tag:blogger.com,1999:blog-21977279207377125502024-03-06T06:04:56.052+05:30நடைநமதுநடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-28309968713634508702024-01-27T13:32:00.001+05:302024-01-27T13:32:49.048+05:30<div style="text-align: left;"><b><i>சப்பாத்திக் கள்ளிகளின் <br /></i></b><b><i>முட்கள்<br /></i></b><b><i><span><a name='more'></a></span>குத்திக் கிழித்துக்<br /></i></b><b><i>கருந்திட்டாக்கும் <br /></i></b><b><i>ரத்த இருளை<br /></i></b><b><i>நல்லிரவென வாழ்த்தும்<br /></i></b><b><i>அன்பு உள்ளங்களுக்கு <br /></i></b><b><i>நன்றி</i></b></div>நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-14104937043173027682024-01-25T12:57:00.041+05:302024-01-25T13:26:29.753+05:30<div style="text-align: left;"><b><i>உறவுகளுக்கும்<br /></i></b><b><i>ஊர் நண்பர்களுக்கும்</i></b></div><div style="text-align: left;"><b><i><span><a name='more'></a></span>வெளிநாட்டுப் பயணத்தின் நினைவாகப்</i></b></div><div style="text-align: left;"><b><i>பரிசுப் பொருள்கள் வாங்கி வர<br /></i></b><b><i>நானும் என் சக பயணிகளும்<br /></i></b><b><i>ஆளுக்கொன்றாக<br /></i></b><b><i>பெரிய பெரிய பைகளை<br /></i></b><b><i>எடுத்துச் சென்றோம்</i></b></div><div style="text-align: left;"><b><i><br /></i></b><b><i>தெருவெங்கும் கடைகள்<br /></i></b><b><i>கடை முழுக்கப் பொருள்கள்<br /></i></b><b><i>ஏராளம் <br /></i></b><b><i>கொட்டிக்கிடந்தன</i></b></div><div style="text-align: left;"><b><i><br /></i></b><b><i>வாங்கும் சக்திக்கு உட்பட்டதா என </i></b></div><div style="text-align: left;"><b><i>சோதித்தபடி<br /></i></b><b><i>வரிசை பார்த்து <br /></i></b><b><i>வலம் வந்தேன்</i></b></div><div style="text-align: left;"><b><i><br /></i></b><b><i>எடுத்தும் தொட்டும் <br /></i></b><b><i>முகர்ந்தும் இயக்கியும்<br /></i></b><b><i>மாடிகளில் ஏறிப் பார்த்தும்<br /></i></b><b><i>மலைத்துப் போனேன்</i></b></div><div style="text-align: left;"><b><i><br /></i></b><b><i>என் சக பயணிகள் கண்கள் விரிய <br /></i></b><b><i>ரூபாய்களைக் கணக்கிட்டு <br /></i></b><b><i>ஜப்பானிய யென்களில் <br /></i></b><b><i>எதை எதையோ வாங்கி வந்து <br /></i></b><b><i>சொல்லிச் சொல்லி<br /></i></b><b><i>மாய்ந்து போனார்கள்<br /></i></b><b><i> <br /></i></b><b><i>நானோ <br /></i></b><b><i>ஓய்வுக்காக <br /></i></b><b><i>ஒரு தேநீர் அருந்துவது என<br /></i></b><b><i>உட்கார்ந்தேன்</i></b></div><div style="text-align: left;"><b><i><br /></i></b><b><i>அங்கிருந்த ஜப்பானிய புத்தர் <br /></i></b><b><i>அமைதியாய்ப் புன்னகைத்தார்<br /></i></b><b><i>அருந்தாத தேநீரும் சுவைத்தது</i></b></div><div style="text-align: left;"><b><i><br /></i></b><b><i>அந்தக் கணம் <br /></i></b><b><i>எடுத்துச் சென்ற பெரிய பை</i></b></div><div style="text-align: left;"><b><i>கனத்தது</i></b></div><div style="text-align: left;"><b><i><br /></i></b><b><i>திறந்து பார்த்தேன்</i></b><b><i><br /></i></b><b><i>அதில் நிரம்பி வழியும் <br /></i></b><b><i>வெற்றிடத்தைக்<br /></i></b><b><i>காலி செய்ய மனமில்லாமல்</i></b></div><div style="text-align: left;"><b><i><br /></i></b><b><i>நினைவில் <br /></i></b><b><i>புத்தனின் புன்முறுவலைச் </i></b></div><div style="text-align: left;"><b><i>சுமந்தபடி</i></b></div><div style="text-align: left;"><b><i><br /></i></b><b><i>டாலர்கள் விலைபோகாத </i></b></div><div style="text-align: left;"><b><i>வீதிகளைக் கடந்து</i></b></div><div style="text-align: left;"><b><i><br /></i></b><b><i>அறைக்குத் திரும்பினேன்.</i></b></div><div style="text-align: left;"><b><i><br /></i></b></div><div style="text-align: left;"><b><i><br /></i></b><b><i>@ டோக்கியோ<br /></i></b><b><i># 07.11.23 பிறந்தாலும்<br /></i></b><b><i>$ 06.11.23 மறையாத<br /></i></b><b><i>இரவு மணி 1.32 </i></b></div>நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-5987306985380886622020-12-24T18:14:00.002+05:302020-12-26T13:31:32.806+05:30<p><i><b> உறக்கம் கலைத்த</b></i></p><p><i><b>முன்பனிக்கால நள்ளிரவு<span></span></b></i></p><a name='more'></a><p></p><p><i><b>நடுங்க வைக்கும்<span></span></b></i></p><p><i><b>வாடைக்காற்றில்<br /></b></i></p><p><i><b>தூங்கு மூஞ்சி மரங்களும் </b></i></p><p><i><b>விழித்துக்கொண்டன</b></i></p><p><i><b><br /></b></i></p><p><i><b>புழுக்கத்தின் கதவைத் திறந்து</b></i></p><p><i><b>பலகணி வழியே</b></i></p><p><i><b>எட்டிப் பார்க்கிறது மனம்</b></i></p><p><i><b><br /></b></i></p><p><i><b>விண்மீன்களைத் தின்று</b></i></p><p><i><b>ஏப்பம் விட்டிருந்தது வானம்</b></i></p><p><i><b><br /></b></i></p><p><i><b>எத்தனையாவது எண்</b></i></p><p><i><b>எச்சரிக்கைக் கூண்டை ஏற்றுவது</b></i></p><p><i><b>எனத் தெரியாமல்</b></i></p><p><i><b>வானிலை அறிக்கையைத்</b></i></p><p><i><b>தூக்கிக்கொண்டு</b></i></p><p><i><b>தென்மேற்கில் அலைகின்றன</b></i></p><p><i><b>மறதி மேகங்கள்</b></i></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcnUQH4i39S9oCehiqZ9kDyuyS-tK9lRNvF_grsdgC81AXdkrV90yt9aaI8pz1QuaWHPDQqhQCwHNW-TkY5D8Z2EwZBjb-_N9-4YxULf3lpWIPEqn4CdbMfalB2e6-ef2T8D841IiYpVij/s450/CLoud.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="311" data-original-width="450" height="220" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcnUQH4i39S9oCehiqZ9kDyuyS-tK9lRNvF_grsdgC81AXdkrV90yt9aaI8pz1QuaWHPDQqhQCwHNW-TkY5D8Z2EwZBjb-_N9-4YxULf3lpWIPEqn4CdbMfalB2e6-ef2T8D841IiYpVij/w320-h220/CLoud.jpg" width="320" /></a></div><p></p><p><i><b><br /></b></i></p><p><i><b>கரோனா காலத்துக்கு முந்தைய</b></i></p><p><i><b>வழக்கமான நிறுத்தத்தில்</b></i></p><p><i><b>நின்று செல்ல முடியாத ஆதங்கத்தில்</b></i></p><p><i><b>கூவிக்கூவித் தேய்கிறது ரயில்</b></i></p><p><i><b><br /></b></i></p><p><i><b>பதிலுக்கு </b></i></p><p><i><b>உடைந்த கனவின் </b></i></p><p><i><b>நம்பிக்கை போல</b></i></p><p><i><b>இந்த அகால நேரத்திலும்</b></i></p><p><i><b>கரைகின்றன காகங்கள்</b></i></p><p><i><b><br /></b></i></p><p><i><b>ஆளரவமற்ற சாலையில்</b></i></p><p><i><b>தெரு நாய்களின் நடமாட்டம் கூட</b></i></p><p><i><b>காணோம்</b></i></p><p><i><b><br /></b></i></p><p><i><b>தூக்கிச் சுமக்க முடியாத</b></i></p><p><i><b>துக்கத்தின்</b></i></p><p><i><b>ஈர பாரம் இறக்கி வைக்க</b></i></p><p><i><b>விழியில் நனையும் தூக்கத்தையும்</b></i></p><p><i><b>இழுத்துக்கொண்டு வரக்கூடும்</b></i></p><p><i><b>நிறைவேறா விருப்பமழை</b></i></p><p><i><br /></i></p><p><i>சென்னை</i></p><p><i>21.12.2020</i></p>நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-11618333405079266242018-06-30T13:43:00.000+05:302018-06-30T13:45:18.027+05:30 வீதியில் கண்டெடுத்த வைரங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது நீங்கள் நினைப்பதுபோல் படைப்புகளின் ராஜபாட்டை அல்ல. நடைவண்டிகளும் நுங்கு வண்டிகளும் நெரிசலால் திணறும் வீதி இது. இங்கு சும்மா கிடக்கும் டயரை எடுத்து ஓட்டிப்பார்த்து ஆகா நாம் கூட சைக்கிள் விடுகிறோமே என்று மகிழ்ந்து போகிற பிஞ்சுப் படைப்பாளர்கள்தாம் அதிகம். நிஜக் காரைப் பார்த்து பொம்மைக் காரில் வலம்வரத் துறுதுறுக்கும் ஆர்வலர்களே மிகுதி. இங்கு படைப்புக்கான உங்கள் விதிகள் செல்லாது. புதுமைப்பித்தன் சொன்னதுபோல உங்கள் அளவுகோல்களை இங்கு வைத்து அளக்க முடியாது. எங்கள் படைப்புகளில் இருந்து நீங்களே விதிகளைக் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டியதுதான்.</div>
<div style="text-align: justify;">
<br />
<a name='more'></a></div>
<div style="text-align: justify;">
கண்கூச வைக்கும் ஒளிச்சேர்க்கைகள் இங்கு இல்லை. படைப்பாளர்கள் தமது அனுபவங்களுக்கு ஏற்றவாறு வெளிச்சப் புள்ளிகள் வைக்க முனைந்திருக்கிறார்கள். பயந்து பயந்து எழுத எத்தனிக்கும் ஒவ்வொருவரையும் நீங்க கவிஞர், நீங்கதான் கவிதாயினி, உங்களுக்கு எழுத வரும், நீங்க தொடர்ந்து எழுதுங்க என உற்சாகமூட்டி சில நல்ல தருணங்களைப் படைப்பாக்க உதவிய களம் இது. இங்கு வந்த பின்பு யாரேனும் தன்னை ஒரு படைப்பாளராக உணர்ந்திருந்தால் அதுவே இதன் வெற்றி. அவர்களுக்கு ஆகா, நமக்குக் கூட எழுத வருகிறதே எனத் தூங்கவிடாத நாட்களைப் பரிசளித்திருந்தால் அதுவே இதன் கொடை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கு, எறும்பு ஆனாலும் யானை ஆனாலும் அதனதன் கண்களுக்கு அதனதன் அனுபவங்கள் பிரமாண்டம்தான். நிலவைப் பின்தொடர்பவன் என்னும் கவிதையில் மா.செல்லத்துரை கூறுவது போல இவர்களின்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>பிரமாண்டத்தில்</i></div>
<div style="text-align: justify;">
<i>மலைகள்</i></div>
<div style="text-align: justify;">
<i>அசைவற்றுப்போகின்றன..</i></div>
<div style="text-align: justify;">
<i>இரட்டைமுகம் கொண்ட கடவுள்</i></div>
<div style="text-align: justify;">
<i>தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறான் </i></div>
<div style="text-align: justify;">
<i>இரவைத் தேடி. </i></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீதியின் வேர்களில் ஒருவரும் ஆசிரியருமான கவிஞர் வைகறை தான் மறைந்தபோதும் இன்னும் வீதியின் அடையாளச்சின்னமாய் வாழ்கிறார். அவரது கிளையெல்லாம் இசை மீட்டுகின்றன. சமூகத்தில் அவலங்கள் அரங்கேறினாலும்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>புன்னகைக்க முடிகிறது</i></div>
<div style="text-align: justify;">
<i>புத்தரால்</i></div>
<div style="text-align: justify;">
<i>விழி மூடியிருப்பதால்</i></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னும் அவர் காட்டும் காரணம் நம் கண்களைத் திறக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>நனைய மறுக்கும்</i></div>
<div style="text-align: justify;">
<i>நம்மைப் பார்த்து</i></div>
<div style="text-align: justify;">
<i>அழும் குடை</i></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என வறுமையின் பொத்தல்களைக் கவிதையால் அடைக்கும்போதும்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>கோடைமரம் </i></div>
<div style="text-align: justify;">
<i>கொஞ்சம் இலை</i></div>
<div style="text-align: justify;">
<i>நிறைய வானம் </i></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என மரத்தின் இழப்பை ஆகாய வெளியால் ஈடு செய்யும்போதும் கூட்டுப்புழுக்கள் கங்கை கொண்டானுக்குப் பின்- ஆத்மாநாமுக்குப் பின்- நல்ல கவிதை வாசிக்க வேண்டும் என்பதற்காக, மரணம் வைகறையையும் அழைத்துக்கொண்டு விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எலிப்பொறியில் சிக்கிய எலி சாக்கிற்குள் திறந்துவிடப்படுகிறது. இக்காட்சியைப் பதிவுசெய்யும் வைகறை,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>உயிரைக் கையில் பிடித்தபடி</i></div>
<div style="text-align: justify;">
<i>ஓடுகிறது எலி</i></div>
<div style="text-align: justify;">
<i>சாவிலிருந்து</i></div>
<div style="text-align: justify;">
<i>சாவுக்குள்! </i></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்கிறார். எது மரணம், எது வாழ்க்கை எனத் எரியாமல் உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிக் கொண்டிருக்கும் மனித எலிகளுக்கான குறியீடு இதைவிட வேறென்ன இருக்க முடியும்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாலதியின் பள்ளிப்பறவைகள் சுற்றித்திரியும் பட்டாம்பூச்சிகள்; விருட்சமாக இருக்கும் விதைகள்; நம்மை சீண்டிப் பார்க்கும் சிற்றுளிகள். அவரது கவிதைகளும் அப்படித்தான். சின்னச் சின்ன மின்னல்களால் பாதி இரவிலும் புரையேறுகிறது பவல்ராஜுக்கு. அதனால் தன்னை நினைப்பவளைப் பேசாமல் தூங்கச் சொல்கிறார். மேலும் அவர்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>பேரம் படிந்து</i></div>
<div style="text-align: justify;">
<i>வாங்கப்படுகிறது</i></div>
<div style="text-align: justify;">
<i>தஞ்சாவூர் பொம்மைகள்</i></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனப் பணத்திற்காக, சபலத்திற்காக பொம்மைகள் ஆகிவிட்டவர்களையும் பொம்மைகள் வாங்குபவர்களையும் சாடுகிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அமிர்தா வரைந்துள்ள எதிர்வீட்டு அக்காவின் கோலத்தில் மீன்களை வரையும்போது கடலாய்த் தோன்றும்; மான் கோலம் போட்டால் காடாய் மாறும். அவள்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>வாசலில் ஒருநாள்</i></div>
<div style="text-align: justify;">
<i>சூரியனை வரைந்து</i></div>
<div style="text-align: justify;">
<i>வெயிலில் </i></div>
<div style="text-align: justify;">
<i>காயவிட்டிருந்தாள். </i></div>
<div style="text-align: justify;">
<i><br /></i></div>
<div style="text-align: justify;">
அப்படிப்பட்ட கோலங்களை வரைந்த அக்கா தன் ரசிகனை இழந்துவிட்டபின்பு வெறுமையாய்க் கிடந்தது வாசல். அதில் இன்று ஒற்றை நட்சத்திரம் வந்து அவளை மீண்டும் கோலமிட வைத்திருக்கிறது. அதன் சூட்சுமம் அமிர்தாவுக்குக் கவிதையாய்ப் பிடிபட்டிருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனி எழுத்துக்குச் சொந்தக்காரர் ஸ்டாலின் சரவணன். அவரது நின்று கொல்லும் தெய்வ மகள் ஆணின் குருதி, பற்கள், தோல், குடல், சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றைத் தன் போக்கில் பயன்படுத்திக் கொண்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>இதயத்தை மட்டும்</i></div>
<div style="text-align: justify;">
<i>நன்கு துவைத்து</i></div>
<div style="text-align: justify;">
<i>அடுப்பங்கரையில்</i></div>
<div style="text-align: justify;">
<i>எடுப்புத் துணியாக்கிப்</i></div>
<div style="text-align: justify;">
<i>பயன்படுத்துகிறாள்</i></div>
<div style="text-align: justify;">
<i><br /></i></div>
<div style="text-align: justify;">
<i>மூளையைப்</i></div>
<div style="text-align: justify;">
<i>பழைய காகிதக் கிழிசல்களுடன்</i></div>
<div style="text-align: justify;">
<i>வெந்தயம் கலந்து</i></div>
<div style="text-align: justify;">
<i>ஊறவைத்துக் கூழாக்கி</i></div>
<div style="text-align: justify;">
<i>குப்பைக் கூடைகள் செய்தாள்</i></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப் பகை வரலாறு அறியாத நவீன உடையணிந்த ஒருத்தி வந்து நேரம் கேட்கும்போது,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>கைக்கடிகாரத்தில் ஏறி ஓடும்</i></div>
<div style="text-align: justify;">
<i>அவன் பிடரியைக் காலம்</i></div>
<div style="text-align: justify;">
<i>உலுக்கத் தொடங்கிற்று. </i></div>
<div style="text-align: justify;">
<i><br /></i></div>
<div style="text-align: justify;">
நாமெல்லாம் ஒளிரும் இந்தியாவில் வாழ்பவர்கள்; வெறும் பளபளப்புக் காட்டுவதோடு சரி என்பதை இந்துமதி,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>பக்கத்து நாடெல்லாம் ஒலிம்பிக்ல பதக்கங்கள் பலப்பல..</i></div>
<div style="text-align: justify;">
<i>நாம ஒன்னு வாங்கறதுக்கே சுத்துது தல..</i></div>
<div style="text-align: justify;">
<i><br /></i></div>
<div style="text-align: justify;">
என நோய்முதல் நாடிச் சொல்கிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சமூகப் பிரக்ஞையுள்ள ஒரு கலைஞனின் இறப்பின் இடைவெளி நிரப்பவியலாப் பெருவெளி. அவரின் பணி அளப்பரியது. இனி எந்தக் குரல்நாணும் ஆத்தாவின் சேலையை அவரைப் போல் நெய்ய முடியுமா என்பது ஐயமே.. ஒரு சமூகக் கலைஞனுக்கு, ரௌத்திரம் பழகிய புரட்சியாளனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” -</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது அண்மையில் காலமான மக்கள் கலைஞன் கரிசல் திருவுடையானுக்கு குருநாதசுந்தரம் எழுதிய இரங்கல் உரை. இது முற்றிலும் இவருக்கும் பொருந்தும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2016 செப்டம்பர் 11 பாரதியின் நினைவு நாள் குறித்த கவிதையில் தன் ஆசிரியப் பணியின் நோக்கம் வழிவிலகிச் செல்வதை ஆதங்கத்துடன் இப்படிப் பதிவு செய்துள்ளார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>உனது மீசை வைக்கும்</i></div>
<div style="text-align: justify;">
<i>எனது எத்தனிப்புகள் மட்டும்..</i></div>
<div style="text-align: justify;">
<i>தினந்தோறும் தோற்றே போகிறது.</i></div>
<div style="text-align: justify;">
<i>.......</i></div>
<div style="text-align: justify;">
<i>உடற்கல்விப் பாடவேளையில்</i></div>
<div style="text-align: justify;">
<i>இலக்கணம் கற்பிக்கும் அவசரத்தில்</i></div>
<div style="text-align: justify;">
<i>உன் ஓடி விளையாடும் பாப்பாக்களை</i></div>
<div style="text-align: justify;">
<i>ஒளித்து வைத்தேன்..</i></div>
<div style="text-align: justify;">
<i>மைதானத்தை விட</i></div>
<div style="text-align: justify;">
<i>மதிப்பெண்கள் தானே முக்கியம் இங்கு !</i></div>
<div style="text-align: justify;">
<i><br /></i></div>
<div style="text-align: justify;">
என எழுதிய அவர் சிறந்த சிறுகதையாசிரியர்; சிந்தனையாளர். தனது கவிதையில் அவர் பாரதிக்குச் சொன்னார்: </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>நினைவுகளில் என்றும்</i></div>
<div style="text-align: justify;">
<i>உயிர்த்திருக்கிறாய்.</i></div>
<div style="text-align: justify;">
<i>என் நொடிகளில் என்றும்</i></div>
<div style="text-align: justify;">
<i>பயணிக்கிறாய்..</i></div>
<div style="text-align: justify;">
<i>என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கும்</i></div>
<div style="text-align: justify;">
<i>உன் நினைவுகளுக்கு நன்றி !!</i></div>
<div style="text-align: justify;">
<i><br /></i></div>
<div style="text-align: justify;">
இதையே நாமும் அவரை நினைத்துச் சொல்லவேண்டி வந்தது சோகம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>பழைய கிழிந்த பத்துரூபாய்த் தாளில்</i></div>
<div style="text-align: justify;">
<i>காதலின் காதலி பெயர்கள், </i></div>
<div style="text-align: justify;">
<i>செல்லுபடியாகியிருக்குமா அந்தக் காதல்?</i></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனக் கிழிந்த காதல்களில் சந்தேகம் கிளப்பும் சுகுமாறன் சின்னையா,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>மீன்பிடித்த குளம்</i></div>
<div style="text-align: justify;">
<i>தான் வெடித்தது கண்டு</i></div>
<div style="text-align: justify;">
<i>கொக்கின் நெஞ்சில் மீனின் முள்</i></div>
<div style="text-align: justify;">
<i><br /></i></div>
<div style="text-align: justify;">
எனக் காட்சிப்படுத்தும்போது இயற்கை நம் நெஞ்சில் குத்துவதை உணரமுடிகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீதியின் நிகழ்வுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் கவிஞர் கீதா, மீரா செல்வக்குமார் ஆகியோரும் குறிப்பிடத்தக்க படைப்பாளர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இம்மலரில் கவிதைகளைப் போலவே சில சிறுகதைகளும் முத்திரை பதிக்கக்கூடியவை. அகவை ஐம்பது சிறுகதை கிராமத்தை விட்டுப் போக முடியாத முதியவளின் சோகத்தைப் பதிவு செய்திருக்கிறது. மையக் கரு அனைவரும் அறிந்த ஒன்று என்றாலும் காலத்திற்கேற்ப அலைபேசி வழியே ஓரங்க நாடகமாய் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் சோலையப்பன். சார்வாகனின் கதை ஒன்றில் உயிரற்ற யானை பொம்மையை உயிருடையதாகக் கருதி விளையாடும் குழந்தை தன் தந்தையையும் அப்படியே கருத வைக்கும். அதுபோல பொம்மை போனை வைத்து யதார்த்த உலகத்தை மறக்க வைக்கும் இக்கதை நமக்கு நடக்கவிருக்கும் நாடகம் என்னவோ என நமது முதுமையை நோக்கி பயம் காட்டுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சோலையப்பன் கதையில் வரும் பாட்டியைப் போலவே சொந்த ஊரை விட்டுப் போகாத கவிமதி சோலச்சியின் மோகன் வாத்தியார் கல்விக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லாமல் போய்விட்ட அவலத்தின் சாட்சியாக நிற்கிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடக்கப்பள்ளி ஆசிரியரான அவர் தன் மாணவர்களிடம், "இந்த அதிகாரத்தைப் பெறக் கடுமையாக உழைக்க வேண்டும். அதிகாரம் தங்கள் கைகளுக்கு கிடைத்துவிட்டால் இந்த மக்களுக்கு எவ்ளோ நல்ல காரியங்கள் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்யிங்கய்யா..."என்று அடிக்கடி சொல்லி வந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தன் மாணவப் பிள்ளைகளின் கைகளுக்கு அதிகாரம் வந்தபோது மகிழ்ந்த அவர் ஒரு திருமண நிகழ்வில் கண்ட சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எம்புள்ளைங்க தப்ப திருத்திக்கிட்டு மாத்திக் காட்டுவீங்கனு நம்புறய்யா." கனத்த குரலோடு, இருக்கையில் அமரச் சென்றதுவரை நினைத்துப் பார்த்தபடி சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு அந்த மாலை வேளையில் வீதியைப் பார்த்தார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இக்கதையில் லட்சியவாதக் கதைகளுக்கே உரிய சுற்றிவளைத்தல்கள் இருந்தாலும் லட்சியங்களுக்கு அழிவில்லை; அவை சொல்லப்படத்தான் வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பரிசோதனைக் கதைகள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர் அண்டனூர் சுரா. அவர் பாரதியின் கவிதைகளைச் சிறுகதையாக மாற்றிப் பார்த்திருக்கிறார். கண்ணம்மாவைத் தேடும் சுப்பையாக்களுக்கு இது இனிக்கக் கூடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன என்பதைத் தன் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் ஒளி ஓவியர் புதுகை செல்வா. குழந்தைகளின் உளவியலைச் சுற்றியே வட்டமிடும் அவரது சிந்தனைகள் கவனிப்பிற்கு உரியவை. அதேபோல பெண்குழந்தைகளை வழிநடத்துவதில் அம்மாக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் திவ்யபாரதி தங்கப்பாவின் கட்டுரை குறிப்பிடத்தக்கது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அரசியலற்ற தலைமையும் கூடப் போராட்டத்தை வழிநடத்த முடியும் என்பதைப் பதிவு செய்திருக்கிறது ரோஸ்லின் கட்டுரை. இவர் மறைந்த வைகறையின் துணைவியார். எந்த நிகழ்வும் நம்மை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும் என்பதை நாம் உணர வேண்டும் என்கிறார். நமது ஜனநாயகத்தில் எங்கோ, ஏதோ குறைபாடு உள்ளது. அதை நீக்க வேண்டிய பெரும் பொறுப்பும் நம் கையில்தான் உள்ளது என்கிறார் அவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிரேம்சந்த்தின் ஆளுமை உள்ளிட்ட வீதியில் வலம் வந்த படைப்பாளர்கள், படைப்புகள் தனித்துச் சொல்ல வேண்டியவை. முதுமைக்குப் பாடம் போதிக்கும் இளைஞர் பொன்.க. அய்யா, சிறந்த திரைப்படங்கள், பிறமொழிப் படைப்புகளின் விமர்சகரும் படைப்பாளருமான கஸ்தூரிரங்கன், எதையும் தனக்கே உரிய பாணியில் விரியும் காட்சியாய் விமர்சிக்கவும் மாற்றுகளை முன்மொழியவும் தயங்காத ராசி. பன்னீர்செல்வன் முதலியோரின் படைப்புகள் வீதிக்கு வலு சேர்த்தவை. முகநூல், வலைப்பக்கம் முதலான சமூக ஊடகங்களில் அவ்வப்போது வெளியிடப்பட்ட விமர்சனம் குறித்த விமர்சனங்களும் இம்மலரில் உள்ளன. அவையெல்லாம் வாசித்துக் கொள்ளத்தக்கவை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீதிக்கு வந்தபின் தன்னை ஒரு விமர்சகராய் அடையாளம் கண்டிருக்கும் ஸ்ரீ மலையப்பன், எள்ளல் தொனிக்க மாற்றுச் சிந்தனைகளுடன் வாசகனைக் கட்டிப்போடும் வசீகரம் தெரிந்த கவிஞர் மீரா செல்வக்குமார், எதையும் தீவிரத் தன்மையுடன் அணுகுதல், தேர்ந்த திட்டமிடல், ஆவணப்படுத்துதல், அனைவரையும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் சிறந்த கவிஞர் கீதா போன்ற வீதியின் விழுதுகள் இக்களத்தை இன்னும் செப்பனிடக் காத்திருக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
மெரினா எழுச்சிபோல இங்குத் தலைவர்கள் இல்லை; தொண்டர்கள் இல்லை; அனைவரும் சகபயணிகளே. அத்தகு சகபயணிகள் அனைவரது படைப்புகளும் இம்மலரில் இடம்பெற வேண்டும் என்பதே மலர்க் குழுவினரின் பேராவல். இருப்பினும் பலரால் தங்களது பணிப்பளு, இடமாற்றம் போன்றவை காரணமாக அனுப்பித் தர இயலவில்லை. அதனால் சில தேர்ந்த படைப்புகள் விடுபட்டுப் போயின. இது மலருக்கான இழப்பு மட்டுமல்ல; வீதிக்கான இழப்பும் கூட. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எப்போதும் என்னை முன்னிலைப்படுத்தி, தொடரோட்டத்தின் கடைசி ஆளாய் மூச்செடுத்துத் தன் சகாக்களை வெற்றிபெற வைக்கும் - பலதிறப்பட்டவர்களையும் அரவணைப்பதில் என்னை எப்போதும் வியப்புக்குள்ளாக்கும் - கவிஞர் முத்துநிலவன், சோர்ந்து கிடக்கும் குருதிக்கு உணர்வுக் கொடையளிக்கும் கவிஞர் தங்கம் மூர்த்தி போன்ற முன்னத்தி ஏர்களின் விடாப்பிடியான கைகோப்பும் வழிகாட்டலுமே 50ஆவது நிகழ்வுக்கு வீதியை அழைத்துவந்திருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீதி ஐம்பதின் இம்மலர் தற்போது உங்கள் கைகளில். இது குறைந்தபட்சம் நூறை நோக்கிப் பயணிக்கும் என நம்பலாம். அந்த நம்பிக்கையை எம் இளவல்கள் நிறைவேற்றித் தருவார்கள். நூறைத்தாண்டியும் பயணிக்க வேண்டும் என்னும் பேராசை உங்களைப் போலவே எனக்கும் உண்டு. அது வீதிக்கு வந்து கைகோக்கும் உங்களின் பிடிவாத்தில் உள்ளது; உங்களுக்கு அடுத்துவரும் இளம் படைப்பாளர்களைப் போட்டியாளர்களாகப் பார்க்காமல் அவர்களைக் கைதூக்கிவிடும் பண்பாட்டுத் தொடர்ச்சியில் உள்ளது. வளர்வோம்; தொடர்வோம். வாழ்த்துகள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: right;">
உங்கள் வீதியில் ஒருவன்</div>
<div style="text-align: right;">
நா. அருள்முருகன்</div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-1102376217379361602018-05-06T20:04:00.001+05:302018-05-06T20:07:11.113+05:3030 / 11 / 2017<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div align="center" class="MsoNormal" style="text-align: center;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">நெடுஞ்சாலைகள் நீள்கின்றன</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">நிரந்தரமாய்ப் போவதற்கான</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">ஏற்பாடுகளுடன்</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"></span></div>
<a name='more'></a><br />
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">கட்டிழந்த வாகனங்கள் </span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">பயணிகள் மீது</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">அகாலம் விதைக்கின்றன</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">வசதிக் குறைவான</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">சவக்கிடங்குகளில்</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">உயிர்கள் கடந்துபோகின்றன</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">வரிசையில் குவியும் இறப்புகளை</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">எரிக்கத் தடுமாறி</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">மூர்ச்சை அடைகிறது</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">மின்மயானம்</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">கலங்கிக் கலங்கிக்</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">கருமுகில் கவியும்</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">இணைகளின் கேவல்</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">உறவுகளின் ஓலம்</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEOXsskMiRQSN9cyGRlPxz3t63jn4Kj8wi638u9RqIz1nNvCYaaQjZqb4XY-D0SVCTgBkM5E82AhhpPyz9Z2kGtg_KxTYWAlHXD8oh_6iw2dcv5mxAnN6bS6TcFr8kbrAmKEfwNZt1Ad1N/s1600/danger.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="437" data-original-width="450" height="310" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEOXsskMiRQSN9cyGRlPxz3t63jn4Kj8wi638u9RqIz1nNvCYaaQjZqb4XY-D0SVCTgBkM5E82AhhpPyz9Z2kGtg_KxTYWAlHXD8oh_6iw2dcv5mxAnN6bS6TcFr8kbrAmKEfwNZt1Ad1N/s320/danger.jpg" width="320" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">வீடு முழுக்க</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">மரண வாசனை</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">ஆறுதல்கள் தேம்புகின்றன</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">அம்மாவை </span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">அப்பாவை</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">பறிகொடுத்த குழந்தைகள்</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">திடீர் திடீரென</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">அழுதழுது விளையாடுகின்றன</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">கண்ணீரைத் துடைக்கத்</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">தெம்பில்லாத கைகள்</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">மனசுக்கு பாரம்</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">கூடிக்கொண்டே போகிறது</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">தந்தையானவள்</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">தாயுமானவன்</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">எண்ணிக்கை</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">தன் மறுப்பை</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">மேலும் உறுதிப்படுத்துகிறதாய்</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">பக்தர்களைக் காவுகொண்ட</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<span lang="TA" style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;">கடவுள்</span><span style="font-family: "latha" , "serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-justify: inter-ideograph;">
