்ளிக்கும் போக இருக்கிறார்கள். பள்ளியை மாற்றிக்கொள்ள விரும்புபவர்களுக்குக் கல்வி ஆண்டுத் தொடக்கம் ஒரு வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்.

     மறுபடியும் வழக்கம்போல ஆயிற்று. தொடர்ந்து இனி அந்தப் பள்ளிக்குப் போக மாட்டேன் என்று சொல்லிவிட்டான். கடந்த வருட ஆரம்பத்திலேயே சொன்னான். வகுப்பு மாறினால் சூழல் மாறும் என எண்ணினோம். இந்த ஒரு கல்வியாண்டு மட்டும் போ. அதன் பிறகும் மாறத்தான் வேண்டும் என்றால் மாறிக்கொள்ளலாம் எனத் தேற்றி அனுப்பினோம். ஓர் ஆண்டு முடிந்தது. மகனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்