வருகையின் பதிவுகள்

     புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலைமகள் கல்லூரி உயர்நிலைப் பள்ளி, புகழ்பெற்ற தமிழறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், இசை மேதைகள், சமயச் சான்றோர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பேரறிவாளர்கள் பலருடைய பாதம்பட்ட இடமாகும். இப்பள்ளியின் பார்வையாளர் பதிவேடே இதற்கான சான்று.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 8

வல்லிக்கண்ணன் சென்னை 1-9-2001

      ...... வணக்கம். உங்கள் 24-8-2001 கடிதம் 27ல் வந்தது. மகிழ்ச்சி. 25 அன்று புக் போஸ்டில் ‘கவிக்கோ’ இரண்டாவது இதழ் அனுப்பினேன். நீங்கள் இங்கு வந்த போது, அதை நான் முழுமையாகப் படித்திருக்கவில்லை. ராபர்ட் ஃபிராஸ்ட் பற்றி ஆக்டேவியா பாஸ் எழுதியதை படிக்க வேண்டியிருந்தது. 

எந்தையும் தாயும்



        ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் வருகிறது. நாம் பிற தினங்களைக் கொண்டாடுகிற அளவிற்கு நமக்கான தினத்தைப் பிறர் யாரும் கொண்டாடுவதில்லை. கொண்டாடுகிற அளவிற்கு நாம் இல்லையா அல்லது சமூகம் நம்மைக் கொண்டாட மறந்துகொண்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. இருக்கட்டும். வாருங்கள் நம்மை நாமே கொண்டாடிக்கொள்வோம்.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 7

வல்லிக்கண்ணன்                                                                 சென்னை 1-8-2001
   ...... வணக்கம். ஜூலையும் போய்விட்டது. காலம் அதன் இயல்புப்படி செல்கிறது. நான் நலம். நீங்கள் நலம் தானே?

ஆய்தம் : அலகு பெறும் அழகு


     எனது முனைவர் பட்டத்திற்கான நேமிநாத ஆய்வு குறித்துப் பேச்சு வரும்போதெல்லாம் கேட்டவர்கள் கொஞ்சம் வியப்புடனும் மனசுக்குள் கேள்வியுடனும் என்னைப் பார்ப்பது உண்டு. ‘நேமிநாதமா? அப்படியொரு இலக்கண நூலா? நான் கேள்விப்பட்டதில்லையே…’ என்றவர்களும் ‘இலக்கிய வரலாறுகளில் சின்னூல் எனச் சொல்வார்களே அதுவா?’ என்று ஒரு நூற்பெயராக மட்டுமே தாம் கேள்விப்பட்டிருந்த செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டவர்களும் உண்டு.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 6

வல்லிக்கண்ணன்                                 சென்னை 22-7-2001(ஞாயிறு)
.....
  வணக்கம். 
    நீங்கள் அனுப்பிய புத்தகங்களும் கடிதமும் கிடைத்து பல நாட்கள் ஆகின்றன. நான் கடிதம் எழுதுவதில் தான் தாமதம்.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 5

வல்லிக்கண்ணன்                                                                             சென்னை 17-7-2001

......., வணக்கம்.
        பயணம் புதிது கலை இலக்கிய விழா அழைப்பு – ‘பயணம் புதிது’ இதழுடன் – நேற்று (16 திங்கள்) வந்தது. விழா 15 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றிருக்கும்.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 4

வல்லிக்கண்ணன்                                                                            சென்னை 4-7-2001
........,

   வணக்கம். உங்கள் 27-6-2001 கடிதம்… நலம் அறிந்து மகிழ்ந்தேன். நான், அண்ணி, பிள்ளைகள் எல்லோரும் நலம்.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 1

வல்லிக்கண்ணன்                                                                                சென்னை 26-5-2001

 .... வணக்கம். நீங்கள் சென்னையிலேயே இருக்கிறீர்களோ. அல்லது ஊர் திரும்பி விட்டீர்களோ – தெரியவில்லை. இருப்பினும் ஊர் முகவரிக்கே இக்கடிதம் எழுதுகிறேன்.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 3

வல்லிக்கண்ணன்                                                             சென்னை 29-5-2001

அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். சென்னையில் நீங்கள் எத்தனை எழுத்தாளர்கள் – பத்திரிகைக்காரர்கள் – புத்தக வெளியீட்டாளர்களைக் கண்டு பேசினீர்களோ, தெரியாது. அது நல்ல அனுபவமாகத் தான் இருந்திருக்கும். பொதுவாக, மனிதர்கள் பல ரகம். ஒவ்வொருவரும் விதம் விதமான நோக்குகளும் போக்குகளும் உடையவர்கள்.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 2


      தமிழின் மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன். அவரோடான நட்பு மிக இனியது. நம் கை பிடித்து அழைத்துப்போவது. இன்று அவர் பருவுடலாய் இல்லை. ஆனால், அவரின் எழுத்துகளும் எண்ணங்களும் நம்மோடு உலவுகின்றன. 

    அவர் எழுதிய கடிதங்கள் தனி வகையிலானவை. புதிதாக எழுத வருவோர்க்கு ஆர்வத்தையும் தொடர் தூண்டலையும் தருபவை. பெரும்பாலும் அஞ்சலட்டையை அழகுபடுத்தியவை அவரின் கடிதங்கள்.  என் போன்ற எத்தனையோ பேருக்கு அவைதான் தமிழில் வாசிக்க, எழுத வழிகாட்டிய பாடப்புத்தகங்கள். 

சுவாசித்தலுக்கான நியாயங்கள்


Meaning to Breathe

அவசரமாய்ப் போகும்போது
ரோட்டில்கிடந்த முள்ளை
எடுத்துப் போடாமல் வந்ததற்கு
மனசு குத்தியதுண்டா?

பறப்பதற்கு அனுமதிப்போம்


      கோடை விடுமுறை முடியப்போகிறது. மாணவர்களோடு பெற்றோர்களும் அடுத்த வகுப்பிற்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். பலர் அதே பள்ளிக்கும் சிலர் வேறு பள்ளிக்கும் போக இருக்கிறார்கள். பள்ளியை மாற்றிக்கொள்ள விரும்புபவர்களுக்குக் கல்வி ஆண்டுத் தொடக்கம் ஒரு வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்.

     மறுபடியும் வழக்கம்போல ஆயிற்று. தொடர்ந்து இனி அந்தப் பள்ளிக்குப் போக மாட்டேன் என்று சொல்லிவிட்டான். கடந்த வருட ஆரம்பத்திலேயே சொன்னான். வகுப்பு மாறினால் சூழல் மாறும் என எண்ணினோம். இந்த ஒரு கல்வியாண்டு மட்டும் போ. அதன் பிறகும் மாறத்தான் வேண்டும் என்றால் மாறிக்கொள்ளலாம் எனத் தேற்றி அனுப்பினோம். ஓர் ஆண்டு முடிந்தது. மகனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

விளையாடிய காலம்


அவர்களெல்லாம்
இங்கிலீசில் எகிறி
வாத்தியார் விளையாட்டு விளையாட

நட்ட கல்லும் பேசுமே…


 ஆங்கிலேயர் பயன்படுத்திய சோழர் காலத்துப் பெருவழி

      வரலாற்றின் மாற்றங்கள் குறித்துப் பாதைகள் கவலைப்படுவதில்லை. அவை தம்மை மிதிப்பவர்களையும் வரலாற்றில் மதிப்பு மிக்கவர்களாக்கித் தம் போக்கிலும் மாறுதல்களை உள்வாங்கியபடி சென்றுகொண்டே இருக்கின்றன. 

    நான்குவழிச் சாலை என்றும் ஆறுவழிச் சாலை என்றும் இன்று பேசப்படுகிறது. இன்றைய பெருஞ்சாலைகள் எல்லாம் ஏதோவொரு காலத்தில் பொதுமக்களும் வணிகக் குழுவினரும்  மன்னர்களின் குதிரைகளும் நால்வகைப் படைகளும் கடந்துபோன பாதைகள் தான். புதுக்கோட்டை மாவட்டத்திலும் இது போன்ற பாதைகள், பெருவழிகள் இருந்ததற்கான பதிவுகள் உள்ளன.