<br /></div>
<br />
<div class="MsoNormal">
<br /></div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-21857264063989204062018-05-06T18:59:00.000+05:302018-05-06T19:51:42.039+05:30இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
நிகழ்கால இடைநிலைகளில் <span style="color: #990000;">ஆநின்று</span> என்பது எப்போதோ மறைந்துவிட்டது. <span style="color: blue;">கின்று</span> என்பதும் அவ்வளவாகப் பயன்பாட்டில் இல்லை. நிகழ்காலத்தைக் குறிக்க <span style="color: #660000;">கிறு</span> ஒன்று மட்டும் போதாதா? கின்றையும் சொல்லிக்கொடுத்துத்தான் தீரவேண்டுமா? என ஏக்கமாகக் கேட்டார் நண்பர். என்ன..., மக்கள் கின்றையும் கைவிடத் தயாராகிவிட்டார்களோ என்று அதிர்ச்சியாக இருக்கின்றதா? மொழியில் இதெல்லாம் நடப்பதுதான். ஆனாலும் கின்று அவ்வளவு எளிதில் மறைந்துவிடாது. </div>
<div style="text-align: justify;">
<br />
<a name='more'></a><br />
<b>இருக்கின்ற உலகம்</b></div>
<br />
<b></b>
<br />
<div style="text-align: justify;">
இருட்டறையில் உள்ளதடா உலகம் / சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே... எனச் செய்யுளில் தளை கெடாமல் எழுத கின்று அவசியம் தேவை. செய்யுளை ஆராதித்த காலம் மலையேறிவிட்டது. சரி விடுங்கள். கின்று உரைநடைக்கும் தேவை. எடுத்துக்காட்டாக, அது வருகின்றது என்பதை அது வருகிறது என எழுதிவிடலாம். ஆனால், அவை வருகின்றன என்பதை அவை வருகிறன என கிறு இடைநிலை கொண்டு எழுத மொழியில் இடமில்லை. ஆம். அஃறிணைப் பலவின்பால் தெரிநிலை நிகழ்கால வினைமுற்றுகளில் இடைநிலையாக உள்ளது கின்று மட்டுமே. எனவே, அஃறிணைப் பலவின்பால் இருக்கும் வரைக்கும் தனித்து நிற்கும் கின்றும் நிலைத்து நிற்கும்.</div>
<div style="text-align: justify;">
<br />
இப்படி மொழியில் பழையன கழிதலையும் புதியன புகுதலையும் நிலையின தொடர்தலையும் பதிவுசெய்வதுதான் இலக்கணம். மொழியைப் பயன்படுத்தும் அனைவருமே ஏதோவொரு வகையில் இலக்கணத்தை உள்வாங்கித்தான் உள்ளனர். தமிழில் இசைக்கும் நாடகத்திற்கும் இலக்கணம் இருந்தாலும் அனைவர்க்கும் பரிச்சயமானது இயற்றமிழ் இலக்கணம்தான். </div>
<div style="text-align: justify;">
<br />
நூல் என்றாலே அது இலக்கண நூல்தான் என்றொரு காலம் இருந்தது. அதற்குக் காரணம் வாழ்க்கையை எழுத்தில் பதிவு செய்வது நூல் என்னும் சிந்தனைதான். அகத்தியம், தொல்காப்பியம் போன்ற நூல்கள் மொழிக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தன.</div>
<div style="text-align: justify;">
<br />
<b>அகம் புறம்</b></div>
<div style="text-align: justify;">
<br />
வரலாறு நெடுகப் புற வாழ்க்கையாகிய போர்களையும் போர் நிமித்தங்களையும் பார்க்கிறோம். ஆனால் இலக்கணங்களில் புற வாழ்க்கையை விட அக வாழ்க்கையே சிறப்பிடம் பெற்றுள்ளது. சங்க இலக்கியத் தொகை நூல்கள் பதினெட்டில் எட்டுத்தொகையில் ஐந்து, பத்துப்பாட்டில் ஐந்து (நெடுநல்வாடை உட்பட) என அக நூல்களே அதிகம். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் புற வாழ்க்கை பற்றிய பதிவாக புறத்திணையியல் என ஓர் இயல் மட்டும் இருக்க அக வாழ்க்கையை அறிய அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் எனக் குறிப்பாக நான்கு இயல்கள் வைக்கப்பட்டுள்ளன. </div>
<div style="text-align: justify;">
<br />
பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை என இரண்டு மட்டுமே புறப்பொருள் இலக்கணம் கூறும் நூல்களாக உள்ளன. அகப்பொருளுக்கோ இறையனார் களவியல், தமிழ்நெறி விளக்கம், நம்பியகப் பொருள், களவியற்காரிகை, மாறனகப் பொருள் எனப் பட்டியல் தொடர்கிறது. திருக்கோவையார், பழனிக்கோவை ஆகிய நூல்களில் சில நூற்பாக்களும் அகப்பொருள் இலக்கணம் கூறுவனவாய் அமைந்துள்ளன. போரும் புறவாழ்வும் வரையறைகளுக்கு அப்பாற்பட்ட திருப்பங்களுடன், சூழ்நிலைகளுடன் கழிந்தன என்பதோ புற வாழ்க்கையில் அக வாழ்க்கையில் உள்ளது போன்ற நிலைத்தன்மையும் நீடித்த தன்மையும் இல்லாமல் போனதோ புறப்பொருள் இலக்கண நூல்கள் அதிகம் தோன்றாமைக்குக் காரணமாய் இருக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br />
<b>யாப்புக்கடல்</b><br />
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலன்நெறி வழக்கம் எனத் தொல்காப்பியர் கூறியதாலோ என்னவோ வாழ்க்கைக்கான இலக்கணமாக இருந்த தமிழ் இலக்கணம் செய்யுளுக்கான இலக்கணமாகக் குறுக்கப்பட்டது. எழுதுவதெல்லாம் செய்யுளாக இருந்ததால் அவற்றுக்கெல்லாம் இலக்கணம் எழுத முற்பட்டனர். தமிழ் இலக்கண நூல்களில் அதிக எண்ணிக்கை கொண்டது செய்யுளுக்கான இலக்கண நூல்கள்தாம். </div>
<div style="text-align: justify;">
<br />
செய்யுள் நூல்கள் பெருகியமைக்குக் கற்றல் கற்பித்தல் முறைகளும் காரணம். அன்றைய காலத்தில் படித்தல் என்றால் அது கேட்டல்தான். ஓதலும் ஓதுவித்தலுமே கல்வியாக இருந்தது. அதனால்தான் நன்னூலில் பாடம் படித்தலின் வரலாறு எனப் பதிவு செய்யப்படாமல் பாடங் கேட்டலின் வரலாறு பதிவு செய்யப்பட்டது. </div>
<div style="text-align: justify;">
<br />
ஏடும் எழுத்தாணியும் எல்லாராலும் கையாள இயலாத கருவிகளாய் இருந்தன. ஓலைச் சுவடிகளில் எழுதுவதன் தொழில்நுட்பச் சிக்கல் கேட்டலையே நிர்ப்பந்தம் செய்தது. கேட்டு நெட்டுருச் செய்து மீண்டும் சொல்வதற்கு செய்யுள்களே வசதியாக இருந்தன. வாய்ப்புக் கிடைத்தபோது (பல தலைமுறைகள் தாண்டிக் கூட) அவை ஏட்டில் எழுதி வைக்கப்பட்டன.</div>
<div style="text-align: justify;">
<br />
பல்வேறு பாக்களும் பாவினங்களும் எழுத்தெண்ணிப் பாடப்பட்டதை யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, ஆகிய இலக்கண நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. புலவர் குழந்தையின் யாப்பதிகாரம், தொடையதிகாரம் ஆகியன தற்கால யாப்பிலக்கண நூல்கள்.</div>
<div style="text-align: justify;">
<br />
மேலும், காக்கை பாடினியம், கையனார் யாப்பியல், சங்க யாப்பு, செய்யுளியல், செய்யுள் வகைமை, தக்காணியம், நக்கீரர் அடிநூல், நக்கீரர் நாலடி நானூறு, நத்தத்தம், நல்லாறன் மொழிவரி, பரிமாணனார் யாப்பிலக்கணம், பல்காயம், பல்காப்பியம், பல்காப்பியப் புறநடை, பாடலம், மாபுராணம், பூதபுராணம் ஆகியவை மறைந்துபோன யாப்பிலக்கண நூல்களாக அறியப்படுகின்றன. மாறன் பாப்பாவினம், சிதம்பரச் செய்யுட்கோவை, விருத்தப்பாவியல், வண்ணத்தியல்பு, அவிநயனார் கலாவியல், இந்திர காளியம், கல்லாடம், கல்லாடனார் கலாவியல், கல்லாடனார் வெண்பா, செய்யுள் வகைமை, திருப்பிறவாசிரியர் தூக்கியல், பொய்கையார் கலாவியல், மாமூலம், முள்ளியார் கவித்தொகை போன்ற செய்யுள் வகைமை கூறும் இலக்கண நூல்களும் இருந்துள்ளன. </div>
<div style="text-align: justify;">
<br />
<b>பாட்டியல்</b></div>
<br />
<b></b>
<br />
<div style="text-align: justify;">
சிற்றிலக்கியங்களின் வகைமைகளுக்கு இலக்கணம் கூறப் பாட்டியல் நூல்கள் தோன்றின. வெண்பாப் பாட்டியல், பன்னிரு பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், வரையறுத்த பாட்டியல், அகத்தியர் பாட்டியல், மாமூலர் பாட்டியல், பாட்டியல் மரபு, தத்தாத்திரேயப் பாட்டியல், பண்டாரப் பாட்டியல், தொல்காப்பியனார் பாட்டியல், பருணர் பாட்டியல், பாட்டியல் மரபு, பிரபந்த தீபம், பிரபந்தத் திரட்டு, வாருணப் பாட்டியல் போன்றவை சிற்றிலக்கியங்களின் இலக்கணம் பேசுபவை.</div>
<div style="text-align: justify;">
<br />
<b>அணி</b></div>
<br />
<b></b>
<br />
<div style="text-align: justify;">
செய்யுள்களில் உள்ள நயங்களை எடுத்துரைப்பது அணி இலக்கணம். தண்டியலங்காரம், மாறனலங்காரம், சந்திராலோகம், குவலயானந்தம் ஆகியன அணியிலக்கணம் கூறும் நூல்கள்.</div>
<div style="text-align: justify;">
<br />
<b>ஐந்தும் அதற்கு மேலும்</b></div>
<div style="text-align: justify;">
<br />
எழுத்துகள் இத்தனை எனவும் சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகள் இத்தனை எனவும் எண்ணிக்கை குறிப்பிட்டு இலக்கணத்தைச் சொல்லிக் கொடுக்கவேண்டிய நிலைமை வந்தது; தம் காலத்திய வளர்ச்சியை ஓரளவுக்கேனும் உள்ளீடு செய்யவேண்டி வந்தது. இதனை எழுத்தும் சொல்லும் உணர்த்தும் இலக்கண நூல்கள் நிறைவு செய்தன. நேமிநாதமும் நன்னூலும் அவ்வகையில் முக்கியமானவை. இலக்கணக்கொத்து, தென்னூல், கவியோகி சுத்தானந்த பாரதியாரின் இனிய தமிழ் இலக்கணம் போன்ற இலக்கண நூல் முயற்சிகளும் உண்டு.</div>
<div style="text-align: justify;">
<br />
ஐந்திலக்கணமும் உணர்த்தும் நூல்கள் தொல்காப்பியம், அவிநயம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம் ஆகியன. தண்டபாணி சுவாமிகளின் அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம் என்னும் நூல்களும் உண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>உரைநடையில் இலக்கணம்</b></div>
<div style="text-align: justify;">
<b></b><br />
செய்யுளில் இலக்கணம் எழுதும் முறை தாண்டி காலத்திற்கேற்ப உரைநடையில் தமிழிலக்கணத்தை எழுதும் முயற்சி தோன்றியது. விசாகப் பெருமாளையர் அணியிலக்கணம், இலக்கணச் சந்திரிகை, செய்யுள் இலக்கணம், சித்திரகவி விளக்கம், பஞ்சலட்சணம் ஆகியவை பழைய மரபிலான உரைநடை இலக்கண நூல்கள். தமிழ் இலக்கணம் (ஆறுமுக நாவலர்), தமிழ் இலக்கண நூல் (ஜி.யூ.போப்), கவிபாடலாம் (கி.வா. ஜகந்நாதன்), இருபதாம் நூற்றாண்டிற்கான தமிழிலக்கணம் சொற்படலம் (ச.பாலசுந்தரம்), நற்றமிழ் இலக்கணம் (சொ. பரமசிவம்) ஆகிய நூல்கள் தமிழின் மரபிலக்கணத்தை உரைநடையில் கற்பிக்கும் பாடநூல்கள் போன்றவை. </div>
<div style="text-align: justify;">
<br />
மு.வை. அரவிந்தனின் உரையாசிரியர்கள் என்னும் நூலில் இருந்து இலக்கண வளர்ச்சிக்கு நூலாசிரியர்கள் மட்டுமல்ல; உரையாசிரியர்களும் பங்களித்துள்ளதை அறியலாம். உரையாசிரியர்கள் ஏதோ தற்காலத்திய துணைவன்களை(Guide/Notes) எழுதித் தருபவர் போன்றவர்கள் என்னும் பார்வைதான் நம்மிடம் உள்ளது. கோனார் உரையும் இன்னபிற உரைகளும் நமக்குள் உருவாக்கிவிட்ட மனப்பான்மை அது. உண்மையில் உரையாசிரியர்கள் தொல்காப்பியம் போன்ற இலக்கண இலக்கிய நூல்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த –உரைத்த- ஆசிரியர்கள். மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதற்காக அவர்கள் எழுதிவைத்த உரைக்குறிப்புகள்(Notes of Lesson)தான் இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் உரைகள் எனலாம். பின்வந்த இலக்கண நூலாசிரியர்கள் அவற்றைத் தம் நூல்களில் சூத்திரங்களாக வைக்கும் அளவிற்கு அவை செல்வாக்குப் பெற்றன. நன்னூல் சூத்திரங்களில் இத்தகைய உரையாசிரியர்களின் செல்வாக்கை வெளிப்படையாகக் காணலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கல்வெட்டு உரைநடை, உரையாசிரியர்களின் உரைகள் போன்றவை செய்யுளின் ஓசையைப் பெற்றிருந்தாலும் செய்யுள் வேறு உரைநடை வேறு என்னும் உணர்வு அனைவர்க்கும் இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் அச்சு ஊடகம் வளர்ந்த பின்பு உரைநடை வளர்ச்சி சாத்தியம் ஆயிற்று. செய்யுளின் தாக்கம் குறைந்து பேச்சு ஊடகம் வளர்ந்தது; நல்ல செய்யுளைத் தேடிப்பார்க்கும் நிலை வந்தது. மொழியின் அளவில் இது சுருக்கம் என்றாலும் தமிழ்மொழி பரவலாக எழுதப்படும் ஜனநாயகத் தன்மை பெற்றது இப்போதுதான். </div>
<div style="text-align: justify;">
<br />
<b>ஆய்விலக்கணம்</b><br />
</div>
<div style="text-align: justify;">
ஏராளமான நூல்கள் அச்சாக்கம் பெற்றன. தமிழ் மொழியின் அமைப்பையும் இலக்கணங்களின் வகைமைகளையும் ஆய்வு செய்யும் போக்கு எழுந்தது. தனி இலக்கண நூல்களைப் பற்றிய ஆய்வுகள் ஒருபுறம் இருப்பினும் இலக்கண உள்ளடக்கத்தை முழுமை நோக்கில் எடுத்துச் சொல்லும் நூல்களும் உருவாயின. கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம், இலக்கண வரலாறு (சோம இளவரசு), இலக்கண வரலாறு (இரா. இளங்குமரன்), தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் (சோ.ந. கந்தசாமி), தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி (ய. மணிகண்டன்), இலக்கண வரலாறு- பாட்டியல் நூல்கள் (மருதூர் அரங்கராசன்), அணியிலக்கண வரலாறு (இரா.கண்ணன்), தமிழ் அணியிலக்கண மரபும் இலக்கண மறுவாசிப்பும் (இரா.அறவேந்தன்), தமிழ் வரலாற்று இலக்கணம் (ஆ. வேலுப்பிள்ளை), தமிழ்மொழி இலக்கண இயல்புகள் (அ.சண்முகதாஸ்) போன்ற நூல்கள் தமிழ் இலக்கணத்தை, இலக்கண நூல்களை வரலாற்று நோக்கில் அணுகியவை. </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
மொழிநூல் (மு.வரதராசனார்), தமிழ்மொழி வரலாறு (தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்), தமிழ்மொழி வரலாறு (சு.சக்திவேல்), தமிழ்மொழி அமைப்பும் வரலாறும் (பெ.சுயம்பு) போன்ற நூல்கள் மொழியியல் வரலாற்று நோக்கில் எழுதப்பட்டவை. இவ்வரிசையில் மேற்கத்திய மொழியியலைப் பிரதிசெய்ய நினைத்த பல முயற்சிகள் தோல்வியைத் தழுவின.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>உரைநடைக்கான இலக்கணம்</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
இது உரைநடைக் காலம். ஆனாலும் உரைநடைக்கான இலக்கணம் கூறும் நூல்கள் குறைவாகவே உள்ளன. வசனம் வந்த வழி (கு.அழகிரிசாமி), இக்கால எழுத்துத் தமிழ் (செ.வை. சண்முகம்), இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் உரைநடை (சு. சக்திவேல்), அயல்நாட்டவர்க்குத் தமிழ் கருத்துப் பரிமாற்ற இலக்கணம் (ஆ. கார்த்திகேயன்), சொல்லாக்கம் (இ.மறைமலை) முதலான நூல்கள் உரைநடை இலக்கணத்தைப் பதிவு செய்கின்றன. ஆனால் இவை போதுமானவை அல்ல. எம்.ஏ. நுஃமானின் அடிப்படைத் தமிழ் இலக்கணம் இந்த வகையில் ஒரு நல்ல முயற்சி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கல்வி வளர்ச்சியும் பத்திரிகைகளின் வளர்ச்சியும் எழுத்து மொழியைப் பரவலாக்கம் செய்தன. எழுதுவோர் எண்ணிக்கை பிழைகளையும் சேர்த்து அதிகரித்தது. எனவே, பிழைகளைக் களையும் நோக்கில் அ.கி. பரந்தாமனாரின் நல்ல தமிழ் எழுத வேண்டுமா?, மா. நன்னனின் தவறின்றித் தமிழ் எழுதுவோம், தமிழண்ணலின் வளர்தமிழ்:உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் முதலான நூல்கள் தோன்றின. சொல்வழக்குக் கையேடு, தமிழ்நடைக் கையேடு, மயங்கொலிச் சொற்பொருள் அகரமுதலி (ஹேமலதா), பயன்பாட்டுத் தமிழ் (அரங்க ராமலிங்கம், ஒப்பிலா மதிவாணன்), தமிழில் நாமும் தவறில்லாமல் எழுதலாம் (பொற்கோ), மொழித்திறம் (மகுடேசுவரன்) போன்றவை தற்காலத் தமிழ்நடையின் பிழைகளைச் சரிசெய்யும் நோக்கில் எழுந்த கைநூல்கள். இவை முழுமையான இலக்கண நூல்கள் அல்ல.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>கணித்தமிழ்</b></div>
<div style="text-align: justify;">
<b></b><br />
காலத்திற்கு ஏற்ற வகையில் பயன்பாட்டுத்தமிழ் இலக்கண நூல்கள் எழுதப்படவேண்டியுள்ளன. தமிழும் கணிமையும் (இராம.கி.), கணினித் தமிழ் (இல.சுந்தரம்), தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள் (துரை. மணிகண்டன், த. வானதி), கம்ப்யூட்டராலஜி (காம்கேர் கே. புவனேஸ்வரி) போன்ற நூல்களும் சில கருத்தரங்கக் கட்டுரைகளும் கணித்தமிழ் பயன்பாடு குறித்து வெளிவந்துள்ளன. கணினித் தொழில்நுட்பவியலாளர்கள், பேராசிரியர்கள் ஆங்காங்கே தனிப்பட்ட முறையில் செய்துள்ள இத்தகைய முயற்சிகள் தவிர கணினிப் பயன்பாடு பரவலாகியும் அதற்கேற்ற இலக்கண நூல்கள் முழுமையாய் இல்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கையால் எழுதினால் அப்படியே பதிவாகவும் எழுதப்பட்ட நூல்களைக் கணினிக் குரலால் கேட்கவும் படிக்கவும் மொழிவழித் தொழில்நுட்பம் வந்துள்ளது. பேசினால் அப்படியே எழுத்தாக, சொல்லாகப் பதிவாகும் தொழில்நுட்ப வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. எனவே, மொழி வளர்ச்சியின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலான புதிய தடத்தில் மரபிலக்கணங்களை உள்வாங்கி, காலத்திற்கேற்ப இலக்கண நூல் எழுதப்பட வேண்டியுள்ளது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>இருக்கின்ற தமிழ்</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
இன்றைய கதைக்கு, கவிதைக்கு, உரைநடைக்கு, அலைபேசி மொழிக்கு, அயல்மொழி உள்ளீடுகளுக்கு எந்த இலக்கண நியாயமும் செய்யாமல் நல்ல நூல் என்பதற்காக நன்னூலையே இன்னும் சர்வரோக நிவாரணியாகச் சந்திக்கு இழுக்கிறோம். நவீன வடிவத்தில் எது வந்தாலும் அதையும் ஏற்கனவே உள்ள இலக்கணப் போதாமைக்குள் அடக்கிக்காட்டி, அது இருக்கின்றது; இது இருக்கின்றது; எனவே, எல்லாம் எம்மிடம் இருக்கின்றது எனப் பிறரை வாயடைக்கச் செய்து தற்காலிகமாக நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்கிறோம். எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் புதிய பரிமாணங்களுக்குத் தமிழ்மொழி தயாராகவே இருக்கின்றது. நாம் தயாரா? என்பதுதான் நம்மைக் கழிவிரக்கம் கொள்ள வைக்கும் கேள்வி.<br />
<br /></div>
<div style="text-align: right;">
<b>விகடன் இயர்புக் 2018</b></div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-33401987068578051322017-03-25T19:05:00.002+05:302017-03-25T19:15:48.520+05:30உலகக் கவிதைகள் தினம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzz_R88ZTAcwax4NGGCET32ibtg5MQbCbnGcJqBMCx-xjM2zeOHBSqISJYgU95BoUwA1zsRCvUAWmNOyCAOJ4wsXgQ4AgrZaC7BYuplYym3JE5zVzGoicqMi-50Q-JCrbqVMyJiWf5-IzI/s1600/20170319_095217-1-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="154" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzz_R88ZTAcwax4NGGCET32ibtg5MQbCbnGcJqBMCx-xjM2zeOHBSqISJYgU95BoUwA1zsRCvUAWmNOyCAOJ4wsXgQ4AgrZaC7BYuplYym3JE5zVzGoicqMi-50Q-JCrbqVMyJiWf5-IzI/s320/20170319_095217-1-1.jpg" width="320" /></a></div>
குறுகுறுக்கும் கருவிழி நிறையும்<br />
தன்னிழல் தின்ன முயன்று<br />
அலகு வலி தாளாமல் மருண்டு<br />
கலங்கி நிற்கிறது குருவி<br />
நினைவோடை நெடுவழியே<br />
உலக ஆடியில் தெறிக்கும்<br />
தன் மாயபிம்பம் வெல்ல<br />
திக்கற்று<br />
இடருறும் மானிடப் பறவை<br />
<br />
குருவிகள் தின இரவின் மடியில் புலரும் கவிதைகள் தின வாழ்த்துக்கள்(21.03.2017).</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-39083512503050040512017-02-27T22:20:00.002+05:302017-02-27T22:39:54.311+05:30வல்லிக்கண்ணன் கடிதங்கள் 16 <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வல்லிக்கண்ணன் <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> சென்னை 27-2-2002</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்பு மிக்க ......, வணக்கம். </div>
<div style="text-align: justify;">
உங்கள் 16-2-2002 கடிதம் 20ஆம் தேதி வந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சலட்டை வரவேயில்லை.</div>
<div style="text-align: justify;">
உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சோதனைகள், மாறுதல், உங்கள் முயற்சிகள், நம்பிக்கை பற்றி அறிந்தேன். வெற்றி கிடைக்கட்டும். வளர்ச்சி பெற்று முன்னேறுவதற்கு காலம் துணைபுரியட்டும். வாழ்த்துகள். </div>
<div style="text-align: justify;">
<br />
<a name='more'></a> விண்ணப்பத்தில் என் பெயரை ‘ரெபரன்சுக்காக’ குறிப்பிட்டிருப்பது சரியே. தகவல் கேட்டு வந்தால், எழுதி அனுப்புவேன்.</div>
<div style="text-align: justify;">
நீங்கள் வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்ததை அறிய மகிழ்ச்சி. கவிதாசரண், பத்திரிகை நடத்த, பண உதவி கேட்டு அறிக்கை விட்டிருந்ததை சிற்றிதழ்களில் பார்த்தேன். எதிர்பார்க்கிற அளவுக்கு பணம் சேராவிட்டாலும் ஏதோ கொஞ்சம் வரக்கூடும். </div>
<div style="text-align: justify;">
நான் நலம். அண்ணியும் பிள்ளைகளும் நலமாக இருக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
புதுமைப்பித்தன் பதிப்பகத்தின் துணையான சந்தியா பதிப்பகம் (இளையபாரதி தொடர்பு உள்ளது) எனது பழங்கால மொழிபெயர்ப்பு நூல்களை புதுசாக, அழகாக வெளியிட்டிருக்கிறார்கள், இம்மாதம்.</div>
<div style="text-align: justify;">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ8pnc0MxeJC6A5yCftBzFcCnfyV5tsvQFKoe_TZczfJBMwgeB9cYgN8mm06fxGi0YG5606tjYYz9pExh51LTUFg2wAHNgl9msjVeKBAEdpe9bOUXhyphenhyphens6y-Jm3oJWesVFWOKk2d1klFxFE/s1600/Thathavum+Peranum_0000.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ8pnc0MxeJC6A5yCftBzFcCnfyV5tsvQFKoe_TZczfJBMwgeB9cYgN8mm06fxGi0YG5606tjYYz9pExh51LTUFg2wAHNgl9msjVeKBAEdpe9bOUXhyphenhyphens6y-Jm3oJWesVFWOKk2d1klFxFE/s320/Thathavum+Peranum_0000.jpg" width="244" /></a></div>
கார்க்கி கதைகள், கார்க்கி கட்டுரைகள் எனும் இரண்டு புத்தகங்கள்- 1950ல் திருநெல்வேலி, நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ் பிரசுரித்தவை. ராபர்ட் ரூ ஆர்க் எழுதிய ‘தாத்தாவும் பேரனும்’ 1960ல் சென்னை பேர்ள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டது. இம் மூன்றும் வெளிவந்திருக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
1952ல் ‘செவ்வானம்’ என்ற நாவல் – கோரநாதன் எழுதியது – துறையூர் எரிமலைப் பதிப்பகம் வெளியீடு ஆக வந்தது. அது இப்போது வல்லிக்கண்ணன் பெயரோடு, பத்மா பதிப்பகம் வெளியீடு ஆக வந்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
1974ல் ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்த ‘கல்பனா’வில் ‘ஒரு வீட்டின் கதை’ என்ற நாவல் வெளியாயிற்று. அது இப்போது, இன்னும் இரண்டு குறு நாவல்களுடன், புத்தகமாக (பூங்கொடி பதிப்பகம் வெளியீடு) வந்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
‘சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன்’ தொகுப்பு நூலை வெளியிட்ட ஞானியாரடிகள் மன்றம் அ.நா. பாலகிருஷ்ணன் இம் மாதம் ‘எழுத்து – சி.சு. செல்லப்பா’ என்ற தொகுப்பை (32 பக்கங்கள்) வெளியிட்டிருக்கிறார். தொகுப்பாசிரியர் - வ.க. நூறு ரூபாய் விலை வைக்க வேண்டிய நூலுக்கு 60 ரூபாய் தான் வைத்திருக்கிறார்.</div>
<div style="text-align: justify;">
ஆகவே, சந்தோஷங்களுக்குக் குறைவில்லை!</div>
<div style="text-align: justify;">
அன்பு </div>
<div style="text-align: justify;">
வ.க. </div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-51093666273801252062016-09-04T12:26:00.001+05:302016-09-04T12:38:08.488+05:30வாயுறை வாழ்த்து<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
அண்மைக் காலத்தில் ஒருசில ஆசிரியர்களைப் பற்றி வெளிவரும் செய்திகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதையேதான் எல்லாரும் நினைக்கிறார்கள். ஒன்றும் அறியாத அப்பாவிகளைப் பற்றி அபாண்டமாகப் பழி சுமத்தியிருக்கிறார்களோ என உங்களைப் போலவே நினைக்கத்தான் எனக்கும் ஆசை. ஆனால், அவர்களைப் பற்றிய ஊடக முன்வைப்புகள் அவ்வளவு உவப்பானதாக இல்லை. சம்பவங்களால் நகரும் நாட்கள் சந்தன மரங்களையும் சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன.</div>
<div style="text-align: justify;">
</div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQ7_casoORFxNFx9j1OMoYyZW8C5SD7KFjVcZ5psafcNei8tHWtoojzB12DcbFHyJPufsZbDANV-7EpNZcu1PBebLoPYUYrmSFdVq7CmtL-HJIlgbmdhBB62A0L_-rrlkW3ptnbLz9QwO3/s1600/Tr.day.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQ7_casoORFxNFx9j1OMoYyZW8C5SD7KFjVcZ5psafcNei8tHWtoojzB12DcbFHyJPufsZbDANV-7EpNZcu1PBebLoPYUYrmSFdVq7CmtL-HJIlgbmdhBB62A0L_-rrlkW3ptnbLz9QwO3/s1600/Tr.day.jpg" /> </a></div>
<div style="text-align: justify;">
மாணவர் எண்ணிக்கையை அதிகரித்த ஆசிரியர், உள்ளூர் வளத்தைப் பயன்படுத்திப் பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்திய ஆசிரியர், கற்பித்தலில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆசிரியர், பொம்மலாட்டம் மூலம் பாடஞ்சொல்லும் ஆசிரியர், விரல்களை வைத்தே வாய்பாடு கற்பிக்கும் ஆசிரியை, குழந்தைத் தொழிலாளியாக இருந்து ஆசிரியராய் முன்னேறிய ஆசிரியை, தன் சொந்தப் பணத்தைக் குழந்தைகளுக்காகச் செலவிடும் ஆசிரியர், சனி ஞாயிறு விடுமுறைகள் பார்க்காமல் கற்பித்தலே தவமென்று கிடக்கும் ஆசிரியர் என இப்படி ஆசிரியப் பணிக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர்கள்தான் அதிகம். ஆனால் அவர்கள் பெறும் ஊடக முக்கியத்துவம் குறைவு. சொல்வாக்கு இல்லாதவர்கள்தான் செல்வாக்கைத் தேடி ஓடுவார்கள். நமக்கு அது தேவை இல்லை என்பது அவர்களது நிலைபாடு. </div>
<div style="text-align: justify;">
தெய்வங்களின் பாதத்தில் சூடம் கொளுத்திச் சாமி கும்பிடுவதுதான் வழக்கம். மாதா, பிதா, குரு தெய்வம் என்னும் வகையில் தெய்வமே குழந்தைகளின் பாதங்களில் சூடம் கொளுத்திச் சுட்டது கண்டு அனைவரும் அதிர்ந்து போனோம். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பதை அறியாத சாத்தான் ஏறிய தெய்வங்களைச் சகிப்பது எப்படி? அர்ப்பணிப்புடன் அன்புப் பணி செய்யும் ஆசிரியச் சமூகத்திற்கு ஏதோ திருஷ்டி பட்டுவிட்டது போல. சூடம் காட்டிச் சுற்றிப் போடுங்கள்.</div>
<div style="text-align: justify;">
தனிமனித ஒழுக்கம் பேணுவதே நமது ஆதார பலம். அதை இழக்க யாருக்கும் சம்மதம் இல்லை. இருப்பினும் பண்படுத்த வேண்டிய நேரத்தில் படிப்பும் பகுத்தறிவும் கண்ணுறங்கும்போது உள்ளிருக்கும் மிருகம் வேட்டைக்குக் கிளம்பிவிடுகிறது. அன்பும் அறனும் மிருகத்தைக் கொல்லச் சக்தியற்றுப் போகும்போது பெற்ற பட்டங்கள் பிணந்தின்னும் சாத்திரங்களாகின்றன. பொருட்களைக் கையாளும்போது உணர்வு ஒரு துருவத்தில்தான் செயல்படுகிறது. மனிதர்களைக் கையாளும்போது இருபுறமும் உணர்வு உறவாடுகிறது. தனது எல்லை எதுவென குழந்தைகளுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், ஆசிரியன் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். நாம் இன்னும் நம் உடல மிருகத்தின் இரைதான் என்றால் நம் படிப்பும் சிந்தனையும் சமூகத்தின் வேரழுகல் நோய்தானே.</div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoJja3iwqcVGdJSWHCTXIIX93KCumLdwBn8tysU_eIYpyzShQm_P1mmqw0rO3mSMG2NZUWjq00D4wEAB5wkgfS4ViS4NyceVD8E1yNPX0vHjGJ4t41MF4HjptgycihMW0zjR48gbPkA9N1/s1600/Trs+day.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoJja3iwqcVGdJSWHCTXIIX93KCumLdwBn8tysU_eIYpyzShQm_P1mmqw0rO3mSMG2NZUWjq00D4wEAB5wkgfS4ViS4NyceVD8E1yNPX0vHjGJ4t41MF4HjptgycihMW0zjR48gbPkA9N1/s320/Trs+day.jpg" width="320" /></a> நீங்கள் தவறு செய்தால் பதின்பருவ நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும். நீங்கள் காமம், வெகுளி, மயக்கம் கொள்வதால் உங்களுக்கு போதித்த ஆசிரியச் சான்றோர்களின் நாமம் கெடும். உங்கள் கேடும் பெருக்கமும் அன்பான ஆசிரியச் சமூகத்திற்கு அணி செய்யா. பணியால் நீங்கள் குழந்தைகள் வசமாகாதபோது பிணியன்றோ உங்கள் பீடுநடை? நீங்கள் வாலறிவன் என்றாலும் உங்களைக் கண்டதுமே குழந்தைகள் மனத்தில் கும்மிருட்டு சூழும் எனில் நீங்கள் கற்றதனால் ஆய பயனென்கொல்? அவர்கள் உங்கள் நற்றாள் தொழாஅர். உங்களை வானுறையும் தெய்வத்துள் வையார். </div>
<div style="text-align: justify;">
எங்கோ ஓரிருவர் தன்னிலை கடப்பதால் ஒட்டுமொத்த ஆசிரியச் சமூகமும் பழிச்சொல்லுக்கு ஆளாகிறது. இந்நிலை தொடர நமக்கு உடன்பாடில்லை. ஆசிரியச் சமூகத்தின்மீது படியும் கறை துடைத்தெறியப்பட வேண்டும். நடுநிலைக் கரைசலாக இருக்க வேண்டிய உங்களின் வேதிச் சமநிலை குலைந்ததால் ஏற்பட்ட இடமாறு தோற்றப் பிழைகள் சரிசெய்யப்பட வேண்டும். உங்கள் பண்பாட்டு இடைவெளிகள் நீங்கள் பெற்றுள்ள அறிவால், பயிற்சியால் நிரப்பப்பட வேண்டும். நீங்கள் குடல்வாலோ பித்தப்பையோ அல்ல; மனித சாரத்தின் நாடி நரம்புகள். நீங்கள் எதைச் சுவாசித்து வாசித்துக் கைமாற்றித் தருகிறீர்களோ அதையே சமூகத் தமனிகள் பிறருக்குக் கடத்துகின்றன. </div>
<div style="text-align: justify;">
ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் பிரிவு விருந்தின் காலைக் குதூகலம் மாலையில் கனத்த மௌனமாய்க் கவியுமே. அது ஏன் இப்போது பெரும்பாலும் இல்லை? ஆசிரியர் அறைகளுக்குள் ஏற்படும் விரிசல்களே மாணவ மனங்களைப் பிளவுபடச் செய்கின்றன. குழு மனப்பான்மை பூசல்களையும் வீண் விவாதம் அக்கப்போர்களையும் உண்டாக்கும். கற்றதோ கையளவு. மலையளவு தலைக்கனத்தின் மமதை எதற்கு? நீங்கள் ஆசிரியர் வருகைப் பதிவேட்டின் எத்தனையாவது இடத்தில் இருந்தாலும் சரி. குரு பார்க்கக் கோடி புண்ணியம் என்பது உங்களுக்கும் சேர்த்துத்தான். அமாவாசையில் நடந்த குருபெயர்ச்சியின் அழுக்குகள் ஆடிப் பெருக்கில் அடித்துக்கொண்டு போகட்டும். </div>
<div style="text-align: justify;">
குழந்தைகள் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவைகள் அல்ல. அவர்கள் படிப்பில் வேண்டுமானால் பின்தங்கியிருக்கலாம். ஆனால் நம் ஒவ்வொருவரின் அசைவையும் துல்லியமாகக் கணிக்கும் இயற்பியல் தராசுகள் அவர்கள்; நம் ஊடாட்டங்களை உள்வாங்கிப் பதிவு செய்யும் கண்காணிப்புக் கேமராக்கள் அவர்கள். தெரியாததை எக்ஸ் என்க என வைத்துக் கொள்வதுபோல அவர்கள் ஆசிரியர் உடனிருந்து குறைந்த பட்சம் ஓராண்டு கற்க வேண்டும் என வைத்துக்கொள்வோம். அப்படியொரு நிலை வந்தால் நம்மில் எத்தனை பேரின் வாழ்க்கை அவர்களுக்குத் திறந்த புத்தகமாக வாசிக்கக் கிடைக்கும்? </div>
<div style="text-align: justify;">
மலர் வாய்பாடு மட்டும் சொல்லித் தந்து பயனில்லை. குழந்தைகள் மனிதராய் மலரும் வாய்பாட்டையும் சொல்லித் தந்தாக வேண்டும். உடல், உறவு, சமூகம், பொருளியல் எனப் பல சிக்கல்களோடு போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை ஏதோ பகைநாட்டு மன்னர்களாய்ப் பாவித்து சரிக்குச் சரியாக நின்று போரிட்டுக்கொண்டிருக்கிறோம். உங்கள் அறிவுக்கும் வயதுக்கும் எள்ளளவும் இணையானவர் இல்லை அவர்கள். அவர்களிடம் தோற்றுப் போவதில்தான் உங்கள் வெற்றி அடங்கியிருக்கிறது. மன்னிப்புதான் மாபெரும் தண்டனை. அந்த அரிய குணம் வற்றாத சுனையாய், வலிபோக்கும் நீரூற்றாய்ப் பொங்கட்டும்.</div>
<div style="text-align: justify;">
குழந்தைகளின் நடைக்கும் பாவனைக்கும் முதல் நாயகன் / நாயகி நீங்கள்தான். நீங்கள் இல்லாத வேளையில் அவர்கள் அதிகம் விளையாடிப் பார்ப்பது டீச்சர் விளையாட்டைத்தான். உண்மையான ஆசிரியத்துவம் உள்ளவர் என்றால் அந்தச் சேட்டையை நீங்கள் ரசிக்காமல் இருக்கமாட்டீர்கள். உங்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களுக்காக குழந்தைகளின் இயற்பெயரை விடுத்து ஏதேதோ பெயர்வைத்துப் பரிகசிக்காதீர்கள். உங்கள் ஆசிரியர்களுக்கு நீங்கள் வைக்காத பெயர்களா என்ன? பட்டப் பெயர்களில் உள்ள பண்புப் பெயர்களையும் தொழிற்பெயர்களையும் வினையாலணையும் பெயர்களையும் எடுத்துக்காட்டி சுட்டிக்குழந்தைகளின் மனவானில் விண்மீனாய்ச் சிறகடிப்போம். </div>
<div style="text-align: justify;">
எங்கள் ஆசிரியருக்குத் தெரியாதது எதுவும் இல்லை என்பது அவர்களின் அசாத்ய நம்பிக்கை. உங்களிடம் சந்தேகம் கேட்டுத் தெளிவுபெறும் குழந்தைகள் அந்த இறுமாப்புடன்தான் வளைய வருகின்றன. உங்களின் ஒளிவிலகல் அவர்களின் மெய்பிம்பங்களை மாயபிம்பங்களாய்ச் சிதறடித்துவிடக் கூடாது. தகு பின்னங்களாகவும் தகா பின்னங்களாகவும் வந்து சேரும் அவர்களை முழுக்கள் ஆக்குவதே ஆசிரிய மகிமை. வெட்டுக் கணங்களை விட்டொழித்து வெற்றுக் கணங்களைப் பொறுத்தருளி சேர்ப்புக் கணங்களுக்கு வந்தனை செய்வோம்.</div>
<div style="text-align: justify;">
பதினெட்டு வயதுக்குக் குறைந்த கோடிக்கணக்கான பள்ளி வயதுக் குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனர் என்றால் அதற்குக் காரணம் ஆசிரியர்களாகிய நீங்கள்தான். முகமற்ற, குரலற்ற குழந்தைகளின் முகவரி நீங்களே. அப்பா அம்மாக்கள் சொல்லும் உண்மையை விட நீங்கள் வாய்மையிடத்துச் சொல்லும் பொய்மையையே அதிகம் நம்புகின்றன குழந்தைகள். நீங்கள் வரையும் அதிபரவளையங்களில் சிக்காமல் அநாயாசமாய் எக்ஸ் அச்சில் ஏறி ஒய் அச்சுக்குத் தாவும் அவர்களது காலக் கோடுகளின் வரலாற்றுத் திருப்பங்களைத் தீர்மானிப்பது நீங்கள் அல்லவா? </div>
<div style="text-align: justify;">
மூப்பும் பிணியும் உற்று நலிவெய்தும் பிறரைக் காட்டிலும் பொலிவும் புத்துணர்வும் உள்ளவராக நாம் இருப்பதற்குக் காரணம் நம்மைச் சுற்றிலும் உள்ள மழலை மலர்கள்தான். ஆண்டுதோறும் நம் வகுப்பறைத் தோட்டத்தில் பறந்து திரியும் அந்தப் பூஞ்சிட்டுகளின் குறுகுறுப்பும் குதூகலமும் நம்மைத் தொற்றிக்கொள்ளும். நம் வாழ்நாள் முழுக்கக் கூட வரும். பொதுவெளியில் உங்களுக்குக் கிடைத்த கௌரவத்திற்காக பிள்ளைகளின் கைதட்டலில் அரங்கமே அதிருமே அதுதான் உங்களின் அழியாத சாசனம். </div>
<div style="text-align: justify;">
நீங்கள் பணியிட மாறுதல் / பணி நிறைவு பெற்றுச் செல்வதைக் கேள்விப்பட்டு எத்தனை குழந்தைகளின் விழிகளில் ஈரம் கசிந்திருக்கும்? எங்களை விட்டுப் போகப்போறீங்களா டீச்சர் என எத்தனை மழலைகளின் ஏக்கப் பெருமூச்சில் உங்கள் குரல் உடைந்து அழுதிருக்கும்? நீங்களும் போய்ட்டா இனி எங்களுக்கு யார் இருக்கா? நீங்க போகாம இருக்க முடியாதா சார் எனக் கேட்கும் அந்தப் பிஞ்சுகளின் அப்பாவித்தனமான கேள்வி உங்களை உலுக்கவில்லையா? இந்தச் சவ்வூடு பரவல் நம் காலம்வரை கூட வருமே.</div>
<div style="text-align: justify;">
தமக்கென முயலாது பிறர்க்கென முயலும் உங்கள் இயக்குவிசைதான் கைபிசைய வரும் மழலையைக் கைகூப்பும் மாமணியாய் உச்சிக் கோணத்திற்கு உயர்த்துகிறது. உங்கள் அட்சரேகை தீர்க்கரேகைத் துருவங்களின் நிலப்படம்தான் குழந்தைகளின் ஆயுள்ரேகையைத் தீர்மானிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் உங்கள் மீதான மதிப்பகம் வீச்சகமாக மாறுவதில் யாருக்கும் மகிழ்ச்சி இல்லை. கல்விக்கும் செல்வத்துக்கும் இடையே நடக்கும் போர் நம்மைக் காவுகொண்டுவிடக் கூடாது. உலகப் புகழ்பெற்ற தலைவர்களும் அறிஞர்களும் தங்கள் பணிநிறைவுக்குப் பின்னர் ஆற்ற விரும்பும் பணி ஆசிரியப் பணிதான்.</div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifnZOZrT-mQvYctQ1PoR4MJ3v0pIXHEcTZ00yfgqVmaAWY6uENFk-Ztlr96EK2Ork1HyXLxKSv1BFpwqI0VVuAW0uvxu-Ejc2oaLh0OYamBgVuN1tCZel-HT-79tSRn0BeW_54YVRy_URZ/s1600/Trs.Day.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="203" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifnZOZrT-mQvYctQ1PoR4MJ3v0pIXHEcTZ00yfgqVmaAWY6uENFk-Ztlr96EK2Ork1HyXLxKSv1BFpwqI0VVuAW0uvxu-Ejc2oaLh0OYamBgVuN1tCZel-HT-79tSRn0BeW_54YVRy_URZ/s320/Trs.Day.jpg" width="320" /></a> அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் முதலியன கைவிட்டுக் கொள்வோர் கொள்வகை அறிந்து மனம் கொள்ள ஒழுக்கமுடன் கல்வி ஒளிச்சேர்க்கை நடந்தால் நிறைகுடங்கள் உங்களுக்குப் பொல்லாங்கு இல்லை; நீணிலத்தில் நீங்கள் வெல்லாததில்லை. எப்போதோ எழுதிய ஆத்திசூடியை இன்னும் எழுத்தறியாத மழலைகளுக்காகச் சொல்லிச்சொல்லி நல்வழிப்படுத்தும் அவ்வையின் அவ்வை ஒவ்வொரு செப்டம்பர் ஐந்தாம் தேதியும் நம் சிந்தையில் ஓதும் மந்திரம் இதுதான்: எவ்வழி நல்லவர் எம் ஆசிரியர், அவ்வழி நல்லை வாழிய நிலனே.</div>
<div style="text-align: justify;">
நன்றி: <b>காக்கைச் சிறகினிலே</b> செப்.2016</div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-35524788774093965872016-08-06T16:12:00.000+05:302016-08-06T16:21:12.411+05:30இழிவு சிறப்பு உம்மை <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் மேற்கொண்டு படிக்க ஆலோசனை சொல்லவும் வழிகாட்டவும் இன்று எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆலோசனை சொல்வதையும் வழிகாட்டுதலையும் கூட வருவாய் ஈட்டும் ஒரு தொழிலாகச் செய்கிறார்கள். சில கல்லூரிகளில் ஹவுஸ்ஃபுல் போர்டு வைத்து விரட்டியடிக்கும் அதே வேளையில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்குப் பிள்ளைகளைப் பிடித்து வந்து சேர்ப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதாகவும் விகிதாச்சார அடிப்படையில் கட்டண விலக்கு அளிப்பதாகவும் சொல்லப்படுகிறது. </div>
<div style="text-align: justify;">
<a name='more'></a> இத்தனைக்கும் உயர்கல்வி வழங்கும் பல நிறுவனங்களின் தரமோ பள்ளிகளுக்கு மூத்தானாய் உள்ளது; நுழைவுத் தேர்வு, மைனஸ் மார்க், அது இது என்று அவர்கள் மதிப்பீடு செய்வதெல்லாம் ஒருவரின் திறனை மதிப்பீடு செய்வதாய் இல்லை. இதற்கு மாற்றைத் தேடும் முயற்சியும் வேலைக்கேற்ற படிப்பைத் தேடும் முயற்சியும் கடைசியில் படிப்புக்கு ஏற்ற வேலை தேடும் முயற்சியின் தோல்வியில் கொண்டுபோய் விடுகின்றன.</div>
<div style="text-align: justify;">
+2 முடித்ததும் பொறியியலுக்கு விண்ணப்பித்துவிட்டு வேளாண் கல்லூரிக்கும் விண்ணப்பம் வரவழைத்திருந்தேன். விவசாயிகளின் பிள்ளைகளுக்கான முன்னுரிமை பெற கரூர் துணை ஆட்சியரிடம் சான்று பெற வேண்டும். கிராம நிர்வாக அலுவலருக்கு அடுத்து வருவாய் ஆய்வாளரிடம் ஒப்பம் பெற வெள்ளியணைக்கு சைக்கிள் ஓட்டி ஓட்டி டயர் தேய்ந்ததுதான் மிச்சம். ஆளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அவர் இருக்கும்போது நான் போகவில்லையா அல்லது நான் போகும்போது அவர் இருப்பதில்லையா என்பது என் அலைக்கழிப்புக்கே வெளிச்சம். </div>
<div style="text-align: justify;">
விண்ணப்பம் அனுப்ப ஒரே ஒரு நாள்தான் இருந்தது. ஆய்வாளரை வீட்டில் போய்ச் சந்தித்து விடலாம் எனக் காலை ஆறேழு மணிக்கெல்லாம் பசுபதிபாளையத்தில் இருந்த வீட்டிற்குச் சென்றேன். அவர் வெள்ளியணை சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். பசுபதிபாளையத்திலிருந்து வெள்ளியணைக்கு அப்போதெல்லாம் நேரடி பஸ் வசதி கிடையாது. கரூர் போய் பஸ் ஏறி வெள்ளியணை வந்தேன். இப்போதுதான் வீட்டிற்குச் செல்வதாகச் சொன்னார்கள். திரும்பவும் வீட்டிற்குப் போனேன். இன்னும் வரவில்லை என்றார்கள். ஒரு டீயும் பன்னும் தான் காலை உணவு. காத்திருந்து காத்திருந்து கண்கள் எரிந்தன. மீண்டும் வெள்ளியணை போய்ப் பார்க்கலாம் என நினைத்தேன். அப்பா கொடுத்திருந்த காசு குறைவாக இருந்தது. பசுபதிபாளையத்திலிருந்து கரூருக்கு ஐந்து கிமீ நடந்தே சென்று வெள்ளியணைக்குப் போனேன். அங்கு அவர் வரவே இல்லை. </div>
<div style="text-align: justify;">
கரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்றால் அங்கு வந்தாலும் வருவார்; பார்க்கலாம் என ஒருவர் சொன்னார். காசு வேறு குறைந்து கொண்டே வந்தது. கரூர் அலுவலகம் வந்தேன். நண்பகல் ஆகியிருந்தது. மிகவும் சோர்வாக இருந்தது. சாப்பாடு சாப்பிட்டால் திரும்ப ஊர் போகக் காசு பத்தாது. கிள்ளிய பசிவயிற்றுத் தீயணைக்க அங்கிருந்த பைப்பில் தண்ணீர் பிடித்துக் குடித்தேன். மறுபடியும் டீயும் பன்னும். மணி நான்கைத் தாண்டிக் கொண்டிருந்தது. ஆய்வாளரைக் காணவே இல்லை. </div>
<div style="text-align: justify;">
அலுவலகம் பரபரப்பானது. சப்கலெக்டர்/டெபுடி கலெக்டர் வந்துவிட்டதாகச் சொன்னார்கள். என் பொறுமை அலுவலக நடைமுறையை மீறியது. கையில் விண்ணப்பத்துடன் சடாரென்று அவரது அறைக்குள் நுழைந்தேன். விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டேன். அழாமல் சொல்லுமாறு தேற்றினார். விஷயத்தைச் சொன்னேன். விண்ணப்பத்தை வாங்கிக் கையொப்பம் இட்டு அவரது உதவியாளரை அழைத்து சீல் வைத்துக் கொடுக்குமாறு கூறினார். பிடுங்காத குறையாக தலைமை அஞ்சலகத்திற்கு ஓடினேன். ஐந்தரை வாக்கில் விண்ணப்பத்தை அனுப்பிவிட்டு வீடு வந்ததும்தான் மூச்சே வந்தது. முகம் கொடுக்காத ஆய்வாளரும் முகம் பார்க்க மறந்துபோன துணை ஆட்சியரின் நடைமுறை எதார்த்தமும் நினைவுக்குள் வந்து வந்து மறைந்தன. அவ்வளவு சிரமப்பட்டு விண்ணப்பித்த வேளாண்மைப் படிப்பில் சேர அழைப்பு வரவில்லை. கடைசி நாளில் அனுப்பியதால் நிராகரிக்கப்பட்டதோ என்னவோ. இருந்தாலும் அந்த சப்கலெக்டர் கிரியா ஊக்கியாய் எனக்குள் வாழ்கிறார்.</div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF5SnZyrfe2GY9eItV9E3vP56TU0NVYx7YLy3gAQlli3yTWD8wZk81ECemQbjTJDQiK883nWVoWleTuPhhCEJ6jM9GbgUwRyU8E14Z3JO16Q7xAiQx9BNpRW6d8VEunq2vIBOaffau2838/s1600/IIT.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="137" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF5SnZyrfe2GY9eItV9E3vP56TU0NVYx7YLy3gAQlli3yTWD8wZk81ECemQbjTJDQiK883nWVoWleTuPhhCEJ6jM9GbgUwRyU8E14Z3JO16Q7xAiQx9BNpRW6d8VEunq2vIBOaffau2838/s200/IIT.jpg" width="200" /></a> என்னோடு படித்த வேலுசாமி என்ஜினீயரிங் சேர்ந்திருந்தான். எனக்குக் காத்திருப்போர் பட்டியலில்தான் அழைப்பு வந்தது. காளிமுத்து ஆசிரியரிடம் கொண்டுபோய்க் காட்டினோம். கலந்தாய்வுக்குச் சென்னை வரச்சொல்லியிருந்தார்கள். தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் காலியிடங்களுக்கு ஏற்பக் கூடுதலாக அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களுக்கு மதிப்பெண் மற்றும் இனவாரி சுழற்சி அடிப்படையில் கல்லூரி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அனைவருக்கும் சீட் கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல இயலாது என்றும் தெரிவித்தார். சுயநிதிக் கல்லூரி என்பதால் அரசுக் கல்லூரியை விடப் பல மடங்கு செலவாகும் என்றும் கூறினார். </div>
<div style="text-align: justify;">
வீட்டிற்கு வரும் வழியில் அப்பா என்னைத் தேற்றுகிற முயற்சியில் இறங்கினார். காகம் இடமிருந்து வலம் போனால் சென்னை போகலாம் என்று சகுனம் பார்த்தார். அப்படியே காகம் போனது. நான் மகிழ்ச்சியுற்றேன். அவர் முகம் காகம் ஆனது. வீட்டிற்கு வந்ததும் அடுத்த சகுனத்திற்குத் தாவினார். நடுவீட்டில் நிறைசொம்புத் தண்ணீரின் நடுவே விளக்கெண்ணெய் விடுவது எனவும் எண்ணெய் அப்படியே மையத்தில் நின்றால் சென்னைக்குப் போகலாம் எனவும் சொன்னார். எண்ணெய்ச் சொட்டு தண்ணீர்மேல் நிற்காமல் உருண்டு வழிந்தது. சகுனம் சரியில்லை என்றும் குடும்பத்திற்கு மூத்த மகன் என்பதால் உடன் பிறந்தவர்களுக்குச் செய்யவேண்டிய கடமை இருப்பதாகவும் என்னைக் கரைத்தார். </div>
<div style="text-align: justify;">
தண்ணீர் மேல் எப்படி எண்ணெய் நிற்கும்? என எனக்குத் தெரிந்த அறிவியல் கோட்பாடுகளையெல்லாம் எடுத்துக் கூறி வாதிட்டும் என்னைப் படித்த முட்டாள் ஆக்குவதிலேயே குறியாக இருந்தார். பாதிப் பித்தனாய்த் தூங்காமல் கொள்ளாமல் தவித்தேன். இதை நம்பி வேறெங்கும் விண்ணப்பிக்கவில்லை. பின்பு காளிமுத்து ஆசிரியர் ஒரு யோசனை கூறினார். மாயனூர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் பணி உடனே கிடைக்கும் என்றும் சொன்னார். அப்பாவுக்குப் பெருத்த நிம்மதி. இடம் கிடைத்து விட்டால் புதிய சைக்கிள் வாங்கித் தருவதாகவும் வீட்டிலிருந்தே போய்வரலாம் என்றும் புத்திமதி சொன்னார். </div>
<div style="text-align: justify;">
விண்ணப்பத்தை வேண்டா வெறுப்புடன் நிரப்பி அனுப்பினேன். ஒருமாதம் ஆயிற்று. ஒரு முன்னேற்றமும் காணோம். வீட்டில் இருக்கப் பிடிக்கவே இல்லை. ஜெகதாபியில் என்னுடன் படித்த சுரேஷ் (காளிமுத்து ஆசிரியரின் மகன்) தாந்தோனிமலை அரசு கலைக் கல்லூரியில் சேர்ந்திருந்தான். நானும் அங்கு சேர அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி சம்மதம் பெற்றேன். கல்லூரிக்குச் சென்று விண்ணப்பம் கேட்டபோது எல்லாம் முடிந்து விட்டதாகவும் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தனர். </div>
<div style="text-align: justify;">
அடைத்த கதவுகளை உடைத்துத் திறக்க நியாயம் இழந்த நான் நிர்க்கதியாய் நின்றேன். அப்போது உப்பிடமங்கலத்திலிருந்து வந்திருந்த ஒருவர் நான் அவ்வூரில் படித்ததைக் கேள்விப்பட்டு நேரடியாகக் கல்லூரி முதல்வர் குணசேகரனிடம் கூட்டிச் சென்று சீட் கேட்டார். முதலில் மறுத்த அவர் பின்பு இறங்கி வந்து நான் கேட்ட கணிதம் ஆங்கில வழிப் பிரிவில் இடமில்லை; தமிழ் வழியில் வேண்டுமானால் சேர்ந்து கொள்ளலாம் என்றார். வேறு வழியின்றிக் கணிதம் தமிழ்வழி முதலாமாண்டு மாணவனாய்ச் சேர்ந்தேன். வகுப்பிற்குச் சென்றபோது என்னைவிடச் சொற்ப மதிப்பெண்கள் பெற்ற ஏழுபேர் இருந்தார்கள். என்னை விடக் குறைந்த மதிப்பெண் பெற்ற பலர் ஆங்கில வழியில் சேர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு கவனிப்பே தனி. நாங்கள் தமிழ்வழி மாணவர்கள் என்பதால் இளக்காரம். ஓரிரு பேராசிரியர்கள் நோட்சை மட்டும் டிக்டேட் செய்துவிட்டுப் போய்விடுவார்கள். துறைத் தலைவரைத் தவிர வேறெந்தக் கணிதப் பேராசிரியப் புலியும் அங்கில்லை. எதெற்கெடுத்தாலும் மாணவர் போராட்டம் கல்லுரி ஸ்ட்ரைக் என்று பல நாட்கள் கல்லூரிக்குப் போய்விட்டு சும்மா திரும்பினோம். கல்லூரிச் சூழல் அறிவைக் கடத்தும் இடமாக இல்லை; வயதைக் கடத்தும் இடமாகவே தெரிந்தது.</div>
<div style="text-align: justify;">
ஒரே மாதம்தான் ஆகியிருக்கும். அக்டோபரில் மாயனூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சேர அழைப்பு வந்தது. பட்டப்படிப்பின் ஆழ நீளங்களைப் பார்ப்பதற்குள்ளாகவே பட்டயப் படிப்பில் சேர மாற்றுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தேன். புது சைக்கிள் வாங்கித்தரப்பட்டது. பொம்மனத்துப் பட்டியிலிருந்து பொரணி – கருப்பூர் – சங்கர மலை வழியாக மாயனூர் செல்லப் பதினைந்து கிலோ மீட்டருக்கு மேல் சைக்கிள் மிதிக்க வேண்டும். நாளும் நாளும் யுத்த காண்டம்தான். மாயனூரில் பெற்ற பயிற்சி குறித்துத் தனியாக எழுதினால்தான் தீரும். </div>
<div style="text-align: justify;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhH1dBmBGT2qYxlKexDaV8uyKPREC8j8VfyNwQ5L-VLrnf7Irt_aluo_8sU3d1k7CQeJBmtw4YSv0Dujss7p2IvzaRJKtNTYH59xbT_anWJk5E3hLdK8qYb5yMBTTc4eyN5Y7rp-hOxwNyf/s1600/labour-reforms-proposals-pile-up-as-unions-act-tough.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhH1dBmBGT2qYxlKexDaV8uyKPREC8j8VfyNwQ5L-VLrnf7Irt_aluo_8sU3d1k7CQeJBmtw4YSv0Dujss7p2IvzaRJKtNTYH59xbT_anWJk5E3hLdK8qYb5yMBTTc4eyN5Y7rp-hOxwNyf/s200/labour-reforms-proposals-pile-up-as-unions-act-tough.jpg" width="200" /></a></div>
<div style="text-align: justify;">
இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சிப் படிப்பு முடிந்து அம்மாவுக்குத் துணையாக விவசாய வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். உன்னாட்டம் ஆம்பிளைங்களப் போய்ப் பாரு… என்று தொடங்கும் அப்பாவின் வசவுகள் என் வயதில் வருமானம் ஈட்டும் பலரையும் சுட்டிக் காட்டி தண்டச்சோற்றுப் புராணத்தில் முடியும். அவர் வீட்டை விட்டு ஓடிப்போய் என் வயதில் பட்ட கஷ்ட நஷ்ட வனவாச சுய மகாபாரதங்களைச் சொல்மாறாமல் ஒப்பிப்பார். மேலும் அவரது அண்ணன் தம்பிகள் பண்ணையாட்களாக சொந்த பந்தங்களின் காடு தோட்டங்களிலேயே வேலை செய்து அவரது ஒரு வேலைக்கும் போகாத அப்பாவிற்கும் எதிர்பேச முடியாத அம்மாவிற்கும் சம்பாதித்துக் கொடுத்த ஊரடி ராமாயணங்களையும் காதுகளில் ஈயம் காய்ச்சி ஊற்றிப் பொன்னெழுத்துக்களால் அடிக்கடி பொறித்துக் கொண்டிருப்பார். </div>
<div style="text-align: justify;">
திருமலைநாதன்பட்டி தி.க. முருகனைத் தவிர எந்த மேதையையும் அவர் சந்தித்ததில்லை; தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் காளிமுத்து வாத்தியாரைத் தாண்டி எந்தப் படிப்பாளியோடும் பேச்சுவார்த்தை வைத்துக் கொண்டதில்லை; அவருக்குத் தெரிந்த ஏட்டு அண்ணாத்துரைக்கு அப்பால் எந்த அதிகாரியோடும் பழகியதில்லை. அதனால், அவனப் பாரு…, இவனப் பாரு… என அவர் காட்டிய முன்மாதிரிகள் எல்லாம் பெரும் செல்வத்துக்கு அதிபதிகளாகவும் திடீர்ப் பணக்காரர்களாகவுமே இருந்தார்கள். யார் யார் எவ்வளவு அசையும் சொத்து, அசையாச் சொத்து சேர்த்துள்ளனர் என ஆதாரங்களோடு முன்வைக்கும் அவர் முன்னால் எழுந்து போக முடியாமல் எனக்குள் முட்டும். </div>
<div style="text-align: justify;">
என்னோடு ஆசிரியப்பயிற்சி முடித்தவர்கள் பலர் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்திருந்தனர். மேல்படிப்புப் படிக்க வேண்டும் என்பது எனக்குத் தீராத ஆசை. அப்பாவின் முகத்தை நேருக்கு நேராகப் பார்ப்பதையே தவிர்த்து வந்த நான் ஒருநாள் அவர் நல்ல சுபாவத்தில் இருந்த சமயத்தில் மெதுவாகக் கெஞ்ச ஆரம்பித்தேன். இணக்கமான பதில் வரவில்லை. மூத்த மகன், குடும்பக் கடமை என்று வழக்கம்போல எதேதோ பேசினார். கடைசியில் இனி படிப்பு அவ்வளவுதான்; மேற்கொண்டு படிப்பதாக இருந்தால் நீயே சம்பாரிச்சுப் படிச்சுக்கோ என்று கைவிரித்துவிட்டார். என் தம்பி பத்தாம் வகுப்புப் படிக்க வேண்டும். பெரிய கழிவிரக்கம் என்னைத் தொற்றிக் கொண்டது. </div>
<div style="text-align: justify;">
இடையில் மாயனூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சென்றிருந்தேன். விரிவுரையாளர் நடராஜன் சாரைப் பார்த்தேன். அவர் அஞ்சல்வழிக் கல்வி மூலம் படிக்கலாம்; அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நடத்தும் படிப்பு மையங்கள் மூலம் சேரலாம் என்று வழிகாட்டினார். இடைநிலை ஆசிரியப் பயிற்சி முடித்துள்ளதால் தமிழ் பி.லிட். படித்தால் பதவி உயர்வுக்குப் பயன்படும் என்றும் சொன்னார். </div>
<div style="text-align: justify;">
என் இளைய மைத்துனர் தண்டபாணி கோவிலூருக்கு மேற்கில் உள்ள சாமாநாயக்கனூரில் பால் அரைக்கும் தொழில் செய்துவந்தார். அவ்வூர் விஜயகுமார் தன் தம்பியோடு சென்னையில் வட்டிக்கடையும் தவணை முறை எண்டர்பிரைசஸ் வியாபாரமும் செய்து வந்தார். அவர் தன் பங்குதாரர் ஜெயராமனிடம் இருந்து கடையைப் பிரித்துத் தனியாக நடத்தத் தொடங்கினார். அவருக்கு நம்பிக்கையான ஆள் தேவைப்பட்டது. </div>
<div style="text-align: justify;">
சொந்தக் காலில் நிற்கக் காலம் கனியாத வாலிப அபலைகளுக்குத் தந்தை சொல் மிக்க மந்திரம் ஏது? விஜயகுமார் நடத்திய ஃபைனான்ஸ் மற்றும் எண்டர்பிரைஸசில் சேர முடிவெடுத்தேன். என் மேல்படிப்புக்குத் தடை போடக்கூடாது; தேர்வு நாட்களில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்; இடையில் ஆசிரியப் பணி வந்துவிட்டால் விடுவிக்க வேண்டும் என நான் வைத்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சாப்பாடு போட்டு மாதம் 250 ரூபாய் சம்பளம் என முடிவாயிற்று. 1991இல் எனது ஒருநாள் சம்பளம் என் வயிறு கழுவியது போக ஏறத்தாழ எட்டு ரூபாய் முப்பது பைசா.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
திருவான்மியூர் சென்றேன். அங்கு இருவரோடு மூவர் ஆனேன். தவணை முறை வியாபாரத்தைத் தம்பியும் தண்டலை அண்ணனும் பார்த்துக் கொண்டனர். நான் இரண்டு பேரோடும் முறைவைத்துச் செல்ல வேண்டும். மழையானாலும் வெயிலானாலும் வசூலுக்குப் போவது நிற்காது. அம்பத்தூர், அடையாறு, ஆழ்வார்பேட்டை, கொட்டிவாக்கம், திருவான்மியூர், பெசண்ட்நகர், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் தண்டல் மற்றும் தவணை வசூல் இரண்டும் நடைபெற்று வந்தன. தண்டலுக்காக வாரம் ஒரு நாள் வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு பல்லாவரம் மற்றும் தண்டையார் பேட்டை வீதிகளிலும் ஊருக்குள்ளும் மதியம் வரை வசூல் செய்வோம். சிலருக்குப் பணம் அடைப்போம். </div>
<div style="text-align: justify;">
நாங்கள் போகும்போது சிலர் வீட்டில் இருக்க மாட்டார்கள். சிலர் இன்ன நேரம் வாருங்கள் என்பார்கள். சிலர் அடுத்த வாரம் தான் இந்த வாரம் இயலாது என்பார்கள். இரண்டாம் முறை போவது பெரும்பாலும் நான்தான். சென்னையில் எல்லா வீதிகளும் ஒன்று போலவே இருக்கும். எனது விதிக் குழப்பமும் வீதிக் குழப்பமும் தலை தூக்க பல நேரங்களில் வீடு மாறிப்போய் கதவைத் தட்டி அசடு வழிந்ததும் உண்டு. ஒருசிலர் தந்துவிடுவார்கள். ஒருசிலர் சொல்கிற கதையைக் கேட்டு மனம் கசியும். மிரட்டிப் பணம் கேட்க வாய் வராமல் வந்துவிடுவேன். விஜயகுமார் கடிந்துகொள்வார். வசூல் முடிந்து மதிய உணவிற்கு இரண்டுமணி வாக்கில் வீடு வந்து சேர்வோம். </div>
<div style="text-align: justify;">
ஒருசில நாட்கள் விஜயகுமாரின் தம்பி சமைக்கத் தொடங்கி இருப்பார். சிலநாட்கள் நாங்கள் வந்த பிறகுதான் காய்கறியே வாங்கப் போவார். நாங்கள் கழிப்பறை சுத்தம் செய்வது, காய்கறி நறுக்குவது, வெங்காயம் வெட்டுவது போன்ற சின்னச் சின்ன ஒத்தாசைகள் செய்வோம். ஒரே ஒரு சைக்கிள் இருந்தது. அதைத் துடைத்து வைப்போம். அதற்குள் தம்பி சமையலை முடித்திருப்பார். பசி ருசி அறியாது. உண்ட மயக்கம் தெளிந்து எழுந்தபின் மாலை உள்ளூர் வசூலுக்குக் கிளம்புவோம். உள்ளூரில் தின வசூலும் உண்டு, வார வசூலும் உண்டு. </div>
<div style="text-align: justify;">
அங்கு இருந்த பத்து மாதங்களில் இரண்டு முறை மட்டுமே ஊருக்கு வந்து சென்றதாக ஞாபகம். அதற்கான தொகை சம்பளத்தில் பிடித்துக் கொள்ளப்பட்டது. முதலாம் ஆண்டு படிப்புச் செலவுக்காக தேர்வுக்கட்டணமாக இரண்டுமாத சம்பளத்திற்கு மேல் கட்ட வேண்டி இருந்தது. கவிதாசரண், முகம், தெளிதமிழ் போன்ற ஒருசில சிற்றிதழ்களுக்கு சந்தாக் கட்டத் தொகை தேவைப்பட்டது. அப்பாவுக்கும் பேசியபடி ஓரளவு பணம் கொடுத்தாக வேண்டும். வசூல் பணத்தில் கை வைக்க முடியாது. நானோ வாத்தியாருக்குப் படித்தவன். ஒழுக்கத்தைச் சொல்லித் தர வேண்டியவன். நம்பிக்கையான ஆள் வேண்டும் என்றுதான் என்னைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள். அண்ணன் தம்பி இருவருக்கும் இடையில் சமாதானம் பேசும் நாட்டாமை வேறு.</div>
<div style="text-align: justify;">
வட்டிக் கடை, தவணைக் கடைகளில் நிப்புக் கணக்கு என்று ஒன்று உண்டு. இனிமேல் இந்தப் பணம் வராது எனக் கைவிடப்பட்ட காந்தி கணக்குகள் அவை. இடமாற்றம், ஆள் காணாமல் போதல், ஓடி ஒளிதல், நொடித்துப் போதல், மீச்சிறு தொகை என்பதால் நடையாய் நடந்து அலுத்துப்போய் கைவிடப்பட்டது… என்ற வகையில் அவை அமையும். இவற்றில் ஏதாவது ஒருவர் எப்பவாவது கண்ணில் தட்டுப்பட்டால் சும்மா கேட்டுவைப்போம் எனக் கேட்பது உண்டு. பெரும்பாலும் தரமாட்டார்கள். முன்பு சொன்ன கதையை விட இன்னொரு பெரிய கதையை ஆரம்பிப்பார்கள். அவை உண்மையாகக் கூட இருக்கலாம். அதிசயமாய் என் மேல் இரக்கப்பட்டு இப்போதைக்கு இவ்வளவுதான் இருக்கிறது எனப் பத்துப் பதினைந்து ரூபாய் சில்லறைகளாய்க் கொடுப்பதும் உண்டு. </div>
<div style="text-align: justify;">
அண்ணன் தம்பிகளோடு செல்லும் போது கடைக்கணக்கில் ஒப்படைத்து விடுவேன். தனியாக நான் மட்டும் செல்லும் நிகழ்வுகளில் அவற்றை நொறுக்குத் தீனிக்காகச் செலவிட்டு விடுவேன். பின்புதான் இப்படிக் கிடைக்கும் சில்லறைப் பணத்தைச் சிற்றிதழ்களுக்காகச் செலவிடுவது என முடிவு செய்தேன். ஊருக்குச் செல்லும்போது மணியார்டர் செய்துவிட்டு வந்துவிடுவேன். விஸ்டம், இந்தியா டுடே போன்றவற்றை எப்போதாவது கடைகளில் வாங்குவேன். மாடியில் தங்கியிருக்கும் கணேசன் கொடுத்ததாகப் பொய் சொல்லி விடுவேன். பொய்ம்மையும் வாய்மை இடத்த என வள்ளுவர் சொன்னதும் பிச்சை புகினும் கற்கை நன்றே என அவ்வை சொன்னதும் எனக்கும் பொருந்துமோ என்னவோ. </div>
<div style="text-align: justify;">
இப்படிச் செய்வது மிகப் பெரும் தவறு என என் தன்னெஞ்சு அவ்வப்போது சுடும். வெளியே தெரிந்தால் அவமானமாகப் போய்விடுமே என மனம் கொல்லும். அவர்களுக்குச் சமமாக முதலாளி ஆவதற்கோ வேறு வருமானம் ஈட்டிப் பணக்காரன் ஆவதற்கோ இப்படிச் செய்யவில்லை. எல்லாம் படிப்பின் மீதான தீராத மோகத்தால் நடந்தது எனச் சமாதானம் செய்து கொள்வேன். மனத்துக்கண் மாசிலன் ஆதலினால் அனைத்தறனும் என்னைக் காத்தன என்றே சொல்ல வேண்டும். இன்றைக்கு நினைத்தால் மனம் கூசுகிறது. என் சம்பளத்திலேயே செலவு செய்துவிட்டு இவ்வளவுதான் மீதம் என்று கொடுத்திருந்தால் என் அப்பா வேண்டாம் என்றா சொல்லியிருப்பார்? ஆம். சம்பாதிச்சு மிச்சம் வைக்கத் துப்பில்லாத பய என்று சொல்லினால் சுட்டிருப்பார். ஒருவகையில் அப்பாவின் பணத்தேவை என்னைக் களவாணி ஆக்கிற்று. கடைக்கண் வைத்த கலைவாணி என்னை மன்னித்துவிட்டாள்.</div>
<div style="text-align: justify;">
பி.லிட். முதலாம் ஆண்டுத் தேர்வை சென்னை பச்சையப்பன் கல்லூரித் தேர்வு மையத்தில் எழுதினேன். தேர்வுக்கு இடைப்பட்ட நாட்களில் வேலை இருந்தாலும் சொன்னபடியே விஜயகுமார் தேர்வு நாட்களில் வேலை கொடுக்கவில்லை. நான் அங்கு இருந்தவரை என்னைத் தன் தம்பியை விடவும் மேலாக கவனித்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். </div>
<div style="text-align: justify;">
சற்றேறக் குறைய பத்தாவது மாதத்தில் எனக்கு இடைநிலை ஆசிரியர் பணிக்கான நேர்காணல் வந்தது. உதவிபெறும் பள்ளியில் வேலை. ஊதியம் அரசாங்கம் கொடுக்கும். அழைக்கப்பட்ட ஐந்தாறு பேரில் மூன்று பேர் நேர்காணலில் கலந்துகொண்டதாக நினைவு. எங்கே என் படிப்புக்காகச் செய்த செலவு வீணாகப் போய்விடுமோ என பயந்துகொண்டிருந்தார் அப்பா. ஒருவாரத்தில் முடிவு தெரிந்தது. பணியில் வந்து சேரும்படி ஆணை வந்தது. ஆசிரியப்பணி கிடைத்ததற்காக என்னைவிடச் சந்தோசப்பட்ட ஒரே ஜீவன் என் அப்பா. காரணம், தொகுப்பூதியம்தான் என்றாலும் அவரது மகனுக்குச் சம்பளம் 800 ரூபாய். 250ஐ விட எண்ணூறு அதிகம் தானே. ஒவ்வொரு மாதமும் அவர் கையில் கொடுத்துவிட வேண்டும். 1992இல் என் வயிற்றுக்கும் சேர்த்து ஈயப்பட்டது ஒரு நாளைக்கு 25ரூபாய் 65 பைசா. பணத்தை என்னமோ செய்துகொள்; என் படிப்பை மட்டும் நிறுத்தக் கூடாது என்று நேருக்கு நேர் நின்று துணிந்து சொன்னேன் அப்போது. தெற்றெனத் தூற்றலும் பழியே; அப்பனுக்கு அற்பனாய் வாழ்தலும் பழியே. </div>
<div style="text-align: justify;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjid0Vf8G9g6D4Wb31dWatoOGQ8CYjJLhSEQTIv-iIvPc2Nu4A1mKWkOdpqi2B7a4audoSbpVz8zrZGp4xkz0d_G8yssDgJyXt1EAre7xwsmyTw2Oy4oMmXBfuzs4OCJUp2brkREJXSOOIS/s1600/child.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjid0Vf8G9g6D4Wb31dWatoOGQ8CYjJLhSEQTIv-iIvPc2Nu4A1mKWkOdpqi2B7a4audoSbpVz8zrZGp4xkz0d_G8yssDgJyXt1EAre7xwsmyTw2Oy4oMmXBfuzs4OCJUp2brkREJXSOOIS/s1600/child.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
