உலகக் கவிதைகள் தினம்

குறுகுறுக்கும் கருவிழி நிறையும்
தன்னிழல் தின்ன முயன்று
அலகு வலி தாளாமல் மருண்டு
கலங்கி நிற்கிறது குருவி
நினைவோடை நெடுவழியே
உலக ஆடியில் தெறிக்கும்
தன் மாயபிம்பம் வெல்ல
திக்கற்று
இடருறும் மானிடப் பறவை

குருவிகள் தின இரவின் மடியில் புலரும் கவிதைகள் தின வாழ்த்துக்கள்(21.03.2017).

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்