முத்தொள்ளாயிரத்தில் அஃறிணை உயிர்கள்


     
Dr. N. ARULMURUGAN
முழுக்க முழுக்க அதீதக் கற்பனையும் அசாத்தியப் புனைவுமாக ஓர் இலக்கியம் இருக்க முடியுமா? அதை எல்லாரும் கொண்டாட முடியுமா? காலம் காலமாகப் படித்துப் பூரித்துப்போக முடியுமா? முடியும் என்பதற்கான உதாரணங்களுள் ஒன்றுதான்  முத்தொள்ளாயிரம். இலக்கியத்தில் புனைவு இருக்கலாம். ஆனால், புனைவே இலக்கியமாக இருப்பதும் புனைவிலக்கியமாக இருப்பதும் முத்தொள்ளாயிரத்தின் தனிச் சிறப்பு. முத்தொள்ளாயிரம் என்பது ஒரு தொகுக்கப்பட்ட நூல் என்பதும் அதில் கடவுள் வாழ்த்தோடு 109 பாடல்கள் கிடைத்துள்ளன என்பதுமான அதன் பெயர்க்காரணம் முதற்கொண்டு கட்டமைப்பு மற்றும் எண்ணிக்கை பற்றிய புனைவுகள் வரை இதில் அடக்கம்.

சித்தன்ன வாசல் ஏழடிப்பட்டம்: மீட்க வேண்டிய ஓவியப் பிரதி

Dr. N. ARULMURUGAN CEO PDK
சித்தன்ன வாசல் நுழைவாயில்
      திருமயம் பாறை ஓவியங்களைப் பார்த்த பின்பு ஏதேனும் பாறையைப் பார்க்கும்போதெல்லாம் கண்கள் அதே போன்ற ஓவியங்களைத் தேடத் தொடங்கிவிட்டன. சித்தன்ன வாசலிலும் இதுவரை அறியப்படாத ஓவியங்கள் இருப்பதைக் கண்டபோது என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்