அப்பாவின் அனுபவம் இளமையில் வறுமை. இது அவரது மகனுக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பொருளியலை நோக்கி அவர் என்னைத் துரத்தித் துரத்திப் பார்த்தார். நானோ என் மேற்படிப்பைத் தோற்கடிக்கச் செய்த முயற்சியாகவே அதைக் கருதினேன். அவர் சொத்துச் சேர்ப்பது குறித்துப் பேசப் பேச அது படிப்பின் மீதான என் பிடிவாதத்தை உக்கிரம் கொள்ள வைத்தது. பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றியவாறே அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தொலைதூரக் கல்விப் புலத்தில் இளங்கலை முடித்து முதுகலை படித்துக் கொண்டிருந்தேன். பணியாற்றிய பள்ளியில் முதல்நிலைத் தமிழாசிரியர் பணியிடம் காலியானது. பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பெற்ற நன்மதிப்பில் நடராஜன் சார் சொன்னது போலவே பதவி உயர்வு என்னைத் தேடி வந்தது. </div>
<div style="text-align: justify;">
உப்பிடமங்கலத்தில் எனக்குப் பின்னால் படித்த குப்புசாமி எங்கள் பக்கத்து ஊரான சேங்கல்காரர். அவர் கரூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் அன்னை இல்லத்தில்(தற்போதைய R.K. GUEST HOUSE) தங்கி பல கடைகளுக்குக் கணக்கு எழுதிக் கொண்டே முதுகலை படித்து வந்தார். மிகச் சிறிய அறை. கோடை வெய்யிலுக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். ஒரே ஒரு மின்விசிறிதான். அது இல்லாமல் முடியாதுதேர்வுக் காலத்தில் இரண்டு ஆண்டுகளும் அவரோடு தங்கி முதுகலைத் தேர்வு எழுத உதவினார். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பி.எட். படிக்க விண்ணப்பித்தேன். என்னுடைய நேரம் எனக்கு முன்னால் நின்றது. ஓர் ஆண்டுக் கல்வியாக இருந்த பி.எட். படிப்பு இரண்டு ஆண்டுகள் ஆனது. அதிக பட்சம் ஐநூறு இடங்கள் தான். நுழைவுத் தேர்வு வைத்தார்கள். அதில் தேர்வாகி பி.எட். படித்து முடித்தேன். </div>
<div style="text-align: justify;">
நண்பர் மாரியப்ப பிள்ளை மேல்நிலை வகுப்புகளுக்கு ஆங்கிலம் போதிக்க வந்து சேர்ந்தார். இருவரும் கல்லூரி/ பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் ஆவதற்கான தேசியத் தகுதித் தேர்வை எழுதினோம். ஒரே அமர்வில் தேர்ச்சி பெற்றோம். தொலை தூரக் கல்வியில் எம். எட். படிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. பின்பு சென்னைப் பல்கலைக் கழகத்தில் மட்டும் இரண்டாண்டுப் படிப்பாகப் படிக்க விண்ணப்பம் கோரப்பட்டது. மகிழ்ச்சியோடு விண்ணப்பித்தேன். தவிர்க்க முடியாத காரணங்களால் சேர்க்கை நடைபெறவில்லை என அனுப்பிய விண்ணப்பம் கட்டிய பணத்திற்கான காசோலையுடன் திரும்பி வந்தது.</div>
<div style="text-align: justify;">
தொழில்கல்வி / கல்லூரிப் படிப்புக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட, மனதளவில் நலிவடைந்த, கிராமப்புற மாணவனாகவே வலம் வந்தேன். அரசுப் பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணிக்கு வந்த பின்பு நாமக்கல்லில் பெருமாள் முருகன் அய்யாவை வழிகாட்டி ஆசிரியராகக் கொண்டு தொலைநிலை/ பகுதிநேரப் படிப்பில் சேர்ந்து எம்.ஃபில் மற்றும் பி.எச்.டி. படித்து முடித்தேன். பொறியியல் படித்து எஞ்ஜினீயர் ஆக முடியாத நான் ஏதோவொரு வகையில் டாக்டர் ஆகிவிட்டேன். தற்போது பலருக்கும் வழிகாட்டும் இடத்தில் நிறுத்தியிருக்கிறது என் உளத்திட்பம். தொழில்கல்வி படிக்காததற்காக வருத்தப்பட்ட என் மனக் குறளி இப்போது கிடைத்ததைப் பற்றிக் கொண்டு உச்சிபோய்த் தன்வால் பார்த்து பிரமிப்புக் கொள்கிறது.</div>
<div style="text-align: justify;">
உயர்கல்வி பெற அரசு உதவித்தொகை, கல்விக்கடன் என வாய்ப்புகள் இருப்பினும் சமூக பொருளாதார நெருக்கடிகள், பெற்றோரின் அறியாமை இன்னும் உயர்கல்வியைக் கட்டாய உடைமை ஆக்க முடியாமல் தடுக்கின்றன. பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களின் எண்ணிக்கைக்கும் உயர்கல்வி பயில வரும் பிள்ளைகளின் எண்ணிக்கைக்கும் நெடிய துயரார்ந்த இடைவெளிகள் இருக்கவே செய்கின்றன. இவர்களுக்கான ஒரே ஞானமார்க்கம் தொலைதூர/அஞ்சல்வழிக் கல்விதான். பேருக்குப் படிப்பவர்களும் ஊக்க ஊதிய உயர்வுக்காக மட்டுமே படிக்கிறவர்களும் இதன் தரத்தை பலவீனப்படுத்துகிறார்கள். பசியோடும் தாகத்தோடும் மறுக்கப்பட்ட வாய்ப்பை மீட்டெடுக்கும் பதற்றத்தோடும் படிக்கிறவர்கள் கல்லூரியில் நேரடியாகக் கற்றவரை விடவும் மேம்பட்ட திறனாளர்களாக இருக்கிறார்கள். </div>
<div style="text-align: justify;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVVgpX0FdsF5jsCuFwM8wVJGWx3a9kfwIXX0gcUFNPaGyolrZGt8UGJ1iQ1y90EXQmpdBz5veljFKN2KN5pWmLd6nMZX-Sq0RMjFR54mSn3cvYKHDb2SPr_zQWgdlPj5Hf0UMDSyXkbiks/s1600/child_1913176f.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="156" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVVgpX0FdsF5jsCuFwM8wVJGWx3a9kfwIXX0gcUFNPaGyolrZGt8UGJ1iQ1y90EXQmpdBz5veljFKN2KN5pWmLd6nMZX-Sq0RMjFR54mSn3cvYKHDb2SPr_zQWgdlPj5Hf0UMDSyXkbiks/s320/child_1913176f.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
பரந்து கெடும் உலகியற்றியானைத் தூற்றிப் பயனில்லை. கல்வியின் நன்மை கடலிற் பெரிது. யார் எங்கே எந்தப் படிப்பில் சேர்ந்திருந்தாலும் சரி. அதற்கான முழுத்திறனுடன் வெளிவர உற்சாகப்படுத்துங்கள். பாழும் வயிற்றுப் பசியடக்க கூலிக்கு உழைக்கும் நிலைமையா? வருத்தப்பட்டு பாரம் சுமப்பதை விட்டுவிட்டு அஞ்சல்வழிக் கல்வியிலாவது சேருங்கள். பிடி கிடைக்காத பாசக் கயிற்றுக்காக ஏங்காதீர்கள். அறியாமை மலைப் பாம்பின் வால் என்றாலும் ஆல விழுதின் கரமென்று பற்றி மேலேறி அதன் கோரப் பல்பிடுங்க வாருங்கள். இழந்த மான அவமானம் கல்வியால் ஈடேறும். ஞாலத்தின் மாணப் பெரிது கற்றதனால் அறிவூறும் ஆற்றல். மலையினும் மாணப் பெரிது மனத்திண்மை விரிவெய்தும் தோற்றம்.</div>
<div style="text-align: justify;">
நன்றி: <b>காக்கைச் சிறகினிலே</b> ஆகஸ்டு 2016.</div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-11142184078158952522016-06-04T10:57:00.002+05:302016-06-04T10:59:26.800+05:30கனவுக்குள் வரவேண்டும் கல்வி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புதிய கல்வியாண்டு தொடங்குகிறது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. தேர்ச்சி விகிதக் குறைபாடு / அதிகரிப்பு குறித்தும் மாநில / மாவட்ட அளவிலான இடங்கள் குறித்தும் அலசல்கள், ஆய்வுகள் நடக்கின்றன. எங்கு பார்த்தாலும் இது பற்றித்தான் பேச்சு. சுமார் இருபது லட்சம் குடும்பங்களின் அடிவயிற்றில் பற்றிக் கொண்டிருக்கும் ஒரே பெருநெருப்பு.</div>
<div style="text-align: justify;">
</div>
<a name='more'></a><div style="text-align: justify;">
தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்து என்ன படிப்பது என்பது குறித்துக் குழப்பமோ குழப்பம். தேர்ச்சி பெறத் தவறியவர்களுக்கோ எத்தனை பாடங்கள் உடனடித் தேர்வில் எழுதுவது என்கிற தெளிவற்ற தெளிவு. இந்த இரண்டிலும் சேராமல் தேர்வுக்கே வராத பிள்ளைகள் குறித்ததே எனது கலக்கம், கவலையெல்லாம்.</div>
<div style="text-align: justify;">
இந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் 45000 சொச்சம் பேருக்கு 1200 சொச்சம் பேர் தேர்வுக்கு வருகை தரவில்லை. எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இது ஏறத்தாழ இரண்டரை சதவீதத்திற்கு மேல் வருகிறது. பத்துப் பதினோரு லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ள மாநிலத்தில் இதையே உத்தேசமாகக் கொண்டால் ஏறத்தாழ 25000 பேர் கணக்காகிறது. மாணவியரை விட மாணவர்களின் வருகை இன்மையே அதிகம் எனத் தெரிகிறது. நம் காலத்தில் பல அப்பா அம்மாக்கள் சொன்னது போல இத்தனை பேரின் பெற்றோர்களுமா பள்ளிக்குப் போகக் கூடாது படிக்கக் கூடாது என்று சொல்லி இருப்பார்கள்? </div>
<div style="text-align: justify;">
இத்தனைக்கும் அரசு இக்கால கட்டத்தில் எத்தனையோ சலுகைகளை வழங்குகிறது. அதில் ஒருசில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கக் கூடும். ஆனாலும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும் பள்ளி செல்லாக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவும் அரசும் ஆசிரியர்களும் தன்னார்வலர்களும் எடுத்துவரும் முயற்சிகளைக் குறைத்து மதிப்பிட முடியாது. </div>
<div style="text-align: justify;">
அதே மாவட்டத்தில் ஈ.எஸ்.எல்.சி. எனப்படும் எட்டாம் வகுப்புத் தேர்வை எழுத விண்ணப்பித்தவர்கள் அதே எண்ணிக்கை சுமார் 1200 பேர். இதில் பெண்கள் நூற்றுக்கும் குறைவு. பல்வேறு வயதுப் பிரிவைச் சேர்ந்த இவர்கள் தம் பதவி உயர்வுக்காகவும் ஓட்டுநர் உரிமம் பெறுதல் போன்ற சட்டப்பூர்வ நெருக்குதலுக்காகவும் இத்தேர்வை எழுதுகிறார்கள். படிக்க வேண்டிய பருவத்தில் படிக்காமல் இடைப்பட்ட வயதில் தேர்வெழுதும் இவர்கள் ஒரே தடவையில் முடிப்பது அபூர்வம். பருவத்தே பயிர் செய்யாமல் விட்டுவிட்டு இப்போது புலம்பித் தவிக்கிறார்கள். துள்ளித் திரிகின்ற காலத்தில் இவர்களின் துடுக்கை அடக்கிப் பள்ளிக்கு வைத்திராத தந்தையாகிய பாதகர்களை இவர்கள் மன்னித்து விடுவதைத் தவிர வேறு வழியில்லை. </div>
<div style="text-align: justify;">
தன்னைப் பார்த்துப் பின்னைப் பார் என்பார்கள். சொல்வார் விவரங்களை விட சொந்த அனுபவங்களே கைவிளக்கு. வீட்டில் இம்சை தாங்கவில்லை என்று நாலரை வயதில் பள்ளிக்கு அழைத்துக் கொண்டுபோனார் அப்பா. கையைத் தலைக்குமேல் ஒட்டியவாறு காதைத் தொடச் சொன்னார்கள். எட்டவில்லை. அதனால் பள்ளிச் சேர்க்கை ஓராண்டு தள்ளிப் போனது. ஐந்து வயது முடிவடைந்தது. திடீரென ஒருநாள் பள்ளியில் சேர்ப்பதாகச் சொன்னார் அப்பா. நான் பள்ளிக்குப் போகமாட்டேன் என அழுது அடம்பிடித்தேன். தரதரவென்று இழுத்துக்கொண்டு போனார். தலைமையாசிரியர் அறைக்குள் சென்றதும் அழுகை நின்றது. நானாகவே காதைத் தொட்டுக் காட்டினேன். சிரித்துக்கொண்டே ஏதோ பேசினார்கள். பள்ளியோடு அன்று தொடங்கிய உறவு தொப்புள்கொடி உறவு போலத் தொடர்கிறது. </div>
<div style="text-align: justify;">
அப்போது நாங்கள் ஜெகதாபியில் இருந்தோம். அக்கா ஐந்து முடித்து ஆறாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தது. எது செய்தாலும் எனக்கு இடது கைதான் முதலில் வரும். இதனால் என்னை நொட்டாங்கைப் பண்டாரம் எனக் கேலி செய்வர். வீட்டிலிருக்கும் நேரங்களில் அக்காவின் சிலேட்டில் நொட்டாங் கையால் ஆனாவும் ஈயன்னாவும் போடப் பழகியிருந்தேன். பள்ளியில் சேர்ந்தவுடன் சோத்துக் கையால்தான் எழுத வேண்டும் என்றார்கள். கொஞ்ச நாட்கள் சிரமப்பட்டேன். பின்பு சரியாகி விட்டது. ஒன்னாப்பு அந்தோணிசாமி வாத்தியாரால் படிப்பின்பால் ஈர்க்கப்பட்டேன். </div>
<div style="text-align: justify;">
அப்பா நடத்திவந்த ஓட்டலை யாருக்கோ விற்றுவிட்டார். தோட்டம் போட பொம்மனத்துப்பட்டிக்கு இடம் பெயர்ந்தோம். ரெண்டாப்பு முடித்திருந்தேன். அக்காவை ஏழாப்புடன் நிறுத்திவிட முடிவு செய்திருந்தார் அப்பா. மூனாப்புக்கு நான் மட்டும் தனியாகப் போகவேண்டி வந்தது. அஞ்சு கிலோமீட்டர் நடக்க வேண்டும். பயந்துகொண்டே நடந்தேன். ஒரு கிலோமீட்டர் தாண்டி கொத்தம்பட்டியார் வீட்டிற்கு முன்னால் போகும்போது நாய் துரத்தத் தொடங்கியது. அழுதுகொண்டே வீட்டிற்கு ஓடிவந்துவிட்டேன். அடுத்த நாள் தனியாகப் போக முடியாது என அழுததால் அக்காவையும் பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்தார் அப்பா. என்னால் அக்காவுக்கு ஓராண்டுப் படிப்பு நீட்டிக்கப்பட்டது. </div>
<div style="text-align: justify;">
மூனாப்புப் படிக்கும்போது சுதந்திர தினத்தன்று காந்தித் தாத்தா நம்தாத்தா கருணை மிக்க பெருந்தாத்தா என்னும் பாட்டை மைக்கில் பாடினேன். பள்ளிக்கு வெளியே கடைவீதியை நோக்கிக் கட்டப்பட்டிருந்த குழாய் ஒலிபெருக்கி வழியாக என் மழலைக்குரல் காற்றில் தவழ்ந்தது. மிகவும் பெருமையாக இருந்தது. அதுமுதல் அன்றாடப் பாடங்களைப் படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் மிகுதியானது. வகுப்பில் நாந்தான் ஃபர்ஸ்ட். வாசிக்கச் சொல்லும் எந்தப் பாடத்தையும் வாசிக்க நான்தான் முந்திரிக்கொட்டையாய் முதலில் ஓடுவேன். மற்றவர்கள் என்னிடம் வாய்பாடு ஒப்பிக்க வேண்டும். ஆசிரியர்களிடம் அவ்வளவு செல்வாக்கு. </div>
<div style="text-align: justify;">
நான்காம் வகுப்பின் பாதியில் எனக்குக் கண்ணில் பிரச்சினை வந்தது. எழுத்துக்கள் மங்கலாகவே தெரியும். சில நாள்கள் கண்ணீர் வடிந்து கொண்டே இருக்கும். எழுத்தே தெரியாது. மண்டை வலிக்க ஆரம்பிக்கும். குமட்டல் வருவதுபோல் இருக்கும். அப்படியே படுத்து விடுவேன். பெரும்பாலும் ரெண்டு பாட வேளைகள் முடிந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கும். சில நாட்களில் சாயங்காலம் வரும். அறிவியல் பாடம் எடுத்த செல்லையா சார் எனக்கு வகுப்பாசிரியர். என்னுடன் படித்து வந்த நரிகட்டியூர் சுப்பிரமணி என்னைவிட ரெண்டுமூனு வயசு மூத்தவன். செல்லையா சார் என்னை அவனோடு அனுப்பி வீட்டில் பத்திரமாக விட்டுவிடச் சொல்லுவார். சில நாட்கள் பாதையே தெரியாது. அவன்தான் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டுப் போவான். </div>
<div style="text-align: justify;">
சில நேரம் பள்ளிக்குப் போகும் வழியில் புருவத்துக்கு மேலே வலி வந்துவிடும். என் தங்கை சின்னப்பிள்ளை நடுவழியில் கந்தக் கவுண்டர் குடிசை அருகில் வேப்பமர நிழலில் என்னைப் படுக்க வைத்துவிட்டுத் தனியாக பள்ளிக்குப் போகும். நான் வலியில் சோர்ந்து தூங்கி விடுவேன். மாலையில் பள்ளி முடிந்து வரும்போது வீட்டிற்குச் சேர்ந்து போவோம். இப்படியாக நாலாம் வகுப்பும் அஞ்சாம் வகுப்பும் நரக வேதனையில் கழிந்தது. இருந்தாலும் படிப்பை விட மனசில்லை. </div>
<div style="text-align: justify;">
ஆறாம் வகுப்பு வரும்போதுதான் விவசாயக் குடும்பத்தின் பாரம் தெரிந்தது. காலை மாலை இருவேளையும் மாடு கன்றுகளிடம் சாணி எடுக்கும் வேலை. சில நாள் கழிந்த சாணி தட்டுக் கூடையில் ஒழுகும். தரை மண்ணோடு வழித்துத்தான் எடுக்க வேண்டும். ஆடுமாடுகளை மேய்ப்பது, பராமரிப்பது என வயது ஏற ஏற வேலைகள் அதிகரித்தன. வகுப்பு உயர உயரப் பாடங்கள் அதிகம் படிக்க, எழுத வேண்டியிருந்தது. பெரும்பாலும் பள்ளியிலேயே எழுதி முடித்து விடுவேன். பங்குத் தோட்டம் என்பதால் முறைப் பாசனம்தான். ஆளுக்கொரு வாரம் இரவு, பகல் என மாறி மாறி வரும். இரவில் அம்மாவுக்குத் துணையாகச் சென்று வயக்காட்டுக்குத் தண்ணீர் பாய்ச்சுவோம். சில நாட்கள் அங்கேயே தூங்கிப் போய் விடுவேன். </div>
<div style="text-align: justify;">
அம்மாவுக்கு இடது பாதத்தில் கட்டை ஏறிச் சீழ் பிடித்துக் கொண்டது. பெரிய புண்ணாகி மூன்று நான்கு மாதங்கள் பெரும் அவஸ்தைப் பட்டது. அப்போது சமையல் வேலையும் நாங்களே செய்ய வேண்டி வந்தது. நெல் நடவு முதல்கொண்டு களத்திற்குக் கட்டுத் தூக்கிக் கதிர் அடித்து மூட்டை போட்டு அடுக்குவது வரையான வயல் வேலைகளும் கரை போடுதல், பாத்தி நிரவுதல், காய்கறிச் செடி மற்றும் கடலை நடுதல், கம்பு, சோளம் விதைத்தல் முதலான தோட்ட வேலைகளும் இணைந்து செய்வோம். எள், காட்டுச் சோளம், துவரை போடுதல், தட்டை அறுத்தல், போர் வேய்தல், களத்தில் தவச தானியங்களைக் காய வைத்தல், சோளக்காட்டில் பரண் அமைத்து ஓட்டை டின் கட்டி அடித்தல், கவண்கல் எறிந்து பறவைகளை விரட்டுதல் எனப் பல வேலைகளும் சேர்ந்து செய்ய வேண்டியிருக்கும். எத்தனை வேலைகள் செய்தாலும் பள்ளிக் கூடம் போக நேரம் ஆகி விட்டால் சில நேரம் முறைத்துக்கொண்டு நிற்பேன். குட்டிச்சுவராட்டம் நிக்கிறான் பாரு என்ற வசையோ சம்சாரிக்குப் பொறந்தவனாடா நீ என்ற கேள்வியோ செவியின் சுவையுணரும். </div>
<div style="text-align: justify;">
பள்ளிக்குப் போவதற்கு முன், பள்ளிக்குப் போய் வந்தபின் எனவும் விடுமுறை நாட்களுக்கு எனவும் வேலைகளைப் பிரித்துக் கொண்டேன். தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சும்போது நான்கைந்து பாத்திகளுக்கு ஒருசேர வெட்டி விட்டு ஒரு கேள்விக்கான விடையைப் படித்து முடிப்பேன். இப்படி அங்கங்கே கரைகள் கொத்தப்பட்டிருக்கும். மறுமுறை அப்பா பகலில் தண்ணீர் பாய்ச்சும்போது கண்டுபிடித்து விடுவார். தண்ணீர் பொத்துக்கொண்டு போய்ப் பாய்ந்து விட்டது என்று சமாளிப்பேன். வீட்டின் மேற்குப் பக்கம் இருந்த தோட்டத்தில் கிணறு வெட்ட ஆரம்பித்தோம். ஆயில் மோட்டார் இயக்கும் வேலையும் சேர்ந்து கொண்டது. பெல்ட் போட்டு ஓட்டும் பம்ப்செட் என்பதால் பெல்ட் தேய்ந்து அடிக்கடி அறுந்துவிடும். சரிசெய்து ஓட்டுவதற்குள் உடல் சோரும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://userfilescdn.yourstory.com/uploads/production/document_image/file/46549/full_8eef7a4a25" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://userfilescdn.yourstory.com/uploads/production/document_image/file/46549/full_8eef7a4a25" height="198" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
பெரும்பாலானோர் புதிய பாடப் புத்தகங்களுடன் நோட்ஸ் வாங்கிப் படிப்பார்கள். எங்களுக்குப் பெரும்பாலும் பழைய புத்தகங்கள்தான் கிடைக்கும். பத்தாம் வகுப்பு முதல் அடிக்கடி டெஸ்ட் வைப்பார்கள். ஒருபக்கம் எழுதி வீணான காகிதத்தையே மறுபக்கம் பயன்படுத்துவேன். பள்ளிக்குப் போகும் வழியில்தான் மொங்காமூட்டுப் பெரியசாமி வீடு. போம்போதும் வரும்போதும் கந்தக் கவுண்டர் சாலையும் பெரியசாமி தோட்டமும்தான் எங்களுக்கான வேடந்தாங்கல். பெரியசாமி வீட்டில் ராணி காமிக்ஸ், ராணிமுத்து, குங்குமச்சிமிழ், முத்தாரம், கல்கண்டு, குமுதம் முதலான புத்தகங்கள் வாங்குவார்கள். ராஜேஷ்குமார், ராஜேந்திரக்குமார், சாண்டில்யன் போன்றோர் எழுதிய நாவல்கள் கிடைக்கும். இவற்றைத் தினம் ஒன்றாக எடுத்துப்போய் வாசித்துவிட்டுத் திரும்பக் கொடுத்துவிடுவோம். ஆடுமாடுகள் மேய்க்கும் இடத்திலும் காடுகரையில் வேலை செய்யும் நேரத்திலும் என் கவனம் எல்லாம் படிப்பின் மீதே இருந்தது. </div>
<div style="text-align: justify;">
ஜெகதாபியில் படித்தபோது ஒருமுறை க்ரூப் போட்டோ எடுத்தார்கள். லந்தக் கோட்டையில் எட்டாம் வகுப்பில் போட்டோ எடுத்தார்கள். மூனு ரூபாயோ என்னமோதான். இரண்டையுமே வாங்கக் காசு கிடைக்கவில்லை. இப்போது பலரது படங்களின் தவிர்க்க முடியாத விருந்தினன் நான். இருந்தாலும் அந்த ஏக்க நிழல் எப்போதும் படமாய்க் கூட வரும்.</div>
<div style="text-align: justify;">
கொடுத்த கடனை வாங்க முடியாமல் பால்வார்பட்டி பாலகிருஷ்ணனிடம் ஜெகதாபியில் இருந்த எலக்ட்ரிக்கல்ஸ் கடையை வாங்கினார் அப்பா. இதனால் ஏழாம் வகுப்பின்போது கடையைப் பார்க்கும் வேலையும் வந்தது. அப்போது லந்தக்கோட்டையில் படித்துக்கொண்டிருந்தேன். அப்பாவோடு கடைக்கு வந்து திறந்து வியாபாரப் பொருட்களை எடுத்து வெளியில் வைத்துவிட்டு அவரிடம் சைக்கிளை வாங்கிக் கொண்டு பள்ளிக்கூடம் போவேன். மாலையில் பள்ளி விட்டு வந்து கடையைப் பார்த்துக் கொண்டே வீட்டுப்பாடம் தொடரும். மாலையில் சில நாள் சைக்கிளை அப்பாவிடம் கொடுத்துவிட்டு நடந்தே வீடு சேர்வேன். அக்கா திருமணம் முடிந்து போன பின்பு மிகவும் சிரமத்திற்கு உள்ளானேன். </div>
<div style="text-align: justify;">
காலையில் காட்டிற்குப் போய்விடுவதால் அம்மா சாயங்காலம்தான் சமைக்கும். இட்டிலி பணியாரம் பண்டிகைக்கு மட்டும். அரிசிச் சோறு அபூர்வமாகத்தான் கிடைக்கும். அம்பிளியைத் தவிர காலை மதியம் இருவேளையும் பெரும்பாலும் பழையதுதான். பழைய சோற்றில் பருப்புக் குழம்பு ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். பருப்புச் சட்டிக்குப் பொறந்த பய என்று அம்மா அன்பாய்த் திட்டும். தூக்குப் போணியில் கம்மஞ்சோறோ சோளச் சோறோ கொண்டு போவோம். தயிர் கொஞ்சம் ஊற்றிக் கொண்டால் புளித்தாலும் குடித்து விடலாம். களிம்பேறிய பித்தளைப் பாத்திரம் சில நாட்கள் வாடை வீசும். எவர்சில்வர் தூக்குப் போணி வந்தபின்பு கொஞ்சம் தேவலை.</div>
<div style="text-align: justify;">
மதிய உணவுத் திட்டம் சத்துணவுத் திட்டமாக மாறியது. கொஞ்ச நாட்கள் சத்துணவு சாப்பிட்டேன். லந்தக்கோட்டைக்கு ஹாஸ்டல் வந்தது. வீட்டுத் தொல்லையிலிருந்து விடுபட ஹாஸ்டலில் சேர்ந்தேன். ஓரிரு மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அரையாண்டு வாக்கில் வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டேன். பதினொன்றாம் வகுப்பிற்கு உப்பிடமங்கலம் போனபோதுதான் என் பாதங்கள் செருப்பையே பார்த்தன. அங்கு மதிய உணவு இடைவேளையில் தோப்பிற்குப் போய் சாப்பிடுவோம். எனது சோற்றை யாரும் பார்த்து விடக் கூடாது என்பதற்காகச் சற்றுத் தாமதமாகப் போவேன். தனியாகப் போய் உட்கார்ந்துகொள்வேன். அரிசிச் சோறு, பலகாரம் கொண்டு போனால் எல்லாரோடும் சேர்ந்து கொள்வேன். </div>
<div style="text-align: justify;">
பலர் பேண்ட் சட்டைகளை தினமும் தேய்த்து மடிப்புக் கலையாமல் போட்டுக்கொண்டு வருவார்கள். என்னுடையதோ துவைத்துத் துவைத்துச் சாயம்போய் வெளுத்துக் காணப்படும். சிலர் சாடைமாடையாய்க் கேலி பேசுவார்கள். எல்லாவற்றுக்கும் காசு வேண்டும். நான் படிக்க வருவதே அப்பா காட்டியிருக்கும் பெரிய சலுகை. இதில் காலரைத் தூக்கி விட்டு பந்தாப் பண்ண ஏது வழி? கழிவிரக்கம் மீதூர யாரோடும் கலந்து பழக முடியாமல் மனசு தவிக்கும். அத்தனை வேலைகளுக்கு இடையிலும் ஒருநாள்கூட மட்டம் போடாமல் பள்ளிக்குப் போனேன். பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளி நடந்த 170 நாட்களும் பள்ளிக்கு வந்தற்கான வருகைச் சான்றிதழை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
ஐந்தாம் வகுப்பு வரை இரவு அப்பாவுடன் படுப்பது வழக்கம். அவர் வாய்பாடு சொல்லித் தருவார். மதுரை வீரன் கதை, நல்ல தங்காள் கதை, பொன்னர் சங்கர் கதை, காக்காக் கதை, நரிக் கதை எனக் கதைகள் சொல்வார். மாரியம்மன் பாடல்கள் பாடுவார். எனது அப்பன், பாட்டன், முப்பாட்டன் வகையறாக்கள் எல்லாரும் தற்குறிப் பயலுகள்; கைநாட்டுப் பேர்வழிகள் என்றும் நாங்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்றும் அவ்வப்போது உசுப்பேற்றுவார். அதே அப்பா எட்டாம் வகுப்போடு அனைவரையும் நிறுத்திவிடுவது என முடிவெடுத்தபோது கலங்கிப் போனேன். எட்டாம் வகுப்புக்கும் பத்தாம் வகுப்புக்கும் மேல் படிக்க வேண்டும் எனப் பிடிவாதமாக இருந்தேன். அப்பாவுக்குப் பிடித்தும் பிடிக்காத இக்குற்றத்திற்கு என் ஆசிரியர்கள் செய்த சிபாரிசு இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடிக்கும் வரை எனக்கு நிழல் தந்தது. </div>
<div style="text-align: justify;">
பரம்பரைச் சொத்து சுகம் இல்லாமல் சுய சம்பாத்யத்தில் மேடேற முயலும் ஒரே குறிக்கோளுடன் செயல்படும் குடும்பத்தின் மூத்த மகனாக, முதல் தலைமுறைக் கற்போராக ஒரு பிள்ளை சந்திக்கும் அத்தனை சவால்களும் எனக்கும் இருந்தன. பள்ளியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான அத்தனை சூழல்களும் என் கழுத்தைப் பிடித்துத் தள்ளின. அதையும் தாண்டிக் கல்வியறிவற்ற நெடிய தலைமுறையின் ஜீன்கள் படிப்பை ஓர் இச்சா சக்தியாய் என்னுள் தூண்டிக்கொண்டே இருந்தன. இப்போதும் எனக்குள் இருக்கும் மாணவன் என்னை உந்திக் கொண்டே இருக்கிறான். அதனால் கிடைத்ததுதான் இந்த உயரம். என்னுடையது மட்டுமல்ல; என்னைப் போன்ற பலரது நிலைமை இதுதான்.</div>
<div style="text-align: justify;">
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதுவதற்கு வராத ஆயிரத்து இருநூற்றுச் சொச்சம் பேருக்கும் என்னைப் போலவே ஆயிரத்து இருநூற்றுச் சொச்சம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒருத்தருக்குக் கூடவா என்னைப் போல மேலே படிக்க வேண்டும் என்ற வெறி இருந்திருக்காது? </div>
<div style="text-align: justify;">
கல்விதான் என்னைக் கடைத்தேற்றும் என வெறிகொண்டு நின்றதொரு காலம். இன்று படிப்பை விடப் பணமே பிரதானம். என்னதான் குழந்தைத் தொழிலாளர் சட்டங்கள் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் இன்றைய பிள்ளைகள் கிடைக்கும் சிறுசிறு வேலைகளில் ஈடுபடுவதாகச் சொல்கிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் பணம் தவறான பழக்கங்களுக்கு சிநேகிதங்களுக்கு இட்டுச் செல்கிறது. பணம் பார்க்கும் பிள்ளைகள் அந்தக் கணத்துச் சந்தோசங்களில் மூழ்கி எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். </div>
<div style="text-align: justify;">
தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் விசாரித்ததில் இவர்களில் விருப்பமில்லாமல் பள்ளிக்கு வரும் - பெற்றோர் கட்டாயத்திற்காகப் படிக்க வருபவர்களே அதிகம் என்றும் ரொம்ப வற்புறுத்தினால் வீட்டை விட்டு ஓடிப் போய்விடுகிறார்கள் என்றும் தெரிவிக்கின்றனர். படிக்கச் சொல்லும் பெற்றோர்களைத் துன்புறுத்தும் - தாக்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்கின்றனர். சில பெற்றோர்கள் நிலையாக ஒரே இடத்தில் வசிப்பதில்லை. கிடைக்கும் தொழிலை / கூலி வேலையை முன்னிட்டு இடம்பெயர்ந்துகொண்டே இருப்பார்கள். இதனால் குழந்தைகள் தொடர்ந்து ஒரே பள்ளிக்குப் படிக்க வருவது பாதிப்படைகிறது. தாங்கள் செய்யும் வேலைக்கு ஒத்தாசையாகத் தங்கள் பிள்ளைகளை இழுத்துப் போகிற பெற்றோர்களும் இருக்கிறார்கள். இதுகுறித்துப் பேச பெற்றோரைக் கூட்டி வரச் சொன்னால் அவர்கள் வருவதில்லை. </div>
<div style="text-align: justify;">
தொடர் வருகையற்ற பிள்ளைகளை ஒருசில ஆசிரியர்கள் அன்பால் வரவைத்து விடுவார்கள். ஒருசிலர் விசாரணை செய்யும் தோரணையே வேறு. அதற்குப் பிறகு அவர்கள் ஒருநாளும் வருவதே இல்லை. ஒருசிலர் பொதுத் தேர்வின்போது மட்டும் தவறாமல் வந்து அவர்களுக்குப் பாடம் கற்பிப்பார்கள். ஆசிரியர்கள் சிலர் மெனக்கெட்டு வீட்டிற்கே போய்க் கூப்பிட்டாலும் பலர் தொடர்ந்து வருவதில்லை. போங்கடா நீங்களும் ஒங்க வெளங்காத படிப்பும்… என்று இடையிடையே மட்டம் போட்டு விடுகிறார்கள். </div>
<div style="text-align: justify;">
செல்வந்தன் வீட்டுப் பிள்ளை மேலும் செல்வந்தன் ஆவதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறது. உயர்கல்வி பெற்றவர் வீட்டுப் பிள்ளைகள் எப்படியும் ஏதொவொரு தொழிற்கல்வியைக் கற்று முடிக்கிறார்கள். அதிகாரம் படைத்தவர்களின் பிள்ளைகள் படிக்க எப்படியும் இடம் கிடைத்துவிடுகிறது. அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கடனோ சலுகையோ பெற்றுக் கடைத்தேற்றம் அடைந்துவிடுகிறார்கள். பெற்றோர் இல்லாத குழந்தைகள், குடும்ப உறவுகள் சிதைந்த விளிம்புநிலை மக்களின் பிள்ளைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
எத்தனையோ பேரணிகள், ஊர்வலங்கள் நடத்தியும் பிரச்சாரங்கள் செய்தும் கண்ணெனத் தகும் கல்வியின் தேவை அவர்களின் கவனம் பெறவில்லை. கற்பிப்பதில் ஆர்வமுள்ள அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள் சோர்ந்து போகிறார்கள். அறிவு ஒன்றே அற்றம் காக்கும் கருவி என்பதையும் எழுத்தறியத் தீரும் இழிதகைமை என்பதையும் அவர்களுக்கு உணரவைக்க முடியாமல் நாளும் தோற்றுக் கொண்டிருக்கிறோம் நாம். கண்டும் காணாமல் போவதற்கு இவர்கள் விரல் விட்டு எண்ணிவிடுகிற அளவா என்ன? மானிடப் பரப்பில் ஒரு கணிசமான எண்ணிக்கை.</div>
<div style="text-align: justify;">
கல்வியால் முன்னேற முடியும் என்பதற்குக் கண்கண்ட சாட்சிகளாய் இருக்கும் பலபேர் நம் பள்ளிகளில் படித்தவர்கள். எத்தனை குறைகள் இருப்பினும் இத்தனை மேம்பாடும் வளர்ச்சியும் இதுவரை பெற்ற கல்வியால் விளைந்ததே. நம்மை எழுதவும் பேசவும் வைத்திருப்பது இந்தக் கல்விதான். இந்தக் குறைந்தபட்ச அடிப்படைக் கல்வியைக் கூடக் கைவிட்டுப் போகிற துயரினைத் தீர்க்க ஒரு வழி காணாமல் துஞ்சி மடிதல் எப்படி?</div>
<div style="text-align: justify;">
நவீன அறிவொளி இயக்கம் முதலில் நமக்குள்ளே நடத்தியாக வேண்டும். குழந்தைகளால் வரும் வருமானம் தன் தலைமுறைக்கே அவமானம் எனப் பெற்றோர்கள் நினைக்க வேண்டும். பெற்றோரின் நிலையான வருமானத்திற்கு வழிகாண வேண்டும். மாணவர்களின் வெளிநடப்பு ஆசிரியப் பணியிடங்களை உபரி ஆக்குவது மட்டுமல்ல; சமுதாய வளர்ச்சியைத் தடுக்கும். சேரும் பிள்ளைகள் பள்ளியை விட்டு வெளியேற எந்தச் சூழ்நிலையிலும் தான் காரணம் ஆகிவிடக் கூடாது என ஒவ்வொரு ஆசிரியரும் எண்ண வேண்டும். </div>
<div style="text-align: justify;">
யார் கைவிட்டாலும் கல்வி என்னைக் கைவிடாது; நான் தொடர்ந்து படிப்பேன்; கல்விதான் என் கம்பீரம் என வெறிகொள்ளும் பிள்ளைகளை வேண்டி நிற்கிறோம். நமது அப்பன், பாட்டன், முப்பாட்டன் காலத்தைப் போலக் கனவாகிவிடக் கூடாது கல்வி. வரும் ஆண்டிலாவது குழந்தைகளின் கனவுக்குள் வரவேண்டும் கல்வி.</div>
<div style="text-align: justify;">
<br />
(நன்றி: <b>காக்கைச் சிறகினிலே</b> ஜூன் 2016)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-69741529551745487532016-04-08T11:08:00.003+05:302016-06-04T10:34:19.864+05:30வல்லிக்கண்ணன் கடிதங்கள் 15<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வல்லிக்கண்ணன் <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> சென்னை 12-2-2002</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்பு மிக்க ...., </div>
<div style="text-align: justify;">
வணக்கம். மீண்டும் சில மாதங்கள் ஓடிவிட்டன, கடிதம் எழுதி. நலமாக இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். நான் நலம்.<br />
<br />
<a name='more'></a></div>
<div style="text-align: justify;">