முத்தொள்ளாயிரத்தில் அஃறிணை உயிர்கள்


     
Dr. N. ARULMURUGAN
முழுக்க முழுக்க அதீதக் கற்பனையும் அசாத்தியப் புனைவுமாக ஓர் இலக்கியம் இருக்க முடியுமா? அதை எல்லாரும் கொண்டாட முடியுமா? காலம் காலமாகப் படித்துப் பூரித்துப்போக முடியுமா? முடியும் என்பதற்கான உதாரணங்களுள் ஒன்றுதான்  முத்தொள்ளாயிரம். இலக்கியத்தில் புனைவு இருக்கலாம். ஆனால், புனைவே இலக்கியமாக இருப்பதும் புனைவிலக்கியமாக இருப்பதும் முத்தொள்ளாயிரத்தின் தனிச் சிறப்பு. முத்தொள்ளாயிரம் என்பது ஒரு தொகுக்கப்பட்ட நூல் என்பதும் அதில் கடவுள் வாழ்த்தோடு 109 பாடல்கள் கிடைத்துள்ளன என்பதுமான அதன் பெயர்க்காரணம் முதற்கொண்டு கட்டமைப்பு மற்றும் எண்ணிக்கை பற்றிய புனைவுகள் வரை இதில் அடக்கம்.

சித்தன்ன வாசல் ஏழடிப்பட்டம்: மீட்க வேண்டிய ஓவியப் பிரதி

Dr. N. ARULMURUGAN CEO PDK
சித்தன்ன வாசல் நுழைவாயில்
      திருமயம் பாறை ஓவியங்களைப் பார்த்த பின்பு ஏதேனும் பாறையைப் பார்க்கும்போதெல்லாம் கண்கள் அதே போன்ற ஓவியங்களைத் தேடத் தொடங்கிவிட்டன. சித்தன்ன வாசலிலும் இதுவரை அறியப்படாத ஓவியங்கள் இருப்பதைக் கண்டபோது என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.

குணவீர பண்டிதர்: சொன்னதும் செய்ததும்


       
Dr .N. ARULMURUGAN

      அச்சில் வருவதெல்லாம் முழுக்க முழுக்க உண்மை என்பது பெரும்பாலோர் நம்பிக்கை. அவர்களைப் பொறுத்தவரை காதுக்கு வரும் செய்திகள் அனைத்தும் உண்மையானவை; கேள்விக்கு அப்பாற்பட்டவை. அவர்கள் புழக்கத்திலுள்ள இலக்கிய இலக்கண வரலாறுகளையும் இப்படித்தான் அப்பட்டமாக நம்புகிறார்கள். அன்றாடச் செய்திகளில் உண்மைக்கு எவ்வளவு இடம் உள்ளதோ அதற்குச் சற்றுக் கூடுதலான இடமே பெரும்பாலான வரலாறுகளிலும் உள்ளது. இவ்வாறு வரலாறுகளில் நம்பகத்தன்மை குறைவாக இருப்பதற்கு அவற்றுக்கான ஆதாரங்களின் குறைபாடும் ஒரு காரணம்.

2014 புத்தாண்டும் 24 மணி நேரமும்




இப்போதெல்லாம் கொண்டாட்டங்கள் என்றால் அத்துமீறுபவையாகவும் அருவருக்கத்தக்கவையாகவும் ஆகிப்போகிற நிகழ்வைப் பார்க்கிறோம். அதுவும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குக் காவல்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி ஆகிவிடுகிறது. மோட்டார் வாகனங்களில் இளைஞர்கள் அதிவேகமாகச் செல்வது, விநோத ஒலி எழுப்புவது, வயது வித்தியாசமின்றி விடுதி நடனங்களில் பங்கேற்பது, பெண்களைக் கேலி செய்வது என்னும்படியாக புத்தாண்டுக் கொண்டாட்டம் பரிமாணம் கொள்ளும்போது அசம்பாவிதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகின்றன. இவற்றுக்கு மாற்றாக சாத்வீகமான கொண்டாட்டங்கள் சாத்தியப்பட வேண்டும்.

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்