ஜனவரி 8ல், எச்.ஜி.ரசூல் கவிதைகள் பற்றிய பாராட்டுரைகள் கொண்ட ‘சின்ன புறாக்களும் சில துப்பாக்கிகளும்’ என்ற சிறு பிரசுரம் அனுப்பினேன். ரசூலின் ‘மைலாஞ்சி’ கவிதைகளுக்காக மத ரீதியான எதிப்பும் கண்டனங்களும் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. பிப்ரவரி 9ல் ‘தமிழ்ச் சிறகு’ 2 இதழ்கள் அனுப்பினேன்.</div>
<div style="text-align: justify;">
பாரிஸ் இதழ் ‘எரிமலை’யோடு தொடர்பு கொள்ள எண்ணியிருப்பதாக முன்பு சொன்னீர்கள். கடிதம் எழுதினீர்களா? நீங்கள் அப்படிச் சொன்னதற்குப் பிறகு 3-4 இதழ்கள் வந்துவிட்டன.</div>
<div style="text-align: justify;">
பள்ளி வேலைகளும் பத்திரிகை அலுவல்களுமாக வேலைகள் நிறையவே இருக்கும். சிற்றிதழ்களும் அதிகம் அதிகமாக வந்து கொண்டேயிருக்கின்றன. புத்தகங்களும் கூட.</div>
<div style="text-align: justify;">
சென்னையில் ஜனவரி மாதம் 15 நாட்கள் புத்தகச் சந்தை(BOOK FAIR) நடைபெற்றது. இந்த வருடம் மிகுந்த கூட்டம் என்றும், புத்தக விற்பனையும் மிகுதி என்றும் பத்திரிகைகள் தெரிவித்தன. அநேகமாக, ‘பெரிய பத்திரிகைகள்’ எல்லாம் புக் ஃபேர் பற்றி பிரமாதமாக எழுதி மகிழ்ந்தன.</div>
<div style="text-align: justify;">
வள்ளியூர் தென்றல்’ என்ற சிறுபத்திரிகை தன் உருவத்தையும் உள்ளடக்கப் போக்கையும் மாற்றிக் கொண்டிருக்கிறது. ‘கணையாழி’ மாதிரி ‘ஹைப்ரோ’ இலக்கிய சஞ்சிகையாக வெளிவர ஆசைப்படுகிறது. அது எடுபடாது!</div>
<div style="text-align: justify;">
நீங்கள் வழக்கம்போல் கவிதைகள் எழுதிக் கொண்டிருப்பீர்கள். ஆனந்த விகடனுக்கு அனுப்பினீர்களா?</div>
<div style="text-align: justify;">
‘சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன்’ என்ற தொகுப்பு நூல் வெளியிட்ட ‘ஞானியாரடிகள் மன்றம்’ பாலகிருஷ்ணன் இவ்வருடம் ‘எழுத்து செல்லப்பா’ பற்றி ஒரு தொகுப்பு நூல் பிரசுரிக்கிறார். இந்த மாதம் வந்துவிடும்.</div>
<div style="text-align: justify;">
வெயில் கடுமை பெற்று வருகிறது. கோடை வெகு கடுமையாகத் தான் இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
நான் வழக்கம் போல் படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறேன். எழுதுவது இந்த ஸீசனில் ‘அணிந்துரை’கள் என்றாகிவிட்டது. ஜனவரி பிப்ரவரியில் 10 புத்தகங்களுக்கு அணிந்துரை எழுதித் தர வேண்டியதாயிற்று.</div>
<div style="text-align: justify;">
அன்பு – வ.க. </div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-806284781372343202015-10-24T16:50:00.001+05:302015-10-24T16:59:04.485+05:30வல்லிக்கண்ணன் கடிதங்கள் 14<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வல்லிக்கண்ணன் <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> சென்னை 15-1-2002</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்பு மிக்க ...., வணக்கம். </div>
<div style="text-align: justify;">
உங்கள் 27-12-2001 கடிதம் கிடைத்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
28ல், வள்ளலார் குடியிருப்பு நலச் சங்கம் தயாரித்த 2002 வாழ்த்து வெளியீடு ஒன்று அனுப்பினேன். பலவிதமான தகவல்கள் கொண்ட சிறு பிரசுரம். ஜனவரி 8 அன்று ‘சின்னப் புறாக்களும் துப்பாக்கிக் குண்டுகளும்’ என்கிற ஏ.எச்.ரசூல் ‘மைலாஞ்சி’ கவிதைகளுக்கான ஆதரவுக் கட்டுரைகளின் தொகுப்பு அனுப்பினேன். கிடைத்திருக்கும்.</div>
<div style="text-align: justify;">
</div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
டிசம்பர் 29 அன்று நான் சேலம் போனேன். 30ல் அங்கு எனது சுயசரிதை ‘வாழ்க்கைச் சுவடுகள்’ நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது. 31 அன்று ஏற்காடு மலை மேல் சென்று, நண்பர்களோடு இயற்கைக் காட்சிகள் கண்டு களித்தேன். ஜனவரி 1, 2 தேதிகளிலும் சேலத்தில். 3-ம் நாள் சென்னை வந்து சேர்ந்தேன். நலமாக இருக்கிறேன். </div>
<div style="text-align: justify;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1gT6RXavKZdh3xarz68ZjMoSbNzMBmlOMSitsEMVopp4pK48csZewXEF_l9N_eU3OU_j48XWi8DsJoTI_Tcx4oN2B-KqKhBnzi5QF9XJI8mtiy1xpJTyQT9ghDB9EPtv2m9-tuO7rh0kb/s1600/screen5.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="156" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1gT6RXavKZdh3xarz68ZjMoSbNzMBmlOMSitsEMVopp4pK48csZewXEF_l9N_eU3OU_j48XWi8DsJoTI_Tcx4oN2B-KqKhBnzi5QF9XJI8mtiy1xpJTyQT9ghDB9EPtv2m9-tuO7rh0kb/s320/screen5.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
ஞானியுடன் ஏற்பட்ட சந்திப்புகள் பற்றி எழுதியிருந்தீர்கள். அவர் நல்ல அறிவாளி. தேர்ந்த படிப்பாளி. ஆழ்ந்த சிந்தனையாளர். கண் பார்வை இல்லாத போதிலும், விஷயங்களை காதுகளால் கிரகித்து, உடனுக்குடன் நல்ல முறையில் விமர்சனமும் கனமான கருதுக்களும் வெளியிடக் கூடிய ஆற்றல் பெற்றிருக்கிறார். அவரது ‘தமிழ் நேயம்’ எனக்கு வருவதில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சாகித்ய அகாதமி இந்த ஆண்டு சி.சு. செல்லப்பாவுக்கு ‘சுதந்திர தாகம்’ நாவலுக்காக வழங்கப்பட்டிருப்பது காலம் கடந்த பாராட்டு தான். அவர் உயிரோடு இருந்திருப்பின், இதை ஏற்றுக் கொள்ளமாட்டார். தேடி வந்த பரிசுகளையும் விருதுகளையும் ஏற்க மறுத்தவர் அவர். இந்த ஆண்டு சா. அகடமிப் பரிசு வாழ்கிற எழுத்தாளர் எவருக்காவது வழங்கப்பட்டிருந்தால் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொ.மு.சி. ரகுநாதன் டிசம்பர் 31 அன்று திடீர் மரணம் அடைந்தார். முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு நற்பணி ஆற்றியவர். 78 வயது நிறைவு செய்திருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்னையில் பனி, குளிர் அதிகம் தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புக்ஃபேர் நடகிறது. நல்ல கூட்டம் என்று சொல்லப்படுகிறது. நான் போகவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘குமுதம்’ ஜங்ஷன் என்றொரு பத்திரிகை ஆரம்பித்திருக்கிறது. நான் பார்க்கவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘நந்தவனம்’ சிற்றிதழ் என் நேர்காணல் வெளியிட்டிருக்கிறது. கேள்விகள் அனுப்பினார்கள். பதில் எழுதி அனுப்பினேன். தென்கச்சி சாமிநாதன் பதில்களும் வந்துள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கல்யாண்ஜி கவிதை ஒன்றுக்கு ‘ஆனந்த விகடன்’ 2000 ரூபாய் கொடுத்திருக்கிறது இந்த வாரம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாழ்த்துக்கள்.<br />
அன்பு </div>
<div style="text-align: justify;">
வ.க. </div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-14973728155930985362015-10-18T11:48:00.000+05:302015-10-18T15:36:13.283+05:30நானும் பதிவர் ஆனேன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
இது எனக்கு ஓர் அரிய நிகழ்வு. புதுக்கோட்டை மாவட்டத்தை விட்டுப் போவதற்கு முன்னால் நான் கலந்து கொண்ட கடைசி விழாவின் மேடை கவிஞர் தங்கம் மூர்த்தியினுடையது. அன்று எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புப் பேச்சாளர். தலைமையேற்றவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் முனைவர் சுப்பையா.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj266duIBVSn4JKixP-jaQ7hvuMf5e4Pm5rTztbtwJ-bodv1XvIJFYxXUqQbf5rKZgk3ruDoWzt2RYSKBkZp7s1FRZJAdlQTaThIL6D472Oa_pyVFVGBxWl4pxNGqIG6QptH2ruzg2D7rOX/s1600/Bloggers+Meet+munnurai.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a></div>
<a name='more'></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj266duIBVSn4JKixP-jaQ7hvuMf5e4Pm5rTztbtwJ-bodv1XvIJFYxXUqQbf5rKZgk3ruDoWzt2RYSKBkZp7s1FRZJAdlQTaThIL6D472Oa_pyVFVGBxWl4pxNGqIG6QptH2ruzg2D7rOX/s1600/Bloggers+Meet+munnurai.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj266duIBVSn4JKixP-jaQ7hvuMf5e4Pm5rTztbtwJ-bodv1XvIJFYxXUqQbf5rKZgk3ruDoWzt2RYSKBkZp7s1FRZJAdlQTaThIL6D472Oa_pyVFVGBxWl4pxNGqIG6QptH2ruzg2D7rOX/s1600/Bloggers+Meet+munnurai.JPG" /></a><br />
இங்கிருக்கிற பல ஆசிரியர்கள், சான்றோர்கள் அன்றைக்குப் பார்வையாளர்கள். வெளி மாவட்டத்திலிருந்து வந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் கலந்துகொள்ளும் முதல் விழா வலைப்பதிவர் திருவிழா 2015. இதிலும் அந்த வரிசை தொடர்கிறது. நிச்சயமாக இது ஓர் அரிய சந்தர்ப்பம்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனக்கு புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கத்தின் நிறுவுநர் என்று அடிக்குறிப்பு போட்டிருக்கிறார்கள். உண்மையில் அதற்கு நான் முற்றிலும் பொருத்தமானவன் எனச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் போகச் சொல்கிற இடத்திற்கு ஓடிக் கொண்டிருப்பவன் நான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் விதைதூவி மட்டுமே. அந்த விதை முந்தா நாள் துளிர் விட்டு நேற்று செடியாகி இன்று ஆல மரமாய் விழுது விட்டிருக்கிறது. நான் இந்த மாவட்டத்தில் பணியாற்றியபோது ஒரு சில சோதனை முயற்சிகளை மேற்கொண்டேன். நிர்வாகப் பணியில் மட்டுமல்லாது கணினிப் பயிற்சிக்கு உறுதுணையாக இருந்ததும் வீதி என்கிற இலக்கியக் களத்தைக் கூட்டியதும் அவற்றுள் அடங்கும். இன்றைக்கு தனியாகக் குறிப்பிடும் அளவிற்கு வீதி விரிவடைந்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் அனைத்துமே அதனதன் அளவில் புதுக்கோட்டை மாதிரி (PUDUKKOTTAI MODEL / PUDUKKOTTAI SCHOOL OF THOUGHT) என்னும் அளவிற்கு பேசப்படக்கூடியதாக மேம்பட்டிருக்கின்றன. இது எனது அன்பின் நிர்வாகப் பரிணாமம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எல்லாரும் விதைக்கிறார்கள். நல்ல விதை என்று தேர்ந்தெடுத்துத்தான் விதைக்கிறார்கள். ஆனால், எல்லாம் முளைத்து விடுவதில்லை. இந்த விதை முளைத்ததற்குக் காரணம் நான் விதைத்துச் சென்ற நிலம் நல்ல நிலம். ஈர நிலம். நான் தொழில்நுட்பத்தை மட்டும் விதைக்கவில்லை. அதோடு என் அன்பையும் தோழமையையும் விதைத்துச் சென்றேன். குறிப்பாக என் ஆசிரியர்களிடத்திலும் தலைமை ஆசிரியர்களிடத்திலும் நண்பர்களிடத்திலும் விதைப்புக் கருவியாக இருந்தேன். அவ்வளவுதான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புதுக்கோட்டையில் ஒரு சிலர் தனித்தனியாக வலைப்பதிவராக இருந்தனர். சிலர் முகநூலில் மட்டும் இருந்தார்கள். அவர்களை ஒருங்கிணைத்தோம். பதிவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம். யாரெல்லாம் வார விடுமுறைச் சந்தோஷங்களை இழக்கத் தயாராக இருந்தார்களோ அவர்கள் மட்டும் வந்தார்கள். இருவேறு ஆண்டுகளில் இரண்டு முறை பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNRqDgu4m_zYY7va7EkB32W25fLMOG2Uv7Vzz_OM_29uLedZo6s2nZEhGRxTypflZyd_h-y4Q0hQg34RoAKtX8OuMpvOvgWU6bcLQSDnf424_T3wYtDPJ5gLogA0q3ZyZ6Pshq9A8T_LQ8/s1600/Bloggers+Meet+committee.JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNRqDgu4m_zYY7va7EkB32W25fLMOG2Uv7Vzz_OM_29uLedZo6s2nZEhGRxTypflZyd_h-y4Q0hQg34RoAKtX8OuMpvOvgWU6bcLQSDnf424_T3wYtDPJ5gLogA0q3ZyZ6Pshq9A8T_LQ8/s400/Bloggers+Meet+committee.JPG" width="400" /></a> நான் சைகை செய்தேன். முத்துநிலவன் கோடிழுத்தார். கவிஞர் கதிரேசன் கோலங்கள் வரைய இடம் கொடுத்தார். திண்டுக்கல் தனபாலன் எப்படி வரைவது என்று நம் கையைப் பிடித்துச் சொல்லிக் கொடுத்தார். விக்கிபீடியா வல்லமை கூட்டியது. கஸ்தூரிரங்கன், ராசி. பன்னீர்செல்வன், பாண்டியன், குருநாத சுந்தரம், ஸ்டாலின் சரவணன், சுரேஷ்மான்யா, ரேவதி, கீதா, ஜெயலட்சுமி, பொன். க. ஐயா, இன்னும் பல பேர் தூரிகை ஆனார்கள். நானும் பதிவர் ஆனேன். நான் தூங்கினால் கனவு அவர்களுக்கு வரும். அவர்களின் விழிகளில் இருந்த ஆர்வம் எனக்குள் விரிவடைந்தது. என் பார்வையை அவர்கள் மொழிபெயர்த்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGvxDUroW4JKqWtbHoEnDKZ0UxtAtU2WGQ2XBuESGkKdKrJ7DI8Rf4cd5WdBgkXH_trp0BnZnc8Jab3e7oSDOltL6Gsi-l6ZFdJRAZHKOWRZVbw4PDN9WgvRSdC3YPSr9ypM4Pe0OKtDqu/s1600/blog.+meet..JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGvxDUroW4JKqWtbHoEnDKZ0UxtAtU2WGQ2XBuESGkKdKrJ7DI8Rf4cd5WdBgkXH_trp0BnZnc8Jab3e7oSDOltL6Gsi-l6ZFdJRAZHKOWRZVbw4PDN9WgvRSdC3YPSr9ypM4Pe0OKtDqu/s320/blog.+meet..JPG" width="320" /></a> இன்று நான் பேரானந்தத்தில் திளைக்கிறேன். என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன். பிரம்மிப்பாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் இருக்கிறது. கவிஞர் முத்துநிலவனின் ஒருங்கிணைப்பில் புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கம் இன்று வலைப்பதிவர் திருவிழாவை எடுத்து நடத்தும் அளவிற்கு வல்லமை பெற்றிருக்கிறது. அவரோடு ஒவ்வொரு நாளும் புதியன காணும் கண்களும் நடைமுறைப் படுத்தும் கைகளும் இங்கு இணைந்திருப்பது பெருமைக்குரிய ஒன்று. அதனால்தான் இது சாத்தியம் ஆகியிருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எதையும் தொடங்குவது எளிது. அதைத் தொடர்ந்து கொண்டு செல்வது கடினம். இந்த மகிழ்ச்சி இத்தோடு முடிந்துவிடக் கூடாது. வலைப்பின்னல் உலகத்தில் அச்சு ஊடகத்தைப் போலவே எத்தனையோ பேர் எழுத வருகிறார்கள். எல்லாரும் தொடர்வதில்லை. எல்லாரும் தொடர வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இல்லந்தோறும் இணையம் என்னும் புதிய திட்டத்தைத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது பதிவுகள் மேலும் பெருகும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அச்சு ஊடகத்தை விட இணைய ஊடகம் வலுவானது, விரிவானது, சில ஆங்கிலப் படங்களில் பல்கிப் பெருகி மனிதகுலத்திற்குச் சவால் விடுக்கும் மிருகத்தைப் போன்றது. என்னதான் திரட்டிகள் கொடுத்தாலும் அச்சுக் குப்பைகளை விட இணையக் குப்பைகள் பெருகினால் வாசகன் தேடுதலிலேயே சோர்ந்து போய்விடுவான். எனவே, எழுதுவதில் கவனம் தேவைப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எழுதும் ஒவ்வொன்றும் உங்கள் உச்சம் தொடுவதாக வாசகனின் உள்ளம் தொடுவதாக இருக்க வேண்டும். என்ன எழுதுகிறோம் யாருக்காக எழுதுகிறோம் எதற்காக எழுதுகிறோம் என்னும் கேள்விகள் நமக்குள் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். எத்தனை பதிவுகள், எத்தனை பார்வைகள் என்பது மட்டும் நமக்குப் போதுமானவை அல்ல. நம் மொழி, இலக்கியம், பண்பாடு, அறிவியல், அறவியல், விமர்சனம், இன்னபிறவற்றை நாம் எவ்வளவு தூரம் பதிவு செய்கிறோம் என்னும் விழிப்புணர்வு மிக மிக அவசியம்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqc86o0yvd8HqSfZ4HKh6CcsXhOyGhHcIZPXV2zJlD5ILQJeJMuxomgz2JG7z8aA21S0dxkPD-zzXSAAzqPPmUhmkgK2Zq5TCd-yU1tqw9F_LMLD6nybjzQ6Ug17FroE1ZgxoZhRGV3gaT/s1600/Guide+wrapper.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqc86o0yvd8HqSfZ4HKh6CcsXhOyGhHcIZPXV2zJlD5ILQJeJMuxomgz2JG7z8aA21S0dxkPD-zzXSAAzqPPmUhmkgK2Zq5TCd-yU1tqw9F_LMLD6nybjzQ6Ug17FroE1ZgxoZhRGV3gaT/s400/Guide+wrapper.jpg" width="262" /></a></div>
இதுபோன்ற வலைப்பதிவர் திருவிழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். விழா முடிந்ததும் அப்படியே கலைந்து போய்விடாமல் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் முன்வைக்கப்பட வேண்டும். அதன் முன்மொழிவுகள், தீர்மானங்கள் செயல்திட்டங்களாக நடைமுறைக்கு வர வேண்டும். ஒரு சிறுகதையை / கவிதையை / கட்டுரையை ஒருவர் தன் தளத்தில்(BLOG) தொடங்க மற்றவர் தனது தளத்தில் முடித்து வைப்பது, பலரும் சேர்ந்து ஒரு தளத்தில் நாவல் / நெடுங்கதை / கட்டுரை எழுதுவது, மின் நூல் வெளியீடு என அச்சு ஊடகத்தில் சாத்தியமில்லா இணைய வழி சாத்தியப்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேற்காணும் செயல்வினைகள் படைப்பாளர்களுக்குப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு தனியர்கள் இணைந்து உலகளாவிய படைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சி கூர்மைப்படும்போது உண்மையாகவே தமிழ் மொழியில் உலக இலக்கியம் தோன்றச் சாத்தியம் உள்ளது. அதற்குப் புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா வாசல் திறந்து வைப்பதாக அமையட்டும். வாழ்த்துக்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>வலைப்பதிவர் திருவிழா 11.10.2015 தொடக்க உரையின் பதிவாக்கம்</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-20875321335573772232015-10-18T05:52:00.000+05:302015-10-18T05:57:24.205+05:30வல்லிக்கண்ணன் கடிதங்கள் 13<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வல்லிக்கண்ணன் <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> சென்னை 12-12-2001</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்பு மிக்க நண்பர் ...., வணக்கம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்கள் 10ஆம் தேதிக் கடிதமும், இன்லண்டு தாள்கள், ஸ்டாம்புகளும் நேற்று கிடைக்கப் பெற்றேன். நன்றி. சந்தோஷம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கண்கள் சரியாகிவிட்டன. 45 நாட்களுக்குப் பிறகு கண் மருத்துவரிடம் டெஸ்ட் பண்ணி, கண்ணாடிக்கான விவரம் எழுதி வாங்கியாச்சு. கடையில் கண்ணாடிக்கும் ஆர்டர் பண்ணியாச்சு. அது வெள்ளியன்று கிடைக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br />
<a name='more'></a></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzLEGC2JgW_9yAreqnFM4ljVmTCRaAZroYgSHhBMPy_kDCGVsS5nFqXGbA4W_03Uj5y-6dG4eBqU4t8HglWbpKeUH4NsAgj6z6rEf2XiOvvVDjWwm8sywNSGSVbwdkNogT9pC-X7nxrXTh/s1600/san.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzLEGC2JgW_9yAreqnFM4ljVmTCRaAZroYgSHhBMPy_kDCGVsS5nFqXGbA4W_03Uj5y-6dG4eBqU4t8HglWbpKeUH4NsAgj6z6rEf2XiOvvVDjWwm8sywNSGSVbwdkNogT9pC-X7nxrXTh/s320/san.jpg" width="320" /></a> நலமாக இருக்கிறேன். அண்ணியும் பிள்ளைகளும் சுகம். பனியும் குளிரும் இங்கும் அதிகம் தான். பனியை, குளிரை பொருட்படுத்தாத பிரம்மங்களுக்காக சென்னையில் சங்கீத விழா தொடங்கி ஜாம் ஜாம் என்று வளர்கிறது. எத்தனை சபாக்கள்! எத்தனை கச்சேரிகள்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘திணை’ (பழசு) கிடைத்து படித்துவிட்டதை அறிய மகிழ்ச்சி. ‘மையம்’ என்றொரு வித்தியாசமான இதழின் பழைய பிரதி ஒன்றை நேற்று புக் போஸ்டில் அனுப்பினேன். அதன் இன்னொரு இதழை இன்று அனுப்புகிறேன். புதுமையாக, கனமான விஷயங்களைத் தரும் இதழ் நடத்த வேண்டும் என்கிற மூளை அரிப்பு அவ்வப்போது சிலசில பேருக்கு ஏற்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. அவர்களுடைய முயற்சிகள் தொடர்ந்து வளர வழி கிடைப்பதில்லை. அது தான் கஷ்டம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘பயணம் புதிது’ கிடைத்து வருகிறது. முந்திய இதழில் இடம்பெற்ற பாட்டாளியின் கவிதை நூல் மதிப்பீட்டை (நதிக்கரையில் தொலைந்த மணல் பற்றியது) படித்தேன். ‘லோகோ பின்ன ருசி’!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பயணம் புதிது புது இதழும் படித்தேன். அமெரிக்காவின் பயங்கரவாதம் ஆப்கானிஸ்தானை புழுதிக் காடாக்குகிறது. அப்பாவி மக்களை சாகடிக்கிறது; அகதிகளாக்குகிறது; பசிக்கு உள்ளாக்குகிறது. பயங்கரவாதி பின்லேடன் அகப்படுகிற வழியைக் காணோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்கள் 16-11-2001 கடித விஷயங்களும் அறிந்தேன். முதுகலை ஆசிரியர்களுக்கான அரசுத் தேர்வு எழுதியதை அறிந்தேன். Inter-View அழைப்பு வந்துவிட்டதா? இன்னொரு தேர்வு எழுதியவர்களுக்கு ‘நேர்காணல்’ நடந்துவிட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்னையில் பல நாட்கள் மழை பெய்தது என்னவோ உண்மை. ஆனால் பல பகுதிகளிலும் சீராகப் பெய்யவில்லை. பல இடங்களில் சுமார் மழை தான். நெடுகிலும் ரோடுகள் படுபாடாவதி ஆகிப் போயின. குடிதண்ணீர் சப்ளை பண்ணும் 4 ஏரிகளிலும் நன்கு நீர் பெருகும்படி மழை பெய்யவில்லை. கால்வாசிக்குத்தான் தண்ணீர் சேர்ந்தது. சென்னைக் குடிநீர்ப் பிரச்னை எளிதில் தீரக் கூடியதில்லை. அரசியல் கட்சியினரின் திருக்கூத்துகளும் தான். </div>
<div style="text-align: justify;">
அன்பு – வ.க./ </div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-76720811175736438332015-09-06T11:40:00.000+05:302015-09-06T11:45:10.649+05:30வல்லிக்கண்ணன் கடிதங்கள் 11 <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வல்லிக்கண்ணன்<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> சென்னை 6-10-2001<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்பு மிக்க நண்பர் .... அவர்களுக்கு,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> வணக்கம். உங்கள் 28-9-2001 கடிதம் அக்-1ஆம் தேதி வந்தது. ‘கதை சொல்லி’ இதழ் அக். 3ஆம் தேதி கிடைத்தது. மகிழ்ச்சி. நன்றி. ‘கதை சொல்லி’யை இன்னும் படிக்கவில்லை.</div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
முந்திய 20-9-2001 கடிதமும் உரிய நாளில் கிடைத்து விட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீங்கள் படித்த பத்திரிகைகள், கவிதைகள் பற்றிய உங்கள் கருத்தை எழுதியது சந்தோஷம் தந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘தமிழ் அமிழ்தம்’ வந்து பலப்பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் தமிழ் இன உணர்வுப் பத்திரிகையாக வந்தது. பிறகு, ‘முற்போக்கு இலக்கிய’ ஆதரவை மேற்கொண்டது. பின்னர், வடிவத்தை பெரிதாக்கி ‘போஸ்ட் மாடர்னிச’ – அறிவு ஜீவி – இதழாகப் பரிணாமம் பெற்றது. திடமான, ஆழ்ந்த, நோக்கும் போக்கும் பெற்றிராதவர்கள் நடத்துகிற இதழ்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
(பெங்களூர்) ‘பயணம்’ சில தினஙளுக்கு முன் வந்து விட்டது. ‘சுரா’வுக்கு சகாரா கவிதை நூல் அனுப்பினேன். ‘பயணம்’ இதழில் ‘வரப்பெற்றோம்” பட்டியலில் அது குறிப்பிடப்பட்டிருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கலைஞன் பதிப்பகம் தயாரித்த ‘மணிக்கொடி களஞ்சியம்’ வெளியீட்டு விழா நடைபெற்றது. ‘சரஸ்வதி களஞ்சியம்’ தொகுப்பும் வெளிவந்து விட்டது. இதற்கு வெளியீட்டு விழா விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஏற்பாட்டில் கோவையில் நடைபெறும் என்று தெரிகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்னையில் மழை நாட்கள். சில தினங்களாக சுமாரான தூறல் தலை காட்டியது. இரண்டு நாட்களாக, ‘பரவால்லே’ என்று சொல்லும்படியான மழை பெய்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு நாள் இரவு 8 மணி வாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. சென்னைவாசிகளை பயம் பிடித்து ஆட்டியது. வீடுகளை விட்டு வெளியேறி தெருவில் நின்று ‘என்ன ஆகுமோ’ என்று குழம்பித் தவித்தார்கள். கவலைப்படும் படியாக எதுவும் நிகழவில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip1gOam_Wl3t0mtyWRrar8faN-tIECNqe954c86VuXhWXCOKVCtGvkwP5HjkXmxdueWyBL-h3YGOSETYlO-k90DC8ZbhUHDZNhtQNOkBsO9Ynxs8RoelGos2ly7YFdDP9g-ihoEZstmIZn/s1600/pichchamoorthy.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip1gOam_Wl3t0mtyWRrar8faN-tIECNqe954c86VuXhWXCOKVCtGvkwP5HjkXmxdueWyBL-h3YGOSETYlO-k90DC8ZbhUHDZNhtQNOkBsO9Ynxs8RoelGos2ly7YFdDP9g-ihoEZstmIZn/s200/pichchamoorthy.jpg" width="145" /></a> கவிஞர் ந. பிச்சமூர்த்தியின் நூற்றாண்டை கவிஞர்கள் ஞானக் கூத்தன், ராஜகோபாலன், அழகியசிங்கர் முதலியவர்கள் கொண்டாடினார்கள் – ஆரம்ப விழா நடத்தியும், முடிவில் ‘நிறைவு விழா’ நடத்தியும். ந.பி.யின் சிறுகதைகள், கவிதைகள் புத்தகங்களாக வெளியிடப்பட்டன. இப்போது ‘ந. பிச்சமூர்த்தி நினைவாக’ என்று 2 தொகுதிகள் வந்துள்ளன. பலபேர் ந.பி. பற்றிய நினைவுகளைச் சொல்லும் கட்டுரைகளின் தொகுப்பு. முதல் தொகுதியில் என் </div>
கட்டுரைகள் 2 இருக்கின்றன.<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் நலம். அண்ணியும் பிள்ளைகளும் நலமாக இருக்கிறார்கள். நீங்களும் குடும்பத்தாரும் நண்பர்களும் நலம் தானே? </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
திருநெல்வேலியில் தி.க.சி. நலமாக இருக்கிறார். கடிதங்கள் வருகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிற்றிதழ்களும் புதுசு புதுசாகத் தோன்றியவாறு இருக்கின்றன. உற்சாகம் மிகுந்த இளைஞர்கள் கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டு மகிழ்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்பு </div>
<div style="text-align: justify;">
வ.க. </div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-70157776437142318802015-06-28T16:45:00.001+05:302015-09-06T11:06:08.050+05:30வல்லிக்கண்ணன் கடிதங்கள் 12 <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வல்லிக்கண்ணன்<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சென்னை 19-11-2001<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><br />
<div style="text-align: justify;">
அன்பு மிக்க நண்பர் ...., வணக்கம். நான் உங்களுக்குக் கடிதம் எழுதி அநேக வாரங்கள் ஆகிவிட்டன. அக்டோபர் முதல், எனது இயல்புகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் மாறுபட்ட செயல்முறைகளில் உழல வேண்டிய ஒரு கட்டாயம். <br />
<a name='more'></a>படிக்கவும் எழுதவும் இயலாது. அக்டோபர் முதல் எந்தப் பத்திரிகையையும் புத்தகமும் படிக்கவில்லை. கடிதங்கள் எழுதும் எண்ணத்துக்கே இடமில்லை. கண்களில் புரைநோய் (கேட்ராக்ட்) என்று அறுவை செய்ய நேரிட்டது. அக்.10ல் இடது கண்ணிலும், 22ல் வலது கண்ணிலும். தொடர்ந்து அதற்கான சிகிச்சைகள். நலமாக இருக்கிறேன். படிக்கவும் எழுதவும் தனியாக டெஸ்ட் பண்ணி, கண்ணாடி போட்டுக்கொள்ள வேண்டும். வசதிப்படும்போது விரிவான கடிதம் எழுதுவேன்…</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இக் கடிதம் எழுதும்போது, தபாலில் உங்கள் கடிதம் வந்தது. மகிழ்ச்சி. வாழ்த்துகளுக்கு நன்றி. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்னையில் மழை பெய்தது என்றாலும் போதுமான அளவு இல்லை. குடிதண்ணீர் ஏரிகள் நான்கிலும் ஏழு மாதங்களுக்கு வரக்கூடிய அளவு தண்ணீர் தான் பெருகியுள்ளது. - வ.க./.. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-86205021598355057242015-04-17T16:40:00.001+05:302015-04-17T16:43:36.114+05:30வல்லிக்கண்ணன் கடிதங்கள் 10 <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வல்லிக்கண்ணன்<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> சென்னை 17-9-2001<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்பு மிக்க ......,</div>
<div style="text-align: justify;">
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> வணக்கம். உங்கள் 12ஆம் தேதிக் கடிதமும் இணைப்புகளும் பெற்று மகிழ்ந்தேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் 10ஆம் தேதி ‘முகம்’ 2 இதழ்களும் ‘கலை’ ஒன்றும் அனுப்பினேன். 11ஆம் தேதி இன்லண்ட் கடிதம் அனுப்பினேன். கிடைத்திருக்கும். </div>
<div style="text-align: justify;">
</div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
‘நதிக்கரையில் தொலைந்த மணல்’ பற்றிய 2 விமர்சனங்களையும் படித்தேன். திரு. ராமசாமி, தான் படித்த வேறு சில கவிஞர்களையும் நினைவு கூர்ந்தும் ஒப்பிட்டும், சகாரா கவிதைகளை ரசித்ததை விரிவாக எழுதியிருக்கிறார். ரசமாக இருக்கிறது. கவிஞர் புதுமதியன், சகாரா கவிதைகளை பட்டியலிடுவது போல் ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு வியந்திருக்கிறார்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இரண்டு பேரும், சிரமம் எடுத்து, சிரத்தையோடு இவ்வளவு விரிவாகக் கருத்து தெரிவித்திருப்பது மகிழ்ச்சிக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAuvgjirW6P7T7EEd5-WSZFQzd7YMnRCg4JmfF99Vj1YZe0DYQwq5V1e2gWQQ29YLkVjrz0Wx1O7Nl8AOdIyFFhyt-7bfkVDOVdlWGH2fNdQI4p2bdt2BdyEf6oOHz-028V2nG3xroN6we/s1600/samuththiram.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAuvgjirW6P7T7EEd5-WSZFQzd7YMnRCg4JmfF99Vj1YZe0DYQwq5V1e2gWQQ29YLkVjrz0Wx1O7Nl8AOdIyFFhyt-7bfkVDOVdlWGH2fNdQI4p2bdt2BdyEf6oOHz-028V2nG3xroN6we/s1600/samuththiram.jpg" height="200" width="138" /></a> நீங்கள் பல சிற்றிதழ்களிலும் ரசித்தது பற்றி எழுதியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. ‘நந்தன்’ இதழில் வந்த விமர்சனங்களைப் படித்தேன். செப். 1-15 இதழில் சூத்திரன் என்ற பெயரில் தாக்குதல் கட்டுரை எழுதியிருப்பது சு.சமுத்திரம் தான். ஏற்கனவே பல இடங்களிலும் பல சமயங்களில் சொன்ன விஷயங்களை தொகுத்துத் தந்திருக்கிறார். ‘சதங்கை’யில் களந்தை பீர் முகம்மது கதை ‘மனவிழி’யை நானும் ரசித்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்கள் கவிதை நூலை பலருக்கும் அனுப்பி வைத்தது நல்ல காரியம் தான். கவிஞர் அப்துல் ரகுமான் முகவரி ‘கவிக்கோ’ இதழ் முகவரி தான். அது அவரே நடத்திய பத்திரிகை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
Dr. S. Abdul Rahman, 20, Ist Seaward Road, Valmiki Nagar, Chennai – 61.(600061)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கவிஞர் ஈரோடு தமிழன்பன்</div>
<div style="text-align: justify;">
லாயிட்ஸ் காலனி, லாயிட்ஸ் ரோடு,</div>
<div style="text-align: justify;">
சென்னை – 600014</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
லாயிட்ஸ் காலனியில் அவரது வீட்டின் எண் தெரியவில்லை. பிரபலமானவர் என்பதால் வீட்டு எண் இல்லாமலேயே தபால் சேர்ந்துவிடும். கவிஞர் மேத்தா முகவரி தெரியாது.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
சென்னையில் ‘சீசன்’ மோசம். கோடை காலம் போல் கடுமையான வெயிலும் புழுக்கமும் தான். மழை வருவது போல் வானம் படம் காட்டி விட்டு இளிக்கிறது! தமிழ் நாடு நெடுகிலுமே இந்த வறட்சி நீடிக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகம் பூராவையும் முஸ்லிம் நாடு ஆக்கிவிடக் கனவு வளர்க்கும் வெறியர்கள், பயங்கரவாதிகள் என்று பெயர் பண்ணி, அமெரிக்காவில் பெரிய கட்டிடங்களைத் தகர்த்து, அப்பாவி மக்களைக் கொன்றிருக்கிறார்கள். இம் முயற்சியில் அவர்களில் சிலரும் செத்தொழிந்தார்கள். ஒரு ‘மகத்தான லட்சியத்துக்காக’ உயிர்த் தியாகம் செய்து வீர மரணம் அடைந்ததாக வெறியன் பின்லேடனின் கூட்டம் கொக்கரிக்கலாம். இதனால் உலக யுத்தம் வெடிக்கக் கூடிய அபாய நிலை கவிந்து தொங்குகிறது. அமெரிக்கா வெறித்தனமாகப் பழி வாங்கத் தயாராகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பார்க்கப்போனால், உலகத்தில் என்றுமே அமைதி நிலையும் ஆனந்தமும் இருந்ததில்லை. மாபெரும் உலகயுத்தம் 1940களுக்குப் பிறகு நடைபெறவில்லை என்றாலும், சிறுசிறு யுத்தங்கள், போர்கள் நிரந்தரமாக உலகப் பரப்பில் பல இடங்களில் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. இந்தியாவின் பல இடங்களிலும் கூட. இலங்கையில் முடிவில்லாத போர் நடந்தவாறு இருக்கிறது – வருடக்கணக்கில். அப்பாவி மக்கள் தான் அல்லல் படுகிறார்கள். அமெரிக்காவின் செயலால் பெரிய யுத்தம் வெடிக்குமானால், மிகப்பெரும் துயரங்கள் சிரமங்கள் எல்லா நாடுகளிலும் ஏற்படும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்பு -வ.க. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-35223495094975950562015-04-13T11:27:00.000+05:302015-04-13T11:40:32.560+05:30வல்லிக்கண்ணன் கடிதங்கள் 9 <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வல்லிக்கண்ணன்<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> சென்னை 11-9-2001<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்பு நண்பர் ....., <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>வணக்கம். உங்கள் 2ஆம் தேதிக் கடிதம் கிடைத்தது. அது அனுப்பப்பட்ட பிறகு எனது 1ஆம் தேதிக் கடிதம் உங்கள் பார்வைக்கு வந்திருக்கும். 10ஆம் தேதி ‘முகம்’ இதழ்கள் 2, ‘கலை’ ஆகிய பத்திரிகைகள் அனுப்பினேன். கிடைத்திருக்கலாம். நான் நலம். உங்கள் நலம் அறிய மகிழ்ச்சி.</div>
<div style="text-align: justify;">
<br />
<a name='more'></a></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXMACWy0cutI-85cqgGQxw820Hu2NvYDHXEqbmim0ZFm99iwQC5-o092hfl0xsfTE1p87TR3nRlCiL8y0gBBhI7appvTxhqBdHEIHSqpWORJ7_9DCtbkL3GGVLJSLIcwpWPq8q8zm5iL91/s1600/nilaa+paarththal.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXMACWy0cutI-85cqgGQxw820Hu2NvYDHXEqbmim0ZFm99iwQC5-o092hfl0xsfTE1p87TR3nRlCiL8y0gBBhI7appvTxhqBdHEIHSqpWORJ7_9DCtbkL3GGVLJSLIcwpWPq8q8zm5iL91/s1600/nilaa+paarththal.jpg" height="200" width="128" /></a> கல்யாண்ஜியின் ‘நிலா பார்த்தல்’ தொகுப்பை நானும் படித்தேன். இனிய மனப்பதிவுகள். கவிதை பற்றிய எண்ணங்களை அழகாக எழுதியிருக்கிறார். படித்து, ரசித்து, பாராட்டப்பட வேண்டிய எழுத்து. பாலா கவிதைகள் படிக்கவில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீங்கள் படித்து ரசித்த புத்தகங்கள், கவிதைகள் பற்றி எழுதியிருப்பது சந்தோஷம் தந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீங்கள் தாமரை, சதங்கை இதழ்களுக்கு கவிதை அனுப்ப எண்ணுவது வரவேற்புக்கு உரியது. அனுப்புக. ஆனந்த விகடனுக்குக் கூட அனுப்பலாம். வித்தியாசமான ஒன்றை. மிக நீண்டதாக இருக்கக் கூடாது. சும்மா முயன்று பார்ப்பதில் தவறில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எங்கள் வட்டாரத் தொலைபேசிகள் ஒரு வாரமாக ‘செத்துக் கிடக்கின்றன’. ‘DEAD’. இதுவரை அண்ணா சாலை எக்ஸ்சேஞ்சுடன் இணைக்கப்பட்டிருந்த இந்த வட்டாரத் தொலைபேசிகள் நிர்வாக வசதி கருதி ஐஸ் ஹவுஸ் எக்ஸ்சேஞ்சுக்கு மாற்றப்படுகின்றன. ஏதோ டெக்னிக்கல் குறைபாடுகள் காரணமாக இவை இயங்கவில்லை. இதுவரை சீர் செய்யப்படவில்லை. எங்கள் வீட்டு ஃபோன் எண் 8516251 ஆக இருந்தது இனி 8476252 எனப் புது எண் பெறுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்னையில் நேற்று இரவு நல்ல மழை. இடியுடன் கூடிய கனத்த மழை. இன்றும் மூடாக்காகவே இருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெங்களூரில் இருந்து வந்த ‘பயணம்’ மதுரையில் அச்சாவது. அதன் ஆசிரியர் சுரா(சுந்தர ராஜ்). ‘வடக்கே’ மிலிட்டரிப் பணியில் இருந்தவர் சில மாதங்களாக, பணி முடிப்பு பெற்று விருதுநகர் அருகில் உள்ள கிராமத்துக்கு வந்துவிட்டார். ‘பயணம்’ அங்கிருந்து தான் வரும். அது மார்க்சிய நோக்குடைய தரமான இதழ். ‘பயணம் புதிது’க்கு அது வருகிறதோ என்னவோ. இவ்வாரம் வெளிவர இருக்கிற ‘பயணம்’ இதழில் வ.க. எழுதும் ‘சிறுகதைச் சுவடுகள்’ தொடர் கட்டுரை ஆரம்பமாகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு சந்தோஷமான செய்தி. டாக்டர் ராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையம் வெளியிட ஏற்றிருந்த எனது சுயசரிதை ‘வாழ்க்கைச் சுவடுகள்’ 288 பக்க அழகான புத்தகமாக வெளிவந்துவிட்டது. பத்திரிகைகள், பதிப்பகங்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ்நாட்டு நிலைமை பற்றிய ஒரு ஆவணம் அது. </div>
<div style="text-align: justify;">
-வ.க. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-3148646230047341202015-01-17T17:52:00.001+05:302015-01-17T18:11:24.836+05:30மந்தணம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpRgR-kYaDWij63qqxuBaIw53Wzq2e-XPGW7MD7nKcsisFyIloPPBEA91qtjp9FtT5Z6Eqf8PygogCu0RGm9C82ynnyT9spLDcKSTAmWZiDmZWhFalWvtec1aRQnoW7llWUcsy4ycmYl3O/s1600/2015.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpRgR-kYaDWij63qqxuBaIw53Wzq2e-XPGW7MD7nKcsisFyIloPPBEA91qtjp9FtT5Z6Eqf8PygogCu0RGm9C82ynnyT9spLDcKSTAmWZiDmZWhFalWvtec1aRQnoW7llWUcsy4ycmYl3O/s1600/2015.jpg" /></a></div>
<b><i><br /></i></b>
<b><i>நினைவூட்டு <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>மிகவும் அவசரம்<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>தனிக்கவனம்</i></b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b>வரைவுத் தணிக்கைத் தடை நிவர்த்திக்கான விரைவுச் செயல்முறைகள்</b></div>
<div style="text-align: center;">
ஓ.மு.எண்: 311213/மு.ஆ.1/2014 நாள்: 01.01.2015</div>
<div style="text-align: center;">
மார்கழி 17 திருவள்ளுவர் ஆண்டு 2045</div>
<div style="text-align: center;">
*****</div>
<div style="text-align: center;">
<br />
<a name='more'></a></div>
<div style="text-align: justify;">
<b> பொருள்: </b>ஆண்டுகளின் சந்திப்பு - அலுவல்களின் அடைவு எல்லை - மந்தணம் பகிர்தல் – தார்மீகப் பரிமாறுதல் – சார்பு.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
<b> பார்வை: </b> ஒருங்கிணைப்புக் கூட்டம் இதே எண், நாள்: 31.12.2013</div>
<div style="text-align: justify;">
2. தொடர்புடைய ஆவணங்கள் இதே எண், நாள்: 31.12.2014</div>
<div style="text-align: center;">
!!!!!</div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டின் போதும் சார்நிலை அலுவலர்கள் தம் உயர் அலுவலர்களைச் சந்தித்துப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வது மரபு. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கிய இந்த மரபு இப்போதும் தொடர்கிறது. இதற்கு மறுதிசையில் வாழ்த்துக்களைப் பரிமாறிய காலமுறைப் பதிவு மறுகவனிப்புக்காக இங்கு முன்வைக்கப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
ஒரு மலர் அழகுடன் பூத்திருப்பது வண்ணமயமான அதன் இதழால் மட்டும் அல்ல. இலைகளுடன் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிற பசுமை தோய்ந்த அதன் தாவரப்பகுதியாலும் தான். அதுபோல் அலுவலர் ஒருவர் வெற்றி பெறுவது என்பது அவரது அலுவலகத்தாலும் தான்.</div>
<div style="text-align: justify;">
அலுவலகம் என்பது அங்கிருக்கும் மேசை நாற்காலிகளோ பீரோ அலமாரிகளோ அல்ல; அலுவலகப் பணியாளர்களின் அர்ப்பணிப்பும் பொறுப்புணர்வுமே ஆகும். அலுவலரின் இருப்பு என்பது தற்காலிகமானது. ஆனால், அலுவலகம் எப்போதும் நிரந்தரமானது. ஒருசிலர் தமது பணிக்காலம் முழுவதையும் ஒரே அலுவலகத்தில் கழிக்கிறார்கள்தான். ஆனால், எல்லார்க்கும் அது நேர்வதில்லை. எனவே, தனிப்பட்ட நபர் சார்ந்து அலுவலகம் இயங்க முடியாது. அலுவலகம் என்பது அனைவரின் கூட்டு வழிபாடு. அதன் இறையாண்மை அனைவரின் செயல்பாட்டிலும் பிரதிபலிக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
அலுவலகங்கள் உயிரற்றவை என்றே பலரும் கருதிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியில்லை. நாம் கையாள்வது வெறும் காகிதங்கள் என்று எண்ணி விட வேண்டாம். அவை பலரது தற்காப்பு ஆயுதங்கள். நம் முன் கிடப்பவை கோப்புகள் மட்டும் அல்ல. அவை பலரது கண்ணீர் மல்கிய வேண்டுதல்கள். நம் மேசையை நிறைக்கும் பேசாத உயிர்களின் முனகலைக் கட்டிக் கட்டி வைத்துவிடக் கூடாது.</div>
<div style="text-align: justify;">
நமக்கு ஓய்வு என்பது இரண்டு கோப்புகளுக்கு இடையேயானது. ஆனால், வேலைக்காகவே தன்னை நேர்ந்து விட்டவர்கள்தான் அநேகம். இருப்பினும், அலுவலகப் பணியில் நேரம் என்பது எவ்வளவு மதிப்பு மிக்கது எனப் பிறர் சொல்லித் தெரியவேண்டியது இல்லை. வெயில் நேரத்தில் ஆற்றின் நடுவே நின்றிருந்தாலும் கடந்துவிட்ட நிழலைக் கையில் பிடிக்க முடியாது. உங்கள் அனுபவங்கள் மற்றவர்க்குப் பாடங்கள்.</div>
<div style="text-align: justify;">
உங்களின் மனந்திறந்து யோசித்துப் பாருங்கள். கீழ்த்தரமான தங்கள் ஈகோவுக்குத் தீனி போடும் ஒரு சிலரைத் தவிர கோரிக்கைகளை யாரிடம் வைப்பது, எந்த அலுவலகத்தை அணுகுவது என்றுகூடத் தெரியாத மனுதாரார்களே அதிகம். இதில் மெத்தப் படித்தவர், சுத்தமாகப் படிக்காதவர் என்னும் வித்தியாசம் ஏதும் இல்லை. கோரிக்கையோடு வந்திருப்பவர்களை முதலில் உட்கார வையுங்கள். கோபமாக வருபவர்க்குக் குடிக்கத் தண்ணீர் கொடுங்கள். சட்டத்திற்குப் புறம்பாகக் கேட்டால் பொறுமையாக விதிமுறைகளை எடுத்துக் காட்டுங்கள். விதிகளை நிறைவு செய்ய என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித் தாருங்கள். ஆறுதலாக நான்கு வார்த்தை பேசி வழியனுப்பி வையுங்கள். அலுவலரே கேட்டாலும் உங்கள் தரப்பு நியாயத்தை இயல்பாக எடுத்துச் சொல்லுங்கள்; சாதக பாதக அம்சங்களை வலியுறுத்திச் சொல்லுங்கள்.</div>
<div style="text-align: justify;">
அதே வேளையில் விதிகளுக்குட்பட்டதை விரைவாகச் செய்துகொடுப்போம். வகிக்கும் பதவியில் நம்முடைய பயணம் உச்சபட்ச அதிகாரம் அடைவதை நோக்கியது அல்ல. கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் வழி தொடர்புடையவர்களுக்குப் பணிசெய்வதாகும். நாம் போடுகிற ஒவ்வொரு டானா தையலும் பலரின் கண்ணீரைத் தைப்பதாகும். நாம் செய்வது கடமை மட்டுமல்ல; மகத்தான சேவையும் கூட. நாம் செய்கிற பணியால் பார்ப்பவர் கரங்கள் தாமே கைகூப்ப வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
பணி நிறைவு பெறுவோர்க்குப் பாராட்டு விழா நடத்திவிட்டுப் பின்னர் அவர்களை மறந்து விடுகிறோம். அவர்களால் சும்மா இருக்க முடியாது. ஓய்வு பெற்ற நிலையில் தளர்மனத்துடனோ எதிர்மனத்துடனோ அலுவலகத்தை எதிர்கொள்கின்றனர். நாமும் ஒருநாள் ஓய்வு பெறப்போகிறோம். முறையாக ஓய்வு பெறும் யாருக்கும் பணியில் இருப்போர் உரிய பயன்களைப் பெற்றுத் தருவது கடமையும் ஆகிறது. எனவே, மூத்த குடிமக்களைப் பரிவுடன் அணுகுவோம்.</div>
<div style="text-align: justify;">
அசடு வழிதலோ அதிகாரப் பெருமையில் தன்னை மறப்பதோ அலுவலகத்துக்கு எதிரானது. மலர்ந்த முகம் எல்லோர்க்கும் பிடிக்கும். பணியில் இருக்கும் வரை அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் நல்லுறவு பேணுங்கள். இருக்கைகளுக்கு இடையில் பொறாமை, பூசல், பிணக்குகள், மனக் குமுறல்கள் வேண்டியதில்லை. வார்த்தைகளின் தடிப்பு ஆறாத மனத் தழும்புகளைத் தந்துவிடும். எந்த நிலையிலும் உங்கள் வார்த்தைகளின் மீதான கட்டுப்பாட்டை நீங்கள் இழந்துவிட வேண்டாம்.</div>
<div style="text-align: justify;">
தமது பணியின் கனத்தால் வெறுப்பின் நுனியில் நிறுத்தி மனசு வலிக்கப் பேசுகிறவர்களும் இருக்கக் கூடும். இருப்பினும் வேலையைச் சொல்லித் தருவதும் திருத்துவதும் திருந்த வாய்ப்பளிப்பதும்கூட நிர்வாகத்தில் உள்ளதுதான். ஆனால், இப்படிச் சொல்பவரே கடிந்துகொள்கிறார் என்றால் அது வழங்கப்பட்ட வாய்ப்பின் உச்சபட்சம் என்பதை நாம் உணர வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
ஆண்டுக் கணக்கில் ஏதாவதொரு பண்டிகைக்கு / விழாவுக்கு அலுவலகத்தைச் சுத்தப்படுத்துகிறீர்கள். தாராளமாகச் செய்யுங்கள். மேலும், உங்கள் இருக்கைப் பகுதி எப்போதும் சுத்தமாக இருக்கட்டும். பிசுக்கேறிய மேசைகளும் பிதுங்கி வழியும் அலமாரிகளும் இறைந்து கிடக்கும் கோப்புகளும் அழுது வடியும் விளக்குகளும் சோர்வு தருபவை; நம் இயக்கத்தையே முடக்கிவிடக் கூடியவை. எனவே, நம் பார்வையில் அழுக்கேறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதயத்திலிருந்து வரும் புன்முறுவல் நாள்முழுக்க ஒளிரட்டும்.</div>
<div style="text-align: justify;">
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் அலுவலகங்களிலும் உள்ளது வேதனைக்குரியது. கண்ணியம் மிக்கவனாகச் செயலாற்றுவது மின்வேலிக்கு மத்தியில் நெருப்புச் செருப்புடன் நடப்பதாகும். தோல்பாவைக் கூத்துகள் மலிந்துவிட்ட உலகத்தில் கொள்ளப்படும் அறச்சீற்றம் கோமாளித்தனமாகவே கருதப்படுகிறது. பிழைக்கத் தெரியாதவன் என்னும் முத்திரை உடனே குத்தப்படுகிறது. இருப்பினும் முதுகில் குத்துவதுதான் சகிக்க முடியாதது. ஏனெனில், கண்ணியம் என்பது பின்பற்றுபவனைவிட வழுவியவனுக்கே அதிக வலி தருவது. அதனால் ஏற்படும் ஆத்திரத்தில் கூச்ச நாச்சம் இல்லாமல் சேற்றை வாரி இறைப்பதும் எழுத நடுங்கும் வார்த்தைகளால் காகிதத்தின் வெண்மையைக் களங்கப்படுத்துவதும் வதந்திப்புழுதியை உருக்குலைக்கும் கிருமியாய்ப் பரப்புவதும் நடக்கிறது.</div>
<div style="text-align: justify;">
காலப் போக்கில் தமது சுயநலமும் தம்மை விட்டுப் போய்விடுமோ என்பதுதான் அவர்களின் உள்ளார்ந்த பயம். தூய்மை என்பது தூய்மையின்மைக்கு எதிரான வன்முறையாகப் பாவிக்கப்படுகிறது. நம் உறுதியைக் குலைக்கும் துரோகங்கள் எச்சரிக்கை மணிகளின் நாவுகளை அறுத்தெறியத் துடிக்கின்றன. இதனால், உத்தமனுக்கு ஒவ்வொரு நாளும் சத்திய சோதனைதான். ஆபத்து வளையங்களைத் தாண்டி குறைகள் குறைந்துவரும் அலுவலகமாகப் பரிணமிப்பது அறவோரின் புருவங்களை உயர்த்தக் கூடிய ஆனந்த வேள்வியாகும்.</div>
<div style="text-align: justify;">
முக்கத்துத் தேநீர்க்கடைகளில் வெளியிடப்படும் அரசாணைகளும் முச்சந்தி உணவகங்களில் பரிமாறப்படும் வரைவு அறிக்கைகளும் நமக்கே எதிராக முடியும் என்பதை உணர்வதில்லை. குழுவியம் கைகோக்கும் இடங்களில் ஒற்றுமை மட்டுமல்ல; அலுவலக உறுப்பினரும் காவு கொடுக்கப்படுகிறார். சில மரத்தடிச் சந்திப்புகள் விநோத நியமனங்களையும் பிடிக்காதவர்க்கு இடமாற்றங்களையும் வாய்மொழி ஆணைகளாய்ப் பிறப்பித்து ஆறுதல் பெறுகின்றன. ஆதங்கத்தில் தின்பண்டங்களோடு கொறிக்கப்படும் நம் சகாவின் சின்னச் சின்ன மனத்தாங்கல்கள் விஸ்வரூபம் எடுத்து பொது மனத்தின் செவிகளுக்குத் தீனியாகி அசல் திருப்பு முடிவாக உருவாக்கியவருக்கே வந்து சேர்வது வேடிக்கை. பொதுவிடங்களில் விடப்படும் அலுவலகப் பெருமூச்சுக்களின் வெப்பம் சில நேரங்களில் விட்டவரையே சுட்டு விடுவதும் உண்டு.</div>
<div style="text-align: justify;">
எந்தப் பணியிலும் இட மாற்றம்/ இருக்கை மாற்றம் இயல்பாகவோ எதிர்பாராமலோ நடக்கிறது. நிர்வாக நலன் கருதி நம் முகவரியை மாற்றச் சொல்லும் நேர்முகக் கடிதங்களை அதிர்ச்சி தரும் பதிவஞ்சலாகவே உணர்கிறோம். வருந்துவதை விட்டுவிட்டு எங்கு நமக்கான தேவை உள்ளதோ அந்தத் திசைக்கு நாம் அனுப்பப்பட்டிருக்கிறோம் என ஏற்க நம் உரிமைமனம் ஒத்துக்கொள்வதில்லை.</div>
<div style="text-align: justify;">
நம் குழந்தைகள் நம்மைவிடப் பக்குவப்பட்டுவிட்டார்கள். இப்போதெல்லாம் குழந்தைகள் தம்மை மறந்து கேட்கும் கேள்வி இந்த ஊர் போர் அடிக்கிறது. அடுத்த ஊருக்கு எப்பம்மா போவோம் என்பதுதான். ஜன்னல்கள் சாத்தப்படுவதற்காகத் தென்றல் கவலைப்படுவதில்லை. ஒரு ஜன்னல் மூடப்பட்டால் பல கதவுகள் நமக்காகத் திறக்கப்படும். நமது இன்மையின் வெறுமையில் வருந்துவோர் விழிகளில் பூக்கும் ஈரம்தான் நமது சாதனை.</div>
<div style="text-align: justify;">
தன்னைப் புதுப்பித்துக்கொள்ளாதவரின் தேக்கம் பயன்பெறுவோருக்குத் துக்கம். அளிக்கப்படும் பயிற்சிக்கும் பெறப்படும் பயிற்சிக்கும் இடைவெளி இல்லாதபோதுதான் அலுவலகம் மேம்படும். தொழில்நுட்ப வளர்ச்சியால் தட்டச்சு இயந்திரங்கள் பரண்மேல் ஏறிவிட்டன. கணினிகள் வருகை தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. பல அலுவலகங்களில் கணினி என்னும் அமுதசுரபி வெறும் தட்டச்சு இயந்திரமாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதற்கு மாறாக தொண்டுள்ளம் படைத்த நிறுவனங்களின் உதவியோடு இப்போது இந்த அலுவலகம் முழுக்கவே கணினிமயமாக்கப்பட்டுள்ளது. உங்கள் அனைவருக்கும் அவற்றைப் பயன்படுத்தப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. காகிதங்களின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது. மின் ஆளுமை முறையில் வரக்கூடிய சுற்றறிக்கைகள் அனைத்தும் பிரிவு எழுத்தர்களின் மின்னஞ்சலுக்கு முன்னனுப்பப்படுகின்றன. இந்த ஓராண்டுப் பணிக் காலத்தில் இவ்வளவு விரைவான பகிர்மானத்திற்கு நீங்கள் உங்களை முன்கொணர்வு செய்திருப்பது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது.</div>
<div style="text-align: justify;">
அலுவலகத்தில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டபோது சுற்றி இருந்தவர்கள் உங்களை பயமுறுத்தி இருக்கக் கூடும். ஆனால், அது குறித்து நீங்கள் தயக்கமோ கவலையோ கொள்ளவில்லை என்பது உங்களின் முதிர்ச்சியைக் காட்டுவதாக இருந்தது. இப்போது வெளியாட்கள் யாரும் தேவையில்லாமல் உங்கள் பணிகளில் குறுக்கிடுவதில்லை. பார்வையாளர்கள் யாரும் வேலை நேரத்தில் வந்து தொல்லை கொடுப்பதில்லை. இதனால், உங்கள் வேலையை நீங்கள் விரும்பியவாறு திட்டமிட வழி ஏற்பட்டுள்ளது. தொழில் நுட்பம் செயல்படும் இடத்தில் வெளிப்படையான நிர்வாகம் சாத்தியமாகிறது.</div>
<div style="text-align: justify;">
அலுவலகங்களைத் தூங்கும் இடங்களாகச் சித்திரிக்கும் நகைச்சுவைத் துணுக்குகளைப் பார்த்தால் இப்போது சிரிப்புதான் வருகிறது. பரிதாபத்திற்குரிய அந்தத் துணுக்கு எழுத்தாளர்கள் சுறுசுறுப்பாக றெக்கை கட்டிப் பறக்கும் நம் அலுவலகத்தை ஒருமுறையேனும் வந்து பார்க்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
வரக்கூடிய ஓராண்டுக் காலத்தில் உங்கள் ஒத்துழைப்புடன் ஒருசில செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. மாதம் தவறாமல் அலுவலகப் பணியாளர்கள் கூட்டம் நடத்துவது, நிலுவைக் கோப்புகள், முடிக்க வேண்டிய கோப்புகள் பற்றி விவாதிப்பது, மனித வள மேம்பாடு சார்ந்த பயிற்சி பெறுவது, அனைவரும் அடையாள அட்டை அணிவது, வாரம் ஒருநாள் சீருடையில் வருவது, அனைத்து சார்நிலை அலுவலகங்களும் ஒரே இடத்தில் அமையும் வகையில் ஒருங்கிணைந்த அலுவலக வளாகம் கட்ட நடவடிக்கை மேற்கொள்வது, அரசுக்குக் கூடுதல் செலவினம் ஏற்படாத வகையில் சார்நிலை அலுவலகங்களை மேம்படுத்துவது, அலுவலகத்தின் முன்புறம் அழகான தோட்டம் அமைப்பது, ஒவ்வொருவரின் பிறந்த நாள் அன்றும் சம்பந்தப்பட்டவருக்கு வாழ்த்துச் சொல்வது, அனைவரும் குடும்பத்தோடு சுற்றுலா செல்வது எனச் சொல்லிக்கொண்டு போகலாம்.</div>
<div style="text-align: justify;">
ஒவ்வொரு கோப்பினையும் பதிவு எழுத்தர் தொடங்கி பிரிவு உதவியாளர் வழியாகக் கண்காணிப்பாளர், நேர்முக உதவியாளர் வரை வந்து கடைசியாகக் கையெழுத்துப் போட்டு முடிப்பவர் அலுவலர்தான். எனவே, நம் அலுவலகத்தின் கடைசி ஊழியன் என்றே என்னைக் கருதுகிறேன். அதனால், கைகளை உயர்த்தியும் கூப்பியும் நீங்கள் செலுத்தும் மரியாதையைவிட உங்கள் கடமையில் நீங்கள் காட்டும் ஈடுபாடும் உழைப்புமே எனக்கான வணக்கங்கள்.</div>
<div style="text-align: justify;">
எங்கு விரைவாக வேலை நடக்கிறதோ அங்கு பணிச்சுமையும் கூடுதலாகத்தான் இருக்கும். எட்டு மணி நேர வேலை என்பது உடலுக்கும் அலுவலகத்திற்கும் மட்டும் தான். நம் உள்ளத்திற்கு இல்லை. இப்படிச் சொல்வதில் உங்களுக்கு உடன்பாடில்லாமல் போகலாம். வீட்டில் இருக்கும் நேரத்தில் ஒரு நிமிடமேனும் ஏதாவதொரு வகையில் அலுவலகத்தை நினைக்கும்படி ஆகிவிடுகிறது. சில கோப்புகளின் கொடிவைத்த பக்கங்கள் நம் நினைவைக் குடைந்து கொண்டே இருக்கின்றன. யாராவது ஓரிருவர் நம் பதவியைச் சொல்லி உசுப்பேற்றி விடுகிறார்கள். சிலர் நம் கனவிலும் வந்து ஆணை பிறப்பிக்கிறார்கள். வெகுசிலர் ஆதரவாய்ப் பேசுகிறார்கள். காற்றைப் போல, கடல் அலையைப் போல ஆகிவிட்டது நம் இருப்பு.</div>
<div style="text-align: justify;">
பணிந்து சமர்ப்பிக்கப்படும் அலுவலகக் குறிப்புகளில் மினுக்கும் பாவனை நட்சத்திரங்களை உங்கள் மீதான அன்பு காட்டிக்கொடுத்துவிடும். இயல்பாக இருப்பதும் ஒருவருக்கொருவர் விசுவாசத்துடன் விவாதம் செய்வதும் மனிதத் தவறுகளைத் திருத்திக் கொள்வதும் நம் அலுவலக நடைமுறை ஆகவேண்டும். அனைத்துப் பிரிவுகளின் அனுப்புகையும் சுத்த நகலாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் பக்குவம் நம்மிடம் உள்ளது. நாளை முதல் நமக்கு மரியாதையும் கௌரவமும் நமது நடவடிக்கையால் வந்துசேரட்டும். இதுவே நமது பணிப்பண்பாடு ஆகட்டும்.</div>
<div style="text-align: justify;">
எரிந்து விழும் வார்த்தைகளையும் சிரிக்க மறந்த உதடுகளையும் இரக்கம் பிறக்காத கண்களையும் கேட்க மறுக்கும் காதுகளையும் வெறுப்பை உமிழும் நாவுகளையும் கொண்டவை அலுவலக முகங்கள் என்னும் பொத்தாம்பொதுவான கருத்து நிராகரிக்கத் தக்கது. அந்த வழக்கமான முகங்கள் இப்போது இருப்புக் கோப்பிலும் இல்லை. ஆவணக் காப்பறையில் மறைந்திருக்குமாயின் நிரந்தரமாக அவற்றைக் கழிவு செய்துவிடலாம். கடமையைச் செய்வதில் கருணையுடன் கூடிய மென்மையும் மறுப்பதில் நளினத்துடன் கூடிய உறுதியும் பிறக்கட்டும். இதுவே நடப்புக் கோப்பின் குறிப்பாகட்டும்.</div>
<div style="text-align: justify;">
உங்களின் சுருக்கொப்பம் பலரின் மனப் பிதுக்கங்களுக்கு மருந்து போடட்டும். மலரும் இந்தப் புத்தாண்டு உங்களுக்குப் புதிய சிந்தனைகளையும் புத்துணர்வையும் கொண்டுவந்து சேர்க்கட்டும். அனைவர்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.</div>
<div style="text-align: justify;">
ஒப்பம்</div>
<div style="text-align: justify;">
அன்னார்</div>
<div style="text-align: justify;">
…அன்னாருக்காக</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>பெறுநர்</b></div>
<div style="text-align: justify;">
தங்கள் பணித்திறனால் வியாபித்து அலுவலகத்திற்கு ஒளியேற்றும் அனைத்துப் பொறுப்பாளர்கள்</div>
<div style="text-align: justify;">
<b>நகல்</b></div>
<div style="text-align: justify;">
1.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சவால்களை நளினமாய்ப் புறந்தள்ளி தமது இருப்பின் ஏகாந்தத்தில் கரையும் முன்னோடிகளுக்குத் தகவலுக்காகப் பணிந்தனுப்பப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
2.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>விதிகளையும் சட்டங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் மனப் பதிவேடுகளுக்கு உள்ளம் கனிய அனுப்பப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
3.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>கோப்பின் முகத்தில் பேனா வருடும் ஒவ்வோர் எழுத்திலும் கடைசி மனிதனைக் காணும் கரங்களுக்குத் தொடர் நடவடிக்கைக்காக அன்புடன் அனுப்பப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
4.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அலுவலக இருப்புக்கு.</div>
<div style="text-align: center;">
&&&&&</div>
<div style="text-align: center;">
நன்றி: காக்கைச் சிறகினிலே ஜனவரி 2015</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-48714022615745859382014-11-04T14:49:00.001+05:302014-11-04T15:20:51.909+05:30வருகையின் பதிவுகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjRnPvoM5J7bGPlpkJLGpRNb4nJvOLMH1KksXoqSUi0A-tM8gWWs2p3SZKIA0ne5wGrMFSwP4dZaXh7A-Grkf3xJQwCzoFOe_fd31LOAs6dAV-bFsacuqLDOJUgBHLbtKdQXNVrJQUiohD/s1600/varugaiyin_2183263f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjRnPvoM5J7bGPlpkJLGpRNb4nJvOLMH1KksXoqSUi0A-tM8gWWs2p3SZKIA0ne5wGrMFSwP4dZaXh7A-Grkf3xJQwCzoFOe_fd31LOAs6dAV-bFsacuqLDOJUgBHLbtKdQXNVrJQUiohD/s1600/varugaiyin_2183263f.jpg" height="252" width="400" /></a></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<div style="text-align: justify;">
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலைமகள் கல்லூரி உயர்நிலைப் பள்ளி, புகழ்பெற்ற தமிழறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், இசை மேதைகள், சமயச் சான்றோர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பேரறிவாளர்கள் பலருடைய பாதம்பட்ட இடமாகும். இப்பள்ளியின் பார்வையாளர் பதிவேடே இதற்கான சான்று.</div>
<div style="text-align: justify;">
</div>
<a name='more'></a></div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<div style="text-align: justify;">
கொப்பனாபட்டி அ.மெ. மெய்யப்பச் செட்டியார் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது ராமநாதன் கல்லூரி என்னும் மகளிர் பள்ளியைப் பார்த்து வந்தார். அதே போல் தம் பகுதியிலும் ஒரு பள்ளியை நிறுவ வேண்டும் எனக் கருதிய அவர் 1935 (பின்னாளைய ஆசிரியர் தினம்) செப்டம்பர் 5-ம் தேதி, பெண் குழந்தைகளுக்காகக் கலைமகள் கல்லூரி என்னும் பெயரில் உண்டு உறைவிடப் பாடசாலையைத் தொடங்கினார். அந்தக் காலத்தில் பெண்களுக்கென பிரத்யேகமாகக் கல்வி நிறுவனம் ஏற்படுத்த மிகுந்த துணிச்சல் வேண்டும்.</div>
</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<div style="text-align: justify;">
இது முதலில் அவரது இல்லத்தின் ஒரு பகுதியில் பெண்கள் குருகுலமாகத் தொடங்கப்பட்டுள்ளது. 1939-ம் ஆண்டு வாக்கில் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் கலைமகள் திருவுருவத்துடன் கூடிய வழிபாட்டு மண்டபம், நூலகம், கல்லூரிக் கட்டிடம், மாணாக்கர் உறையுள், உண்டிச் சாலை, அடுக்களை, பாற்பசுச் சாலை, பண்ட சாலை, ஆசிரியைகள் தங்குமிடம், விருந்தினர் இல்லம், விளையாட்டிடம், வைத்திய சாலை ஆகிய கட்டமைப்பு வசதிகளுடன் படிப் படியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.</div>
</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<div style="text-align: justify;">
<b style="outline: none;">பல துறைக் கல்வி</b></div>
</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<div style="text-align: justify;">
இங்கு தமிழ் இலக்கிய இலக்கணங்கள் மட்டுமன்றி ஆங்கிலம், கணக்கு, இயற்கை நூல், பொது அறிவு, வாய்ப்பாட்டு, வீணை முதலான சங்கீதம், பின்னல், தையல், சமையல் முதலியனவும் கற்பிக்கப்பட்டுள்ளன. 3 முதல் 8 வரை ஆறு வகுப்புகளும் பின்பு கலைச்செல்வி அதற்கு மேல் கலைமணி என்னும் பெயர்களில் தலா இரண்டாண்டு வகுப்புகளும் நடை பெற்றுள்ளன.</div>
</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<div style="text-align: justify;">
அதே பெயர்களில் பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஏழு பெண் குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட இப்பாடசாலைக்குப் பண்டிதமணி (11.01.1936) வந்திருந்தபோது ஐந்தாம் வகுப்பு வரை 14 பேர் பயின்று வந்துள்ளனர். ஒருமுறை திரு.வி.க. இங்கு வந்திருந்தபோது (3.11.1947) 200 பேர் படித்து வந்துள்ளனர். வெள்ளி விழாவின்போது (1960) 142 பேரும் கல்வி பயின்றுள்ளனர். தற்போது இங்கே 276 பேர் படித்து வருகின்றனர்.</div>
</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<div style="text-align: justify;">
<b style="outline: none;">அறிஞர்களின் நினைவில்</b></div>
</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<div style="text-align: justify;">
இரண்டாவது தடவையாக உ.வே.சா., கலைமகள் திருவுருவச் சிலை திறப்பு விழாவுக்கு 1939-ல் இங்கு வந்துள்ளார். அப்போது அவர் ஆற்றிய உரை வெள்ளிவிழா மலரில் இடம்பெற்றுள்ளது. அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற (19.3.1961) வெள்ளிவிழாவில் தெ.பொ.மீ. (முதலில் வந்தது 12.12.1947), கி.வா.ஜ., பொள்ளாச்சி நா.மகாலிங்கம் முதலானோர் கலந்துகொண்டுள்ளனர்.</div>
</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<div style="text-align: justify;">
கி.வா.ஜ. முதன்முறை வந்தபோது (23.3.48) அறுசீர் விருத்தமும் அடுத்தமுறை எண்சீர் விருத்தமும் பாடியிருக்க, கிருபானந்த வாரியார் (26.6.64) நேரிசை வெண்பா பாடியுள்ளார். லேனா தமிழ்வாணன் இங்கு படித்த தன் தாயார் மணிமேகலை தமிழ்வாணன் வாயிலாகத் தான் பெற்ற தமிழறிவு குறித்து உணர்ச்சிவயப்பட்ட நிலையில் தான் வந்த தேதியை 31.6.2004 எனத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். (ஜூன் மாதத்துக்கு 31-ம் தேதி இல்லை) ராஜாஜி, ராய.சொக்கலிங்கம், நீ.கந்தசாமி, டாக்டர் முத்துலட்சுமி, ந.மு.வேங்கடசாமி நாட்டார், சோமசுந்தர பாரதி, ஸங்கீத ரத்னாகரம் அரியக்குடி ராமானுஜய்யங்கார், வீணை சாம்பசிவய்யர், டாட்டன்ஹாம், சித்பவானந்தர், விபுலானந்தர், அகிலன், (சிட்டி) பெ.கோ.சுந்தரராஜன், சோமலெ, நெ.து.சுந்தரவடிவேலு, சிட்டிபாபு, வெ.சாமிநாத சர்மா, மாயாவி முதலானோர் இங்கு வருகை தந்துள்ள மற்ற பிரபலங்கள் ஆவர்.</div>
</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="margin-left: 1em; margin-right: 1em;">
<img alt="" src="http://tamil.thehindu.com/multimedia/archive/02183/kuripu_2183264a.jpg" height="290" style="border: 0px; margin: 0px; outline: none; padding: 0px; vertical-align: bottom;" width="400" /></div>
<br />
<div style="text-align: justify;">
</div>
</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<div style="text-align: justify;">
<i style="outline: none;">விபுலாநந்த அடிகள் வருகைக் குறிப்பு</i></div>
</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<div style="text-align: justify;">
பார்வையாளர் பதிவேட்டில் மேற்கண்டவற்றைத் தவிர சிலரது கடிதங்களும் ஒட்டி வைக்கப்பட்டுள்ளன. இக்கல்வி நிறுவனத்தை நேரில் பார்த்துவிட்டுச் சென்றவர்கள் தாம் கண்டு வியந்ததையும், சிலர் தாம் கேள்விப்பட்டதையும் கடிதங்கள் வாயிலாகத் தெரிவித்துள்ளனர்.</div>
</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<div style="text-align: justify;">
<b style="outline: none;">உ.வே.சா-வின் கடிதம்</b></div>
</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<div style="text-align: justify;">
கலைமகள் சிலை திறப்பு விழாவுக்கு வந்துசென்றவுடன் சென்னையில் இருந்து உ.வே.சா. ஒரு கடிதம் எழுதியுள்ளார். அன்றைய இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி (25.04.1948) தான் கல்கத்தாவில் இருப்பதாகவும் தன்னால் பட்டமளிப்பு விழாவிற்கு வர இயலாத காரணத்தால் தனக்குப் பதிலாகத் தன் நண்பர் ரசிகமணி டி.கே.சி-யை அனுப்புவதாகவும் அவரை வைத்து விழாவை இனிதே நடத்துமாறும் தெரிவித்துள்ளார். அவரே பிறிதொருமுறை (02.09.1948) அமைச்சர் ராஜன் மற்றும் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவுக்குப் புதுடெல்லியில் இருந்து வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.</div>
</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<div style="text-align: justify;">
என்.எஸ். கிருஷ்ணன் தன் துணைவியார் டி.ஏ.மதுரம் இங்கு வந்திருந்தபோது (09.09.1956) நடத்தப்பட்ட ஓரங்க நாடகத்தையும் அவர் மீது காட்டிய அன்பையும் நினைவுகூர்ந்து வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.</div>
</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<div style="text-align: justify;">
<b style="outline: none;">குறிப்பிடத்தக்க ஆவணம்</b></div>
</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<div style="text-align: justify;">
கலைமகள் கல்லூரி உயர்நிலைப் பள்ளியின் பார்வையாளர் பதிவேடு இங்கு வருகை தந்த/ கடிதம் எழுதிய உ.வே.சா. முதலிய ஜாம்பவான்களின் கருத்துகள், பாடசாலையின் அமைப்பு, பாடத்திட்டம், பிற செயல்பாடுகள், கற்பித்த ஆசிரியர்கள், கல்வி பயின்ற பெண்மணிகள் முதலிய தகவல்களை அறிவதற்கான குறிப்பிடத்தக்க ஆவணமாக விளங்குகிறது.</div>
</div>
<div class="body" style="background-color: white; color: #3b3a39; font-family: Latha, Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 12px; line-height: 20px; outline: none;">
<div style="text-align: justify;">
<i style="outline: none;"><b style="outline: none;">நன்றி: http://tamil.thehindu.com 02.11.2014</b></i></div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-79582289223862174362014-10-04T10:45:00.003+05:302014-10-04T10:50:16.546+05:30வல்லிக்கண்ணன் கடிதங்கள் 8 <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வல்லிக்கண்ணன்<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சென்னை 1-9-2001<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
...... வணக்கம். உங்கள் 24-8-2001 கடிதம் 27ல் வந்தது. மகிழ்ச்சி. 25 அன்று புக் போஸ்டில் ‘கவிக்கோ’ இரண்டாவது இதழ் அனுப்பினேன். நீங்கள் இங்கு வந்த போது, அதை நான் முழுமையாகப் படித்திருக்கவில்லை. ராபர்ட் ஃபிராஸ்ட் பற்றி ஆக்டேவியா பாஸ் எழுதியதை படிக்க வேண்டியிருந்தது. </div>
<div style="text-align: justify;">
</div>
<a name='more'></a><span style="text-align: justify;"> </span><br />
<br />
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5ep9iEc49en8Y1tYOeLjqvWVO2JPBM1Rz9QxzJIcEGPrH_mo0dp7ZM8moAcmYzDigPHgqmgh8L45_cg7BzC4_rU3VBeABnk0JH0c8EZknNcvwiT-cHDGGre3SP0MKsrCyCKeqhPYz6N0O/s1600/kathaisolli.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5ep9iEc49en8Y1tYOeLjqvWVO2JPBM1Rz9QxzJIcEGPrH_mo0dp7ZM8moAcmYzDigPHgqmgh8L45_cg7BzC4_rU3VBeABnk0JH0c8EZknNcvwiT-cHDGGre3SP0MKsrCyCKeqhPYz6N0O/s1600/kathaisolli.jpg" height="200" width="138" /></a>பிறகு 28ஆம் தேதி ‘கதைசொல்லி’ (9) அனுப்பினேன். ‘கதை சொல்லி’ பற்றி நாம் பேசிக்கொண்டோம். இதழ் எனக்கு வருவதில்லை என்று சொன்னேன். இப்படியே பெங்களூர் நண்பர் ஒருவருக்கும் ஒரு சமயம் எழுதியிருந்தேன். அதனால், சமீபத்தில் வந்த ‘கதை சொல்லி’ 9ஐ அவர் எனக்கு அனுப்பும்படி செய்திருந்தார். ( புதுச்சேரிக்கு பணம் அனுப்பி, இதழை எனக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டிருந்தார்.) இதழ் வந்தது. படித்தேன். நன்றாக, தரமாகத் தான் இருக்கிறது. இதழை உங்களுக்கு அனுப்பினேன். பெங்களூர் A.K. பாலு என்பவருக்கு ‘நதிக்கரையில் தொலைந்த மணல்’ அனுப்பினேன். கிடைத்தது, நன்றி என்று எழுதினார். கருத்து தெரிவிக்கவில்லை.</div>
<div style="text-align: justify;">
தி.க.சி.யும் அப்படித் தான். ரொம்ப சந்தோஷம். கவிஞருக்கு என் வாழ்த்துகள் என்று மட்டும் எழுதினார். சேலம் மாவட்டம் சந்தியூர் கோவிந்தன், கவிதை நூல் பற்றி விமர்சனம் எழுதி சகாராவுக்கு அனுப்பிவிட்டேன் என்று தெரிவிக்கிறார். நூல் பற்றி எனக்கு எதுவும் எழுதவில்லை. திண்டுக்கல் மா. கமலவேலன் பாராட்டி எழுதியிருக்கிறார். ஒன்றிரண்டு கவிதைகள் தான் படித்தேன்; பிறவற்றையும் படித்த பிறகு விரிவாக எழுதுவேன் என்று கூறியிருக்கிறார். இராமேஸ்வரம் முகவை முனீஸ், புத்தகம் தபாலில் வந்து சேரவில்லை என்று அறிவித்துள்ளார். மற்றவர்கள், கிடைத்தது என்றுகூட எழுதவில்லை. உலகம் பலவிதம். மனிதர் இயல்புகள் ரகம் ரகம். நண்பர்கள் வாழ்க.</div>
<div style="text-align: justify;">
புலியூர் முருகேசன் திருமணக் கடிதம் நேற்று வந்தது. சந்தோஷம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgivNrccodWc2a86kbuYa_jH8IRLWiGs6Noc39vR7qoW-MM5EqBnZeEzfB41uF59WT4WgNBxXhL8cvt2DZsHLNhpJQGELEN4q3PblW7-OpxYCZ7kftDhrWdPD3iNrTuThVrpt801VQnTafJ/s1600/vk.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgivNrccodWc2a86kbuYa_jH8IRLWiGs6Noc39vR7qoW-MM5EqBnZeEzfB41uF59WT4WgNBxXhL8cvt2DZsHLNhpJQGELEN4q3PblW7-OpxYCZ7kftDhrWdPD3iNrTuThVrpt801VQnTafJ/s1600/vk.jpg" height="162" width="200" /></a> ‘சிறியன சிந்தியாதான்’ படித்துவிட்டு, உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பதுக்காக நன்றி. மகிழ்ச்சி. அந்தப் புத்தகம் அனைத்துப் பத்திரிகைகளிலும் சிறந்த பாராட்டுதலைப் பெற்றுள்ளது. முக்கியமாக ‘நான் நடந்த பாதை’. படித்தவர்கள் வியப்புடன் பாராட்டி மகிழ்கிறார்கள். எனக்கும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது. யார் யாரோ எப்படி எப்படி எல்லாமோ வாழ்கிற- வாழ ஆசைப்படுகிற சமூகத்தில், வசதிகள் இல்லாத சூழலிலும் என் மனசுக்குப் பிடித்த காரியங்களை செய்து கொண்டு என் இஷ்டம்போல் சந்தோஷமாக இத்தனை வருடங்கள் வாழ முடிந்திருப்பதே பெரிய விஷயம் தான். அதற்காக ‘Life Force’க்கு நான் நன்றி கூறுகிறேன்.</div>
<div style="text-align: justify;">
அப்புறமென்ன! நான் நலம். அண்ணியும் பிள்ளைகளும் சுகம். சென்னை நிலைமைகள் எப்பவும் போல் தான். வெயிலும் புழுக்கமும் அதிகம். சரியான மழை இல்லை. எப்பவாவது லேசாகத் தூறுகிறது. அது வெப்பத்தை அதிகப்படுத்துகிறது. தெருக்கள் சுற்றுப் புறங்களை அசிங்கப்படுத்துகிறது. கொசு உற்பத்திக்குத் துணைபுரிகிறது. </div>
<div style="text-align: justify;">
நீங்களும் குடும்பத்தினரும் நண்பர்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ‘எரிமலை’ பிரான்ஸ்- பாரிசில் அச்சாகி வருகிறது. சந்தாப்பணம் அனுப்புவதெனில், ஃபாரின் எக்ஸ்சேஞ் விவகாரங்கள் இருக்கும். ‘எரிமலை’ பற்றிய உங்கள் எண்ணங்களை ‘ஏரோகிராம்’ (ரூ.8.50) தாளில் எழுதி அவர்களுக்கு அனுப்புக. ‘பயணம் புதிது’ ஒன்றிரு இதழ்களையும் அனுப்பலாம். ‘எரிமலை’ இதழை தொடர்ந்து அனுப்பும்படி கேட்டால், அனுப்புவார்கள். </div>
<div style="text-align: justify;">
அன்பு - வ.க. </div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-90338438307681928322014-09-17T18:53:00.000+05:302014-09-17T19:01:45.144+05:30எந்தையும் தாயும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் வருகிறது. நாம் பிற தினங்களைக் கொண்டாடுகிற அளவிற்கு நமக்கான தினத்தைப் பிறர் யாரும் கொண்டாடுவதில்லை. கொண்டாடுகிற அளவிற்கு நாம் இல்லையா அல்லது சமூகம் நம்மைக் கொண்டாட மறந்துகொண்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. இருக்கட்டும். வாருங்கள் நம்மை நாமே கொண்டாடிக்கொள்வோம்.</div>
<div style="text-align: justify;">
</div>
<br />
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
நாம் எத்தனையோ ஆசிரியர்களிடம் பாடம் கற்றிருப்போம். சராசரி ஆசிரியர்களின் பெயர்கள் மறந்து கூடப் போயிருக்கும். ஒருசில ஆசிரியர்கள் வெறும் பெயர்களாக மட்டுமே எஞ்சியிருப்பர். சிலர் மட்டும்தான் மாணவர் சிகரம் தொடத் தாம் படிக்கட்டாகி அடுத்து வரும் மாணவர்க்காய்க் காத்திருப்பர். அப்படிப்பட்ட ஆசிரியர்களைப் பற்றிச் சொல்ல ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ இருக்கும். </div>
<div style="text-align: justify;">
என் திசைகளுக்குச் சிறகுகள் முளைக்க வைத்த - என்னில் நடமாடும் - ஆசிரியர்களைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. அவர்கள் இல்லாவிட்டால் எனக்கு ஏது இத்தனை உயரம்? இன்று என்னுடைய கல்வித் தகுதி வேண்டுமானால் அவர்களை விடக் கூடுதலாக இருக்கலாம். அவை வெறும் சான்றிதழ்கள்தான்.</div>
<div style="text-align: justify;">
சான்றிதழ்கள் மட்டுமே ஒருவனைச் சான்றோன் ஆக்குவதில்லை. சொல்லிக் கொடுத்த ஆசிரிய ஆசிரியைகளின் அரவணைப்பும் வாஞ்சையும் வழிகாட்டலும்தான் படித்தவனைப் பண்பாளனாக உச்சம் தொட வைக்கிறது. நான் என் ஆசிரியர்களின் தோளில் ஏறி நின்றுகொண்டுதான் வானம் பார்க்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ளாவிட்டால் படித்தவன் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தம் இல்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>உயர்ந்த வாத்யார்</b> </div>
<div style="text-align: justify;">
தமிழ் எழுத்துகள் இடமிருந்து வலமாகச் செல்லும் வரிசை முறை உடையவை. க, கா, கி, கீ … என உயிரெழுத்து வரிசை முறையைப் பின்பற்றி முதலில் க வரிசை, பின் ச வரிசை என்றவாறு கற்பிக்கப்பட வேண்டும். இயற்கைக்கு முரணாகச் சிந்திக்கிற காலம் இது. இப்போது தமிழ் நெடுங்கணக்கை க,ங,ச,ஞ, … என மேலிருந்து கீழாகச் சொல்லிக் கொடுத்து எழுத்துக் கற்பித்தல் வரிசையையே செயற்கையாக மாற்றிவிட்டார்கள். குழந்தைகள் தமிழ் எழுத்துருக்களை அடையாளம் காணமுடியாதபடி தடுமாறுவதற்கு இதுவும் ஒரு காரணம். </div>
<div style="text-align: justify;">
அதோ இன்னும் என் கண்முன்னால் ஒன்னாப்புக்கும் ரெண்டாப்புக்கும் நடுவில் பிரம்புடன் புறங்கையைக் கட்டியபடி நடைப் பயிற்சி செய்கிறாரே அவர்தான் அந்தோணிசாமி வாத்யார். குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக வாய்பாடு சொல்லிக் கொண்டிருக்கும்போது வாயில் எதையோ முணுமுணுத்தபடி நடப்பார். குட்ட வாத்தியார் எனப் பெரும்பாலோரால் அறியப்பட்டாலும் என் மனத்தில் உயர்ந்து நிற்பவர். ஒன்னாம் வகுப்பில் ஆனா ஆவன்னா சொல்லித்தந்து என் கண்ணைத் திறந்து வைத்தவர் அவர்தான்.</div>
<div style="text-align: justify;">
ஜெகதாபி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்று ஓட்டுக் கட்டிடங்கள் இருந்தன. தெற்குப் பக்கம் உள்ள கட்டிடத்தில் முதல் மூன்று வகுப்புகள் செயல்பட்டன. </div>
<div style="text-align: justify;">
அந்தோணிசாமி வாத்யார் முதலில் உயிர் எழுத்தையும் மெய் எழுத்தையும் சொல்லித்தருவார். அவை பரிச்சயமான பின்னர் கிழக்குச் சுவரில் இருந்த நீண்ட கரும்பலகையில் தமிழ் நெடுங்கணக்கைக் கட்டம் போட்டுக் கொட்டை எழுத்தில் எழுதிப் போட்டுவிடுவார். கொஞ்ச நாளில் மாணவர்கள் கையில் பிரம்பைக் கொடுத்து கரும்பலகையில் தொட்டுக் காட்டி இடமிருந்து வலமாக ஒவ்வொரு எழுத்தாகச் சொல்ல வைப்பார். இடையிடையே எழுத்துப் பயிற்சியும் நடக்கும். </div>
<div style="text-align: justify;">
பலருக்கும் வாயில் வர மறுக்கும் ழகரத்தை என் நாவில் எழுதிப் பழக்கியவர் அவர். அம்மா இங்கே வா வா, கை வீசம்மா கை வீசு, ஆத்தி சூடி ஆகிய பாடல்களைக் குழுவாக இழுத்து இழுத்து ராகம் போட்டுச் சொல்லுவோம். உருப்போட வைத்தது அந்தோணிசாமி வாத்யார்தான். பேச்சுத் தமிழில் இருந்து எழுத்துத் தமிழுக்கு எங்கள் கை பிடித்து அழைத்துப் போனவர் அவர்.</div>
<div style="text-align: justify;">
ஆரம்ப எண் கணிதமும் கூட்டல் வாய்பாடுகளும் அத்துபடியானது அவரால்தான். ஏறு வரிசையில் ஒண்ணு, ரெண்டு…. சொல்வது எளிது. இறங்கு வரிசையில் சொல்ல கொஞ்சம் நாள் ஆகும். சொல்லும் வரை விடமாட்டார்.</div>
<div style="text-align: justify;">
<b>கதை வாத்யார்</b> </div>
<div style="text-align: justify;">
நாலாம் வகுப்பில் என்ன பாடம் எடுத்தார் கந்தசாமி வாத்யார் என்பது நினைவில் இல்லை. ஆனால் அவர் சொன்ன கதைகள் இன்னும் கொம்புத் தேனாய் இனிக்கின்றன. அவரது பாடவேளை என்றாலே வகுப்பறையில் இருந்து மரத்தடிக்குப் போய்விடுவோம். பரந்த வெளியில் இதமான காற்றில் உட்கார்ந்து கதை கேட்பது என்றால் கேட்கவா வேணும். </div>
<div style="text-align: justify;">
வாத்யார் உட்கார மரத்தடிக்கு நாக்காலி வந்தவுடனேயே ஆவல் தொற்றிக் கொள்ளும். வணக்கம் போட்டு முடித்தவுடன் கதை சொல்லச் சொல்லி நச்சரிக்கத் தொடங்கி விடுவார்கள். கந்தசாமி வாத்யார் மூக்குப்பொடி டப்பாவை எடுப்பார். அப்படி எடுத்துவிட்டால் அன்றைக்குக் கதை உண்டு என்பது நிச்சயம். </div>
<div style="text-align: justify;">
என்ன கதை சொல்லலாம்? எனக் கேட்டுவிட்டு டப்பாவை ஒரு பார்வை பார்ப்பார். அதற்குள் பிள்ளைகள் மறுபடியும் நச்சரிக்க ஆரம்பிப்பார்கள். இருங்கடா… கத எங்கயோ ஒளிஞ்சுக்கிச்சு.. என்றபடியே டப்பாவை வலது ஆள்காட்டி விரலால் மூன்று தட்டுத் தட்டுவார். மூடியைத் திறந்தவாறு ஆங்… சிக்கிக்கிச்சு… என்று சொல்லி ஒரு சிட்டிகை எடுத்து சர்… சர்… என இரண்டு மூக்கிலும் உறிஞ்சுவார். ம்ம்… கத வந்துருச்சு… என ஆரம்பிப்பார். </div>
<div style="text-align: justify;">
ராஜா ராணிக் கதைகள், தெனாலி ராமன் கதைகள், அக்பர் பீர்பால் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், விலங்கு, பறவைக் கதைகள் என வகை வகையாய்ச் சொல்லுவார். அண்டரண்டாப் பச்சி கதைதான் ரொம்ப நீளம். ஆறேழு வாரங்களுக்கு நீளும். </div>
<div style="text-align: justify;">
கதையை இவர் சொல்கிறாரா அல்லது கதை தன்னையே சொல்லிக் கொள்கிறதா எனப் பிரித்துப் பார்க்க முடியாதபடி கதை நடக்கும். மலைகளும் முகில்களும் கடல்களும் எங்களுக்கு இடையே லாவகமாய்ப் புகுந்து புகுந்து போகும். அரக்கன் அரக்கிகளின் அகோர உருவங்கள் வந்து வந்து பயம் காட்டும். அவர் படித்ததா கேட்டதா அல்லது அவரே அவ்வப்போது புனைந்து சொல்வதா எனத் தெரியாதபடி கதை சொல்வதில் சமர்த்தர்.</div>
<div style="text-align: justify;">
நாலாம் வகுப்பில் செல்லையா வாத்யார் அறிவியல் போதித்தார். கோபக்காரர். ஆனால், புரியும்படி சொல்லித் தருவார். எனக்குக் கொஞ்ச நாட்கள் உடல்நலம் சரியில்லாமல் போனபோது நான் வீடு செல்லத் துணையாக எங்கள் பகுதியிலிருந்து பள்ளிக்கு வரும் சுப்பிரமணியை அனுப்பி வைப்பார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>பாடகர் கோவிந்தன்</b></div>
<div style="text-align: justify;">
ஆறாம் வகுப்பில் தமிழாசிரியர் கோவிந்தனை மறக்கவே முடியாது. பார்வையற்றவர். அருமையாகப் பாடுவார். தனியாக திருச்சியில் ஓர் இசைக்குழுவில் பாடகராக இருந்தார். சில மாதங்களுக்கு முன் பேருந்திலிருந்து இறங்கும்போது தவறி விழுந்து விபத்தில் இறந்துவிட்டார். </div>
<div style="text-align: justify;">
நாங்கள் படிக்கப் படிக்க அவர் விளக்கம் சொல்லுவார். புள்ளி புள்ளியாய்த் துளைகள் இடப்பட்ட ப்ரைலி புத்தகம் வைத்திருப்பார். அதைத் தொட்டுத் தொட்டு செய்யுள் நடத்துவதும் உண்டு. நாங்கள் அவருக்குத் தெரியாமல் அதைத் தடவிப் பார்ப்போம். ஒன்றும் பிடிபடாமல் முழிப்போம். ஏழாம் வகுப்பில் கொஞ்ச நாட்கள் வரைதான் அவரிடம் படித்தேன். </div>
<div style="text-align: justify;">
கரூர் மாவட்டதிற்கு எல்லை ஜெகதாபி. அடுத்தது திண்டுக்கல் மாவட்டம். அது லந்தக் கோட்டையில் தொடங்குகிறது. அங்கு அரசு உயர்நிலைப் பள்ளி வந்ததால் விருப்பம் உள்ளவர்கள் போகலாம் என்றனர். நான் லந்தக் கோட்டை சென்றேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>ஞானத் தந்தை</b></div>
<div style="text-align: justify;">
எட்டாம் வகுப்பில் ராமசாமி சார்தான் வகுப்பாசிரியர். ஆங்கிலமும் வரலாறு புவியியலும் நடத்துவார். அவரது துணைவியார் மார்கரெட் சரோஜினி டீச்சர். நாங்கள் சரோஜா டீச்சர் என்றே அழைப்போம். அவர்கள் கணக்குப் பாடம் நடத்தினார்கள். அவர்கள் இருவருக்கும் நான் செல்லப்பிள்ளை. அவர்கள் பாடவேளையில் நிறைய வாயாடுவேன். தொல்லையாக எண்ணாமல் சரோஜா டீச்சர் என்னை விகடகவி எனச் செல்லமாக அழைப்பார்.</div>
<div style="text-align: justify;">
ராமசாமி சார் முற்போக்கு எண்ணம் கொண்டவர். அவருக்கும் சரோஜா டீச்சருக்கும் மனமொத்த திருமணம். அவர்களுக்குப் பெண்குழந்தைதான் உண்டு. அந்த அக்கா எங்கோ வெளியூரில் படித்துக்கொண்டிருந்தார். என்னை அவர்களது மகனாக நடத்தினார்கள். ஓரிரு முறை அவர்களது வீட்டிற்குப் போனது உண்டு. அப்போது டீச்சர் தண்ணீர் கலக்காத பாலில் மணக்க மணக்க காஃபி போட்டுத் தருவார்கள். என் பிள்ளைப் பருவத்தில் அப்படியொரு காஃபியைக் குடித்துப் பார்த்ததே இல்லை. (எங்கள் வீட்டில் வறக் காப்பிதான்).</div>
<div style="text-align: justify;">
என் அக்காவை எட்டாவதோடு நிறுத்திவிட்ட அப்பா ஒரு முடிவுக்கு வந்திருந்தார். நாலு குழந்தைகளையும் படிப்பில் சமம் ஆக்கிவிடுவது என்ற ‘நல்ல’ முடிவுதான் அது. என்னையும் எட்டாவதோடு நிறுத்தி விடுவதாகச் சொல்லிக் கலக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். ராமசாமி சாரிடம் இதைச் சொல்லி நான் படிக்க விரும்புவதாகத் தெரிவித்தேன். முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும் ஒருநாள் அப்பாவை அழைத்துவரச் சொன்னார். போனோம். </div>
<div style="text-align: justify;">
முதலில் சார் வேலை பார்த்த இடம் போன்றவற்றை எல்லாம் பேசி அப்பாவை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார். பிறகு என் படிப்பைப் பற்றிப் பேசினார். நான் நன்றாகப் படிப்பதால் தொடர்ந்து படிக்க வைக்குமாறும் பத்தாம் வகுப்பு வரை அந்தப் பள்ளியிலேயே உள்ளதால் அதுவரையேனும் பையன் படிக்கட்டும் என்றும் சாரும் டீச்சரும் பலவாறு அப்பாவை சமாதானப்படுத்தினார்கள். பேசிச் சமாளிக்க முடியாமல் திகைத்துப் போன அப்பா அரை மனசோடு சம்மதம் சொல்லிவிட்டு வந்தார். <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhW-wgAiU8xvTBciFk4-9V-Jq0gBsrZkEoMd14bSDKeI7PAIS_Vtb3NPofKy7kboKALTx33QaMKgA43Nrtz4gFTzdUuOqSZHh64LtdkPeiLlO5TtvYqnoskQFUfSFl_rSyp9_E2UZg5Rbai/s1600/Parent.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhW-wgAiU8xvTBciFk4-9V-Jq0gBsrZkEoMd14bSDKeI7PAIS_Vtb3NPofKy7kboKALTx33QaMKgA43Nrtz4gFTzdUuOqSZHh64LtdkPeiLlO5TtvYqnoskQFUfSFl_rSyp9_E2UZg5Rbai/s1600/Parent.jpg" height="248" width="320" /></a></div>
</div>
<div style="text-align: justify;">
லந்தக் கோட்டையில் பத்தாம் வகுப்பு முடித்து தேர்வுக்கு வழியனுப்பும்போது சரோஜா டீச்சர் ‘நீ இந்த மாவட்டத்துக்கே கலெக்டரா வரணும். நான் பார்க்க பெரிய ஆளா வரணும்’ என்று வாழ்த்தி வழியனுப்பினார்கள். இன்று நான் பெரிய ஆளாக வந்திருப்பதைப் பார்க்க அவர்கள் இல்லை. என் ஆசிரியர் ராமசாமி சார் மட்டும்தான் இருக்கிறார். எனது ஞானத்தந்தை அவர். எனது ஒவ்வொரு உயரத்தையும் பார்த்து உச்சிமோந்து ஆனந்தக் கண்ணீர் விடுவார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>உச்சரிப்பு உடற்கல்வி ஆசிரியர்</b></div>
<div style="text-align: justify;">
பி.ஈ.டி. தண்டபாணி சாரை உடற்கல்வி ஆசிரியர் என்றே சொல்ல முடியாது. வேட்டிதான் அதிகம் உடுத்துவார். உடற்கல்வியை விட அவர் சொல்லித் தந்தது தமிழ் உச்சரிப்பைத் தான். இது எந்தத் தமிழாசிரியரும் செய்யாதது. </div>
<div style="text-align: justify;">
ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போது உடற்கல்வி ஆசிரியரும் பதிலியாக வகுப்புக்கு வருவதுண்டு. வந்ததும் அறிவியல் புத்தகத்தை எடுத்துப் படிக்கச் சொல்லுவார். அதில் வரும் அறிவியல் செய்திகளை விவாதிப்பாரா என்றால் அதுதான் இல்லை. சொற்களின் இடையிடையே வரும் ல, ள, ழ மற்றும் ண, ந, ன வேறுபாடுகளை உச்சரித்துக் காட்டுவார். எங்களையும் உச்சரிக்க வைப்பார். சரியாக உச்சரிக்காத வரைக்கும் விடமாட்டார். அதே பகுதியைத் திரும்பத் திரும்பப் படிக்கச் சொல்லுவார்.</div>
<div style="text-align: justify;">
அவர் இருந்த காலத்தில்தான் முதன் முதலில் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. அப்படி ஒன்று இருப்பதே அப்போதுதான் தெரியும். ஆண்டு விழாவில் முக்கிய வேலைகளை அவர்தான் கவனித்தார். உடன் படித்த கூடலூர் பெரியசாமி தலைமையில் கட்டபொம்மன் நாடகம் போட்டோம். பெரியசாமிதான் கட்டபொம்மன். நான் ஜாக்சன் துரை. வசனம் மறந்துபோனால் மறைவில் இருந்துகொண்டு உடனுக்குடன் எடுத்துக் கொடுப்பார் தண்டபாணி சார். </div>
<div style="text-align: justify;">
படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தால் மட்டும் போதாது. உடற்கல்வியிலும் சில சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். அது அரசு வேலைக்குப் போக உதவும் என்பார். என்னைக் கபடி டீமில் சேர்த்துவிட்டார். சப்ஸ்டிடியூட் வீரர்களில் ஒருவனாக என்னையும் விளையாட வைத்து சான்றிதழ் பெற வைத்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>நாகராஜன் சார்</b> </div>
<div style="text-align: justify;">
பத்தாம் வகுப்பு வந்தபோது நாகராஜன் சார் அறிவியல் பாடம் நடத்தினார். பிரம்மச்சரியாக வந்த அவர் தனியாக அறை எடுத்துத் தங்கியிருந்தார். அவரது ஹார்லிக்ஸ் பாட்டில் அறைக்கு வரும் மாணவர்களால் சீக்கிரம் தீர்ந்து போகும். நான் போட்டுக் கொடுத்தாலும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார். ‘சின்னப் பசங்க… போறான் விடு’ என்பார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சின்னச் சின்ன டெஸ்ட் நிறைய வைப்பார். இரவுப் படிப்பு நடத்தினார். நான் ஆறேழு மைலுக்கு அப்பால் பொம்மனத்துப் பட்டியிலிருந்து தினமும் போக வேண்டும். முயன்றேன். களைத்துப் போனேன். அவர்தான் வாரம் ஒருநாள் வந்தால் போதும் என அறிவுரை கூறினார். நீ படித்துக் கொள்வாய். உனக்கெல்லாம் இது தேவையில்லை என்றார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>நடக்கக் கூடாதது</b></div>
<div style="text-align: justify;">
நாராயணன் சார் ஆங்கிலம் கற்பித்தார். எஸ்ஸே, பாரகிராஃப், கட்டுரை எல்லாவற்றையும் கரும்பலகையில் என்னைத்தான் எழுதிப் போடச் சொல்லுவார். அவர்தான் வகுப்பாசிரியர். ரேங்க் கார்டும் நான்தான் எழுதித் தருவேன். வெளியூரிலிருந்து வருவதால் சில சமயங்களில் வாரத்தின் முதல் நாள் மட்டும் 9.30க்கு அவரால் வர முடியாது. வெள்ளிக் கிழமை மாலையிலேயே ஏதாவது ஒரு வேலை கொடுத்து திங்கள் கிழமை காலையில் வந்ததும் வகுப்பு மாணவர்களிடம் எழுதி வாங்கும்படிச் சொல்லிவிட்டுப் போவார். </div>
<div style="text-align: justify;">
மற்றவர்களை மேற்பார்வை செய்துகொண்டே நானும் எழுத வேண்டும். இதனால் எதிர்காலத்தில் வாத்யார் வேலைக்கு மட்டும் வந்துவிடக் கூடாது என மனசுக்குள் கோடு போட்டுக் கொண்டேன். ஆனால், காலச் சுழலில் சிக்கி நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. இருப்பினும் பிற்காலத்தில் நான் ஆசிரியர் ஆனபோது அவர் கொடுத்த பயிற்சி பெரிதும் பயன்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>வாத்யார் சாபம் பொல்லாதது</b> </div>
<div style="text-align: justify;">
தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் கணிதம் போதிப்பதில் கில்லாடி. பெரியகுளம் பக்கம் அவரது ஊர். ஒரு பயிற்சியையும் விடமாட்டார். அவர் வெளியில் நின்றாலே போதும். வகுப்பே கப்சிப் ஆகிவிடும். </div>
<div style="text-align: justify;">
அவரது வகுப்பு இறுக்கமாக இருக்கும். தலைமை ஆசிரியர் என்பது ஒன்று. எப்போது எந்த சூத்திரத்தைக் கேட்பாரோ என்ற பயம் வேறு. சொல்லாவிட்டால் அருள் பொழியவில்லையே என என்னைச் சீண்டுவார். தேன் ஒழுகவில்லையே எனத் தேனம்மாளையும் நாகம் படம் எடுக்கவில்லையே என நாகராஜனையும் குத்திக் காட்டுவார். நீ நூறு மார்க் வாங்க மாட்ட போலிருக்கே என்று சொல்லுவார். நாங்கள் நூறு மார்க் வாங்க வேண்டும் என்பதைத்தான் இப்படி எதிர்மறையாக அடிக்கடி வலியுறுத்துவார்.</div>
<div style="text-align: justify;">
தேர்வு எழுதி முடிக்கும் வரை 100 வந்துவிடும் என இறுமாப்புடன் இருந்தேன். எழுதி முடித்து வெளியே பேருந்து நிறுத்தத்திற்கு வருவதற்குள் ஒரு மதிப்பெண் கேள்வி ஒன்றுக்குத் தவறான விடை எழுதிவிட்டு வந்திருப்பதை அறிந்து அழுதேன். </div>
<div style="text-align: justify;">
பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த போதும் மோகன்தாஸ் சார் சாபமிட்டபடியே கணிதத்தில் 99 தான் வந்தது. ஆசிரியர்களின் எதிர்மறை எண்ணங்கள் பலித்துவிடும் என நம்பும்படி ஆயிற்று என் அனுபவம். மாணவர்களைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும் நல்ல ஆசிரியர். கற்பித்தலில் சிறந்த ஆசிரியர். இருந்தும் அவர் கசப்பான அனுபவத்தையே ஏற்படுத்தினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>ஆல் இன் ஆல் ஆபிரகாம் சார்</b></div>
<div style="text-align: justify;">
பதினொன்று பன்னிரண்டாம் வகுப்பு உப்பிட மங்கலத்தில் படித்தேன். உப்பிட மங்கலத்தில் ஆபிரகாம் சுபாஸ் சந்திர போஸ் ஆங்கிலம் போதித்தார். அவர்தான் மனப்பாடம் செய்யாமல் சொந்தமாக ஆங்கிலத்தில் எளிதாக நாலு வரி எழுதச் சொல்லித்தந்தவர். </div>
<div style="text-align: justify;">
பழமொழிகளை விளக்கும் சின்னச் சின்னப் பத்திகளை ஆங்கிலத்தில் இயல்பாக எழுதும் வழிமுறைகளை எடுத்துக் கூறினார். கேள்வியில் இருந்தே பதில்களை வரவழைக்கும் வித்தையை உணர்த்தினார்.</div>
<div style="text-align: justify;">
பன்னிரண்டாம் வகுப்பில் கணிதத்திற்கு அவரிடம் டியூசன் சேர்ந்தேன். தேவையான கணக்குகளை மட்டும் போடச் சொல்லுவார். டியூசனுக்குப் பணம் தரத் தாமதம் ஆனாலும் கடிந்துகொள்ள மாட்டார். அவர் இளங்கலையில் இயற்பியல் பட்டதாரி என்பதால் இயற்பியல் டெஸ்டும் எழுத வைப்பார். கடைசித் தவணை டியூசன் ஃபீஸ் தராத போதும் வேறுபாடு காட்டாமல் பழகினார். நான் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தபோது தொழிற்கல்வி ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு அவர் கருவி நூலாகப் பயன்படுத்திய உளவியல் கோட்பாடுகள் (சந்தானம்) புத்தகத்தைப் பரிசாகத் தந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>கெட்டிக்காரர் கிருஷ்ணமூர்த்தி</b></div>
<div style="text-align: justify;">
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவு வந்தபோது நான் இரண்டாமிடம்தான் பெற்றேன். ஆனாலும் இயற்பியலில் நான்தான் முதல் மதிப்பெண். அதுவரை எதுவும் சொல்லாத இயற்பியல் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மகிழ்ந்துபோனார். அதுவரை அவரது அனுபவத்தில் என்னுடையது தான் அவரது மாணவர் ஒருவர் பெற்ற உயர்ந்த பட்ச மதிப்பெண். சில ஆண்டுகளுக்கு முன்புவரை கூட அந்த மதிப்பெண் முறியடிக்கப்படவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார் அவர். </div>
<div style="text-align: justify;">
தன் பாடத்தில் கெட்டிக்காரர். என்னென்ன படித்தால் என்ன வேலைக்குப் போகலாம் என்பதை உற்சாகத்தோடு சொல்லுவார். இயல்பில் நல்ல மனிதர். தனிப்பட்ட முறையில் யாரிடமும் அதிகம் பேச மாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>நிறுவனம் மட்டுமே புதிது</b></div>
<div style="text-align: justify;">
பன்னிரண்டாம் வகுப்பு முடித்தபின் பொறியியல் கல்லூரிக்குப் போகக் கலந்தாய்வுக்குத் தேர்வு பெற்றேன் இருந்தும் குடும்பச் சூழ்நிலையால் கரூர் அரசு கலைக் கல்லூரியில்தான் சேர நேர்ந்தது. ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்ததால் உடனே கல்லூரியிலிருந்து விலகி மாயனூரில் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர நேரிட்டது தனிக் கதை.</div>
<div style="text-align: justify;">
மாயனூர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமாக மாறிய நிலையில் முதல் குழுவாக நாங்கள் சேர்ந்தோம். முதியோர் இல்லம் போல இருந்த நிறுவனத்திற்கு இளைய விரிவுரையாளர்களும் ஒவ்வொருவராக வந்து சேர்ந்திருந்தார்கள். ஒருங்கிணைந்த (கரூர், அரியலூர், பெரம்பலூர்) திருச்சி, புதுக்கோட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் ஒரே நிறுவனமாகச் செயல்பட்டது.</div>
<div style="text-align: justify;">
புதிய பாடத் திட்டத்தின்படி மாயனூரில் சேர்ந்த மாணவ மாணவியர்கள் எல்லாம் தர அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள். அதனால் எங்களைச் சமாளிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறிப்போனார்கள். இரண்டு ஆண்டுகளை முடித்து வைத்து எங்களை வெளியே அனுப்புவதற்குள் திண்டாடிவிட்டார்கள். எங்களைப் பழிவாங்கும் விதத்தில் குறிப்பாக சிலருக்கு அக மதிப்பெண்களைக் குறைத்துப் போட்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>சரியான வழிகாட்டி </b></div>
<div style="text-align: justify;">
ஒரே ஆறுதல் நடராஜன் சார். வளர்ந்து வரும் இந்தியாவில் கல்வி மற்றும் பள்ளி மேலாண்மை குறித்துப் பாடம் எடுத்தார். நிறைய ஆங்கிலப் புத்தகங்களை மொழிபெயர்த்து வகுப்பு நடத்தினார். அமனஷ் வீலியின் குழந்தைகள் வாழ்க போன்ற ரஷ்யப் புத்தகங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். எனக்கு எதில் ஈடுபாடு, என்னால் எது முடியும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. </div>
<div style="text-align: justify;">
ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன் என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் எனத் தமிழாசிரியர் அரங்கநாதனிடம் ஆலோசனை கேட்டபோது பி.எஸ்.ஸி கணிதத்தைப் படிக்குமாறு கூறினார். டியூசன் வைக்க வசதியாக இருக்கும் என்றும் சிரமப்படாமல் வாழ்க்கை நடத்தலாம் என்றும் தான் பட்ட பணப் பிரச்சினைகளை எடுத்துக் கூறினார். தான் படும் துன்பம் தன் மாணவனுக்கு வந்துவிடக் கூடாதே என்ற அக்கறையில் பொருளியலை நோக்கி வழிகாட்டினார்.</div>
<div style="text-align: justify;">
நடராஜன் சாரோ நீ நன்றாகப் பேசுகிறாய், கவிதை எழுதுகிறாய், ஓரளவு புத்தகங்கள் படிக்கிறாய். எனவே பி.லிட். தமிழை எடுத்துப் படி. அதைப் படித்தால் பதவி உயர்வுக்கு பி.எட். தேவையில்லை என்றார். அதுமட்டும் அல்லாமல் நேரடியாகக் கல்லூரியில் சேர்ந்து படிக்காமல் தொலை தூரக் கல்வி முறையில் படி. இடையில் வேலை கிடைத்தாலும் படிப்பைப் பாதியில் விடவேண்டிய அவசியம் இருக்காது எனக் காரண காரியங்களுடன் எடுத்துரைத்தார். </div>
<div style="text-align: justify;">
இன்று நான் அஞ்சல் வழி மற்றும் பகுதி நேரப் படிப்பில் சேர்ந்து தமிழில் முனைவர் பட்டம் வரை பெற்றிருப்பதற்கு ஒருவகையில் காரணகர்த்தா நடராஜன் சார்தான். எந்த மாணவனுக்கு என்னவாறு வழிகாட்ட வேண்டும் என்பதை அறிந்து சொல்லும் ஆசிரியருக்குச் சரியான உதாரணம் நடராஜன் சார். அவருக்கு என் வந்தனம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>கடந்துபோக அனுமதிப்போம்</b></div>
<div style="text-align: justify;">
நான் படித்த கல்விச் சாலையில் பணியாற்றியபோதும் சிலர் எனக்கு ஆசிரியர்களாக இல்லை. சில ஆசிரியர்களின் பெயர்கள் நினைவில் இல்லை அல்லது என் நினைவில் நிற்கும் அளவிற்கு ஏதும் செய்தவராக இல்லை. சிலர் செய்தது மறக்கக்கூடியதாக இல்லை. சிலரைப் பற்றிச் சொல்வது அவ்வளவு நாகரிகம் இல்லை.</div>
<div style="text-align: justify;">
நானும் சிலகாலம் ஆசிரியராக இருந்திருக்கிறேன். ஏறத்தாழ பதினேழு ஆண்டுகள். என்னைப் பற்றியும் என் மாணவர்கள் கருத்துச் சொல்லவும் கடந்து போகவும் முழு உரிமை உண்டு. அவர்களுள் எவராவது ஒருவரின் வாழ்நாளில் அவர்கள் நினைத்துப்பார்க்கும் விதமாக நான் நடந்துகொண்டிருந்தால் அது என் ஆசிரியர்கள் எனக்குத் தந்த சீதனம். </div>
<div style="text-align: justify;">
இன்று விருதுக்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் இடத்தில் இருக்கிறேன். விருதுக்கு விண்ணப்பிப்பவர்களை எனது ஆசிரியர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். என் முன்னிலையில் பணியாற்றிக்கொண்டு இருப்பவர்களில் எனது ஆசிரியர்களை இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். அவர்கள் விருதுகளுக்கு அப்பாலும் இருக்கக் கூடும்.</div>
<div style="text-align: justify;">
நம் மாணவர்களுக்கு நம் ஆசிரியர்களால் நமக்குக் கிடைத்த வாழ்க்கையைக் காட்டிலும் மேலான வாழ்வு கொடுப்பதுதான் நமது மகத்தான பணி. எட்வர்ட் செயித் சொன்னதுபோல தனது மாணவர் தன்னைத் தாண்டிச் செல்ல அனுமதிக்கிற ஆசிரியர்களாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும் இது சமர்ப்பணம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அனைவருக்கும் என் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்</div>
<div style="text-align: right;">
05.09.14 </div>
<div style="text-align: justify;">
நன்றி: காக்கைச் சிறகினிலே செப். 2014</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-91146912240648617822014-08-30T20:53:00.001+05:302014-08-30T20:56:01.791+05:30வல்லிக்கண்ணன் கடிதங்கள் 7 <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வல்லிக்கண்ணன்<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> சென்னை 1-8-2001<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span></div>
<div style="text-align: justify;">
...... வணக்கம். ஜூலையும் போய்விட்டது. காலம் அதன் இயல்புப்படி செல்கிறது. நான் நலம். நீங்கள் நலம் தானே?</div>
<div style="text-align: justify;">
</div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
ஜூலை 16ல் கலை, நந்தவனம், தூரிகை எனும் சிற்றிதழ்கள் அனுப்பினேன். 25ல் ‘கவிக்கோ’ காலாண்டிதழின் முதல் இதழ் அனுப்பினேன். பழசு தான்.</div>
<div style="text-align: justify;">
சகாரா கவிதை நூல் பெற்றவர்களில் ஒரு நண்பர் கடிதம் எழுதியிருக்கிறார். மணலி, அரசு மேனிலைப் பள்ளி தமிழாசிரியர் – நல்லாலம் மு. இளவரசு. – ‘நதிக்கரையில் தொலைந்த மணல்’ படித்து மகிழ்ந்தேன். அச்சு, அமைப்பு, கருத்து அனைத்துமே அசத்துகின்றன. கவிஞர் சகாராவின் ஆழ்மனத்து உணர்வுகள் அற்புதமாக வெளிப்பட்டிருக்கின்றன. என்னைப் பொறுத்த வரையில் அண்மையில் படித்த கவிதை நூல்களில் இந்த நூல் தான் நெஞ்சத்தைக் கொஞ்சம் அசைத்து உள்ளது. கொச்சைச் சொற்கள் அதிகம் இடம்பெற்றுள்ள கவிதைகள் ஒரு முறைக்கு இரண்டு முறை படித்தால் தான் ரசிக்க முடிகிறது. அது தவிர்க்க முடியாதது தான். கவிஞருக்குப் பாராட்டுகள்’.</div>
<div style="text-align: justify;">
திருச்சி ‘கவிக்காவிரி’ திருவைகுமரன், ‘நதிக்கரையில் தொலைந்த மணல் கவிதைத் தொகுதி கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. கவிஞர் சகாரா உங்கள் மூலமாகத் தான் எனக்கு அறிமுகமாகிறார்’ என்று மட்டும் எழுதி முடித்துக் கொண்டார்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicE56O5GUpNYBgBOYB_qEzsoX_EUpEuvojOf-vS8oZq7wcHqan4PEoYmGhEDGrU8SzGFaUWhN-DMKydRNnu4ZtCHmxll2GXdHFJJMKpn_koI-XXzfmbriLiMjykaw-5qvrCILJaGuAQ0H5/s1600/naveenavirutsam.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicE56O5GUpNYBgBOYB_qEzsoX_EUpEuvojOf-vS8oZq7wcHqan4PEoYmGhEDGrU8SzGFaUWhN-DMKydRNnu4ZtCHmxll2GXdHFJJMKpn_koI-XXzfmbriLiMjykaw-5qvrCILJaGuAQ0H5/s1600/naveenavirutsam.jpg" height="320" width="231" /></a></div>
<div style="text-align: justify;">
இப்போது தபால் வந்தது. (11.30 மணி). அதில் உங்கள் கடிதமும் உள்ளது. உங்கள் கவிதை நூல் நல்ல வரவேற்பையும் கவனிப்பையும், பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டிருப்பது சந்தோஷ சமாச்சாரம். நல்ல விஷயங்கள் உரிய கவனிப்பைப் பெறுவது இனிய காரியம் தான். வாழ்த்துகள்.</div>
<div style="text-align: justify;">
அப்துல் ரகுமானின் காலாண்டு இதழ் ‘கவிக்கோ’வின் 1,2 இதழ்கள் மட்டுமே எனக்கு படிக்கக் கிடைத்தன. அதன் பிறகு அவர் அனுப்பி உதவவில்லை. இப்பவும் இதழ் வெளிவருகிறதா என்பது தெரியவில்லை. நன்றாகத் தான் தயாரித்திருக்கிறார். புதிய விஷயங்கள், அயல் மொழிக் கவிதைகளின் தமிழாக்கம், கவிதை பற்றிய சர்ச்சைகள் என்று. தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்தால் நல்லது தான். </div>
<div style="text-align: justify;">
அழகிய சிங்கர் நடத்தும் ‘நவீன விருட்சம்’ பார்த்திருக்கிறீர்களா? 17 வருடங்களாக நடத்தப்படும் காலாண்டிதழ். கவிதைகள் – அவர்கள் நோக்கில் புதுமைப்போக்கு கொண்டவை – இடம்பெற்றிருக்கும். அன்பு -வ.க. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-82282449310633755742014-08-16T12:47:00.000+05:302014-08-16T13:33:45.134+05:30 ஆய்தம் : அலகு பெறும் அழகு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனது முனைவர் பட்டத்திற்கான நேமிநாத ஆய்வு குறித்துப் பேச்சு வரும்போதெல்லாம் கேட்டவர்கள் கொஞ்சம் வியப்புடனும் மனசுக்குள் கேள்வியுடனும் என்னைப் பார்ப்பது உண்டு. ‘நேமிநாதமா? அப்படியொரு இலக்கண நூலா? நான் கேள்விப்பட்டதில்லையே…’ என்றவர்களும் ‘இலக்கிய வரலாறுகளில் சின்னூல் எனச் சொல்வார்களே அதுவா?’ என்று ஒரு நூற்பெயராக மட்டுமே தாம் கேள்விப்பட்டிருந்த செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டவர்களும் உண்டு.<br />
<a name='more'></a><br />
வெறும் 99 வெண்பாக்களைக் கொண்ட குட்டியூண்டு நூலில் இவன்போய் என்ன ஆய்வைச் செய்யப்போகிறான் எனச் சந்தேகித்தவர்களும் உண்டு. பிரபல எழுத்தாளரும் நண்பருமான பெருமாள் முருகனின் வழிகாட்டுதலில் வெறும் தகவலாக மட்டுமே பெரும்பாலோரால் அறியப்பட்டுள்ள நேமிநாதத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றாயிற்று.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw7d3p6mKWyrQAexVz-d2rj2uO3SimLRGB1f0WfCELLT6TTAS9e9bKyaJWh2xaoRNqbQD1pxeofQOcikDZRBvILN4y15I6CqDBbHRa-VBvDrkp7T_TxtjARyuJOBoDuvzG-S3ZwJIcsXYk/s1600/a+aa.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw7d3p6mKWyrQAexVz-d2rj2uO3SimLRGB1f0WfCELLT6TTAS9e9bKyaJWh2xaoRNqbQD1pxeofQOcikDZRBvILN4y15I6CqDBbHRa-VBvDrkp7T_TxtjARyuJOBoDuvzG-S3ZwJIcsXYk/s1600/a+aa.jpg" height="212" width="320" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
ஆய்வின்போது நேமிநாத வெண்பாக்களின் சீர் பிரிப்பு பற்றிப் பார்க்க வேண்டி வந்தது. ஆய்த எழுத்து வரும் இடங்களில் நூல் முழுதும் ஒருபடித்தான தன்மை இல்லாத சூழலை எதிர்கொள்ள நேரிட்டது. ஆய்த எழுத்தைச் சில இடங்களில் உயிர்போலவும் சில இடங்களில் மெய்போலவும் கொண்டால் மட்டுமே தளை சிதையாமல் சீர்பெறுகிறது என்பதைக் காண முடிந்தது. இதுபோல் வேறெந்த நூலிலாவது வருகிறதா எனத் தேடியபோது திருக்குறளில் ஆய்த எழுத்து தனி ஒலியனாக வருகிறது என்னும் மொழியியல் செய்தி நினைவுக்கு வந்தது. </div>
<div style="text-align: justify;">
கண்ணில் விளக்கெண்ணெய் விடாத குறையாகத் தேடிய நிலையில் 5 குறள்களில் ஆய்தம் உயிரெழுத்தைப் போல அலகு பெறுவதை அறிய முடிந்தது. இவ்வாறு வெண்பாக்களில் பயின்று வரும் ஆய்த எழுத்தின் யாப்பியல் நிலைமை பற்றி மனசுக்குள் ஒருவிதமான கேள்வி இருந்துகொண்டே இருந்தது. வெண்டளையில் ஆய்த எழுத்தைப் பார்க்கும்போதெல்லாம் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டதோடு சரி. வேலை நெருக்கடியில் அது மறந்து போய்விட்டது. </div>
<div style="text-align: justify;">
ஆய்த எழுத்தைப் பற்றி தெ.பொ.மீ (தமிழ் மொழி வரலாறு), செ.வை. சண்முகம் (எழுத்திலக்கணக் கோட்பாடு), சு. சக்திவேல் (தமிழ் மொழி வரலாறு), பெ. சுயம்பு (தமிழ் மொழி அமைப்பும் வரலாறும்) முதலானோர் நூல்களில் மொழியியல் நோக்கில் தொகுத்துக் கூறப்படுகிறது. எனது குறிப்புகளை மீண்டும் பார்த்தபோது ஆய்தம் அலகு பெறுதல் பற்றி யாப்பியல் நோக்கில் எழுதத் தோன்றியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>மரபிலக்கணம் தாண்டி</b></div>
<div style="text-align: justify;">
ஆய்தமும் ஒற்றெழுத்துகளும் அளபெடுக்கும்போது மட்டுமே அலகு பெறும். பிற இடங்களில் அலகு பெறாது என்பதே யாப்பிலக்கண நூல்கள் அனைத்தும் வெளிப்படுத்தும் இலக்கணமாகும்¹. இதற்கு மாறாக அளபெடை தோன்றாத இடத்திலும் ஆய்தம் உயிரெழுத்தாக வந்து அலகு பெறுகிறது. </div>
<div style="text-align: justify;">
ஆய்த எழுத்து செய்யுளில் இருவகை மதிப்பைப் பெறுகிறது. பெரும்பாலான இடங்களில் ஒற்றெழுத்துப் போலவும் சில இடங்களில் உயிரெழுத்துப் போலவும் கையாளப்படுகிறது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் வரும் வெண்பாக்களில் இவ்வாறான வருகையை வெளிப்படையாகக் காண முடிகிறது. யாப்பிலக்கண நூல்களின் இலக்கணத்திற்கு மாறாக உள்ள இப்போக்கு ஆராயத்தக்கது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>தரவுகள்</b></div>
<div style="text-align: justify;">
எனக்குக் கிடைத்த தரவுகள் அடிப்படையில் திருக்குறள் 5, நாலடியார் 2, பழமொழி 2, நந்திக் கலம்பகம் 1, முதலாழ்வார் மூவர் இயற்பா 2, யாப்பருங்கல விருத்தி - நலிபு வண்ணத்திற்கான சான்று நூற்பா, நீதிநெறி விளக்கம் 1, நேமிநாதம் 7 ஆகிய 21 இடங்களில் ஆய்தம் உயிரெழுத்தாக அலகு பெறுகிறது2. </div>
<div style="text-align: justify;">
மேற்கண்ட இடங்களில் ஆய்தத்தை ஒற்றெழுத்தாகக் கொண்டால் மா முன் நேர் ஆகி நேர் ஒன்று ஆசிரியத்தளை ஆகி விடும். ஆய்தத்தை உயிரெழுத்தாகக் கொண்டால் மட்டுமே வெண்டளை சிதையாமல் நிற்கும். வெண்டளையில் நம் எடுகோளைச் சரிபார்ப்பது எளிது என்பதால் வெண்டளையில் அமைந்த செய்யுள்கள் மட்டும் தரவுகளாகக் கொள்ளப்பட்டன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>பொருந்தாத சிந்தனை</b></div>
<div style="text-align: justify;">
ஒற்றை ஆய்தம் அலகு பெறாது என யாப்பிலக்கண நூல்கள் விதித்தாலும் தரவுகள் அதற்கு மாறாகவும் இருப்பதற்குப் பின்வருமாறு சிந்தனைகள் தோன்றக் கூடும்.</div>
<div style="text-align: justify;">
•<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>மெய்யெழுத்துகள் புள்ளி பெறும் என இலக்கண நூல்கள் கூறினாலும் ஓலைச் சுவடிகளில் புள்ளி வைத்தால் ஓலை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இல்லாமலேயே எழுதப்பட்டதும் உண்டு. இதனால், ஏடெழுதுவோர் காலப்போக்கில் இரட்டை ஆய்தம் இடம்பெற்ற இடங்களில் ஒற்றை ஆய்தத்தை மட்டும் எழுதி இருக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
•<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஆய்தத்திற்கு ஈடான ஓசை பெற்ற அல்லது வரிவடிவம் பெற்ற ஏதோ ஓர் எழுத்து ஆய்தமாகக் காலப்போக்கில் பாட பேதமாக எழுதப்பட்டிருக்கலாம். </div>
<div style="text-align: justify;">
•<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>தமிழ் மொழி, வரிவடிவத்தை விட ஒலி வடிவத்திற்கு முக்கியத்துவம் தரும் மொழி என்பதால் ஆய்தத்தின் வரிவடிவம் குறித்து அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை எனலாம். </div>
<div style="text-align: justify;">
‘ஓலைச் சுவடிகளில் காணப்பெறும் வழக்குகளை உண்மையெனவே கொள்வோமாயின் சில சமயங்களில் குகரமாக எழுதப்பட்ட ஆய்தம் தனியொலியாகக் கொள்ளப்பட்டது எனக் கொள்ள வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
சான்று: அஃதை <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>≥<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அகுதை (புறம். 347 -5)<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span></div>
<div style="text-align: justify;">
பிற்காலத்தில் சுவடிகளில் - பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலும் கூட - ஆய்தத்தின் மூன்று புள்ளிகளும் இணைக்கப்பட்டுக் கூ என்னும் வடிவத்தைத் தரும் வகையில் எழுதப்பட்டது. எனவே, இம்மாறுதல் சங்க காலத்திலேயே ஏற்பட்டதா என்பதைப் பற்றி நிச்சயமாக ஒன்றும் சொல்ல முடியாது. தம் காலத்திய முறைக்கு ஏற்ப எழுதும் பழக்கத்தின் விளைவாகவும் இது இருக்கலாம்’ என்பார் தெ.பொ.மீ.³</div>
<div style="text-align: justify;">
தெ.பொ.மீ காட்டும் சான்றை நாம் எல்லா இடத்திற்கும் பொருந்துவதாகக் கொள்ள முடியாது. மேலே காட்டிய தரவுகளில் இடம்பெற்ற அஃது, அஃறிணை ஆகிய இரண்டு சொற்களில் வரும் ஆய்தம் எல்லா நூல்களிலும் குகரமாக எழுதப்பட்டதாகப் பொதுமைப்படுத்த முடியாது. </div>
<div style="text-align: justify;">
தொல்காப்பியத்தில் அஃது என்பது அஃறிணை ஒன்றன்பால் சுட்டுப் பெயராகவும் அஃறிணை என்பது உயர்திணை அல்லாத திணையைக் குறிக்கும் பெயராகவும் ஆளப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
திருக்குறள் 363, 414 ஆகியவற்றில் வரும் ஆய்த எழுத்துகள் ‘து’ என்பதன் பாடபேதமாகக் காளிங்கர் கொண்டுள்ளதால் திருக்குறளில் ஏனைய இடங்களில் அலகு பெற்று வரும் ஆய்த எழுத்துகளும் பாடபேதம்தான் என்பது நா. முத்துநிலவனின் கருத்தாகும்4. </div>
<div style="text-align: justify;">
அனைத்து ‘அஃது’களையும் ‘அது’வெனக் கொள்ள முடியாது. மேற்காண் தரவுகளில் இடம்பெற்றுள்ள ‘அஃது’களை மீள்பார்வை செய்தால் இது தெளிவாகும். மேலும் அஃறிணை, வெஃகா ஆகிய சொற்களில் வரும் ஆய்தத்தைப் பாடபேதமாகக் கொள்ள முடியாது. </div>
<div style="text-align: justify;">
நன்னூல் எழுத்ததிகார(60) உரையில் ‘….. ஆய்தம் உயிர்போல அலகு பெற்றும் மெய்போலப் பெறாதும் ஒருபுடையொத்து அவற்றினிடயே சார்ந்து வருதலானும், ஏனைய தத்தம் முதலெழுத்தின் திரிபு விகாரத்தாற் பிறத்தலானும் சார்பெழுத்தாயினவெனக் கொள்க’ எனச் சங்கர நமச்சிவாயப் புலவரும் காரணங்கூறிச் சென்றனர்’ என்கிறார் க. வெள்ளை வாரணனார்5.</div>
<div style="text-align: justify;">
பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கர நமச்சிவாயர் ஆய்தம் உயிரெழுத்துப் போல அலகு பெறுதலைக் குறிப்பிட்டாலும் இங்கு அவர் யாப்பிலக்கண நோக்கில் ஆய்தத்தின் தனித்த நிலையை விவரித்ததாகக் கொள்ள முடியவில்லை; ஆய்தம் சார்பெழுத்தானதற்குக் காரணம் கூறிச் சென்றதாகவே வெள்ளை வாரணனார் கருதுகிறார். </div>
<div style="text-align: justify;">
ஆக ஆய்தம் அலகு பெறுவதை ஏற்றுக் கொள்ளும் சங்கர நமச்சிவாயர் அது புதிய மாற்றம் என்பதை அடையாளப்படுத்தாமல் சார்பெழுத்துகளுள் ஒன்றாகப் பழையதில் சேர்த்துவிட்டார். </div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhveL7_ETAZMcVcyw0QNoTD5v1TF5WOLz_y2s9eaUOGGLX4-hcTdlTMK1B0f2zEbSgxqVU-oDpQAMWK8zeOEyVFSpz5_PBrX4M-boWFMTpzgLjFIdlV2MZt5E7QUaURWNdBxfi4foViNgQT/s1600/Tamil-alphabet-%E0%AE%83%E0%AE%83.svg.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhveL7_ETAZMcVcyw0QNoTD5v1TF5WOLz_y2s9eaUOGGLX4-hcTdlTMK1B0f2zEbSgxqVU-oDpQAMWK8zeOEyVFSpz5_PBrX4M-boWFMTpzgLjFIdlV2MZt5E7QUaURWNdBxfi4foViNgQT/s1600/Tamil-alphabet-%E0%AE%83%E0%AE%83.svg.png" height="248" width="320" /></a></div>
<b>பழமையின் தாக்குதல்</b></div>
<div style="text-align: justify;">
ஆம், பழையதிலிருந்து கிளைத்து வளர்ந்த புதிய இலக்கிய இலக்கணப் போக்கினை அவ்வளவு லேசில் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. அதற்குக் காரணம் இலேசுக் கோட்பாடுதான். (இதிலிருந்துதான் லேசு என்னும் சொல்லாட்சியும் வந்ததோ என்னவோ.) </div>
<div style="text-align: justify;">
இலக்கணத்தைப் பதிவுசெய்து வைக்கச் செய்யுள் நடையைப் பின்பற்றும் நூலாசிரியன் செய்யுளின் யாப்பு கெடாதிருக்கவும் அதை முடித்து வைக்கவும் ஒருசில நேரங்களில் இடம் நிரப்பிகளாக மிகைச்சொற்களைச் சேர்ப்பது உண்டு. இதற்கு உரை சொல்வதை இலேசு என்பர். </div>
<div style="text-align: justify;">
புலவர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு நூலாசிரியரால் கூறப்படாமல் விடப்பட்ட செய்திகளைக் கூறுவர். இது நூலை மேலும் புரிந்துகொள்ளக் கூடுதல் உதவியாக இருக்கும். ஆனால் இதில் ஒருவகை ஆபத்தும் உண்டு. சில சமயங்களில் நூல் எழுதப்பட்ட காலத்திற்குப் பிற்பட்ட தமது காலத்தில் தோன்றிய வழக்குகளையும் தாம் அறிந்த செய்திகளையும் நூலாசிரியர் கூறியதாக சேர்த்துக் கூறிவிடுவர். பழமையைப் போற்றுவதில் உள்ள அக்கறையால் புதியதையும் பழையதற்குள் ‘அடக்கிக் காட்டுவர்’. தமிழ் மரபில் இலேசுவும் விதப்புக் கிளவிகளும் இவ்வாறு அடக்கம் செய்தவற்றை யாரேனும் தனியாக ஆராய்ந்தால் அது தமிழுக்கு நல்லது. </div>
<div style="text-align: justify;">
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span></div>
<div style="text-align: justify;">
கடிசொல் இல்லை காலத்துப் படினே</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பழையன கழிதலும் புதியன புகுதலும் </div>
<div style="text-align: justify;">
வழுவல கால வகையி னானே </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்று மொழிவளர்ச்சிக்கும் புதிய போக்கிற்கும் வாயில் கதவுகளை அகலத் திறந்து வைத்துச் சென்ற நூல்கள்தாம் தொல்காப்பியமும் நன்னூலும். ஆனால் இதற்கு மாறாக தொல்காப்பியத்திற்குள்ளும் நன்னூலுக்குள்ளும் இப்படி எதையெடுத்தாலும் அடக்கிக் காட்டுவது அந்த நூல்களின் கொள்கைக்கே எதிரானது என்பதை ஏனோ உணர்வாரில்லை.</div>
<div style="text-align: justify;">
இக்கால இலக்கண அறிஞரான பாவலரேறு ச. பாலசுந்தரம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் இரண்டாவது நூற்பாவிற்கு உரை எழுதும்போது ‘…… ஓரன்ன என்றமையான், ஒருபுடை ஒப்புமையே கொள்க. அவையாவன: மொழிக்கு உறுப்பாதலும், மாத்திரை பெறுதலும், அசைக்கு உறுப்பாதலும் ஆம். …….. ஆய்தம் உயிர் ஏறலின்றி யாண்டும் ஒலிப்பொடு வரும் பண்பினது என்பது விளங்க ஒலிக்குறிப்பினதாகிய புள்ளியை விதந்து ‘ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்’ என்று கூறினார். …… ஆய்தம் யாண்டும் ஒலிப்பொடு நிற்றலான், இதனை உயிர் ஊர்வதில்லை; அரை மாத்திரை ஆதலின் அது மெய்யினை ஊர்வதில்லை. இங்ஙனம் உயிருக்கும் ஒற்றுக்கும் இடைப்பட்டு நிற்றலின், உயிர் போலவும் ஒற்றுப் போலவும் முறையே அலகு பெற்றும் பெறாதும் வரும் என அறிக’ என்கிறார்6 .</div>
<div style="text-align: justify;">
‘தமிழ் எழுத்துகள் முப்பது; சார்ந்து வரும் மூன்று தவிர’ என முதல் நூற்பாவில் கூறிய தொல்காப்பியர் அதன் தொடர்ச்சியாக அந்த மூன்று எழுத்துகள் எவை என்பதை இரண்டாம் நூற்பாவில் தெரிவிக்கிறார்; அவ்வளவுதான். இதற்குத்தான் பாவலரேறு ச. பாலசுந்தரம் இலேசு, விதப்புக் கிளவிகளைப் பயன்படுத்தித் தான் அறிந்தவற்றை எல்லாம் தொல்காப்பியருடையதாகக் கருத்தேற்றம் செய்கிறார். </div>
<div style="text-align: justify;">
தமிழ் ஒலியிலக்கணம் பற்றி ‘உயிர் என்னும் ஒலியை உயிருள்ளனவெல்லாம் வழங்குகின்றன. மெய் என்னும் ஒலியை உயிரில்லாதனவெல்லாம் வழங்குகின்றன.’ எனக் கூறும் பா.வே. மாணிக்க நாயக்கர் ‘ஆய்தம்(ஃ) என்னும் உயிர்ப்பொலியை உலகம் முழுவதும் வழங்குகின்றது’ என்கிறார்7. ஆய்தத்தை உயிர்க்கும் மெய்க்கும் மேலாக ‘உயிர்ப்பொலி’ எனச்சொல்லிக் காட்டியதோடு விட்டுவிட்டார் போலத் தெரிகிறது.</div>
<div style="text-align: justify;">
இது நிற்க.</div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b>புதிய மாற்றம்</b></div>
<div style="text-align: justify;">
எந்த இலக்கண நூல் அளபெடை அல்லாத ஒற்றை ஆய்தம் அலகு பெறாது என்று விதித்ததோ அதே இலக்கண நூலின் உரைமேற்கோள் பாடல் ஒன்றில் ஒற்றை ஆய்தம் அலகு பெற்று வந்துள்ளது வியப்பிற்குரிய முரண். ஆம், ஒற்றை ஆய்தம் அலகு பெறாது என்று விதித்த யாப்பருங்கல விருத்தி உரையின் நலிபு வண்ணத்திற்கான மேற்கோள் பாடலில் ஒற்றை ஆய்தம் அலகு பெற்று வந்துள்ளது. மட்டுமல்லாமல் திருக்குறள் முதலான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் பிறவற்றிலும் அலகு பெற்று வந்துள்ளது ஏற்கனவே காட்டப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
எனவே, ஆய்தம் அலகு பெறுவது என்பது ஒரு புதிய மாற்றமாகத் திருக்குறள் காலத்திற்கு முன்பிருந்தே தோன்றி மெல்ல வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இது பழமைக்கு மாறாகத் தோன்றியதால் எல்லாராலும் ஏற்க இயலாத புலமைக் குழப்பம் இலக்கணிகளிடையே நிலவியுள்ளது.</div>
<div style="text-align: justify;">
தொல்காப்பியம் மொழி மரபில் 5,6,7 ஆகிய மூன்று நூற்பாக்கள் ஆய்தம் பற்றிப் பேசுகின்றன8. ஒருமொழி ஆய்தம், புணர்மொழி ஆய்தம், குறிப்புமொழி ஆய்தம் என அவற்றின் பொருண்மையை வகைப்படுத்தலாம். </div>
<div style="text-align: justify;">
ஏழாம் நூற்பாவிற்குக் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளும் நச்சினார்க்கினியர் செய்யுளியலை நோக்கி ஒற்றளபெடையைக் கருத்தில் கொண்டு உரை எழுதுகிறார். உருவமும் இசையும் பற்றி வரும் குறிப்பு மொழிகள் மட்டுமல்லாது பிற மொழிகளில் வரும் ஆய்தமும் சிறுபான்மை மிகுந்து ஒலிக்கும். அப்போது கஃஃறு, சுஃஃறு, எஃஃகு என்றவாறு இரண்டு ஆய்தம் இட்டு எழுதப்படும் என்கிறார்9. நூற்பாவிலுள்ள ‘எழுத்தின் இயலா’ என்பதற்கு ஒற்றை எழுத்தாக வராது; இரட்டையாக வரும் எனப் பொருள்கொள்கிறார். குறிப்புச் சொற்கள் மட்டுமன்றி பிறவற்றையும் சேர்த்துக்கொள்கிறார். நச்சினார்க்கினியரின் கருத்து ‘அளபெடை அல்லாக் காலத்து ஆய்தம் அலகு பெறாது’ என விதித்த யாப்பிலக்கண நூல்களின் பிரதிபலிப்பு எனலாம்.</div>
<div style="text-align: justify;">
நச்சினார்க்கினியரைப் பின்பற்றி உரை கூறும் பாவலரேறு ச. பாலசுந்தரம் அவ்வாறு இரட்டையாக எழுதப்படும் ஆய்தம் வேறு; அளபெடை ஆய்தம் வேறு என்கிறார். குறிப்புச் சொற்களில் வரும் இரட்டை ஆய்தத்தை அளபெடை ஆய்தமாகக் கொள்ள முடியாது. ஏனெனில், அளபெடை ஆய்தம் குறிப்புச் சொற்களில் வராது; பெயர்ச்சொற்கள், வினைச் சொற்களில் மட்டுமே வரும் என வேறுபடுத்துகிறார் அவர்10. </div>
<div style="text-align: justify;">
இதே நூற்பாவிற்கு உரை எழுதிய இளம்பூரணர் நிறத்தின் மிகுதியையும் ஓசையின் மிகுதியையும் குறித்து வரும் கஃறு, சுஃறு என்னும் குறிப்பு மொழிகளில் வரும் ஆய்தம் அரை மாத்திரையையும் விட நீண்டு ஒலிக்கும்; அந்த நீட்சியைக் காட்ட இன்னொரு ஆய்தத்தைக் கூடுதலாக எழுதத் தேவையில்லை; ஒற்றை ஆய்தமே போதும் என்கிறார்11.</div>
<div style="text-align: justify;">
ஆக ஆய்தத்தின் ஒலி நெடுக்கத்தைக் குறிக்கும் வகையில் ஆய்தத்தை வரிவடிவில் எழுதிக்காட்ட ஒற்றை ஆய்தமே போதும் என்பதும் இரட்டை ஆய்தம் வேண்டும் என்பதுமான இருவகையான நிலைப்பாடுகள் நடைமுறையில் இருந்துவந்துள்ளதை இதன் மூலம் அறியலாம்.</div>
<div style="text-align: justify;">
ஆய்தம் அளபெடுக்காத குறிப்பு மொழிகளில் ஒலி நெடுக்கம் தேவையான இடத்திலும் கூட ஒற்றை ஆய்தமே போதும் என்னும் இளம்பூரணரின் கருத்து அவருக்கு முன்பே தோன்றியிருந்து, நாளடைவில் வலுப்பட்டது எனலாம். இதுவே குறிப்பு மொழிகள் மட்டுமல்லாது பிற சொற்களுக்கும் உரியதாக விரித்துக்கொள்ளப்பட்டது எனக் கருத இடம் உண்டு. </div>
<div style="text-align: justify;">
நேமிநாதம் தன் காலத்திய மாற்றத்தைப் பதிவு செய்யும் வகையில் ஆய்தத்தையும் முதல் எழுத்துகளுள் ஒன்றாகச் சேர்த்து எண்ணியது இதனால்தானோ என நினைக்கத் தோன்றுகிறது. </div>
<div style="text-align: justify;">
எழுத்திலக்கணத்தில் இடம்பெற்ற இக்கருத்தியல் யாப்பிலக்கணத்திற்கும் பரவியிருக்க வேண்டும். இதன் விளைவாகவே நாளடைவில் ஒற்றை ஆய்தம் உயிர் போல அலகு பெற்று வருவதாக யாப்பியல் வளர்ச்சி பெற்றது எனலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>ஏற்பது வளர்ச்சி</b></div>
<div style="text-align: justify;">
தொல்காப்பியத்தில் சொல்லுக்கு முதலில் 3 இடங்களில் மட்டும் வந்த சகர எழுத்து பிற்காலத்தில் எல்லா உயிரோடும் கூடி மொழிமுதல் ஆனது. சிறுபான்மை இடம்பெற்ற தளை இலக்கணம் பிற்காலத்தில் வகுத்தும் தொகுத்தும் கூறப்படும் அளவிற்கு வளர்ச்சி பெற்றது.</div>
<div style="text-align: justify;">
பாக்களில் இருந்து பாவினங்கள் வளர்ச்சி பெற்றன. பாட்டுடைச் செய்யுளுக்கு இடையே வந்த உரை பிற்காலத்தில் உரைநடையாக வளர்ச்சி பெற்றது. வண்ணமும் வனப்பும் தனித்த இலக்கிய வகைகளாக வளர்ச்சி பெற்றன. அவற்றைப் போலவே ஆய்தம் உயிரெழுத்தாக அலகு பெற்றதான வளர்ச்சியையும் நோக்கிட வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
மேலே காட்டப்பட்ட வெண்டளை பயின்று வந்த தரவுகள், அலகு பெறுமாறு வரும் ஆய்தத்தின் இலக்கணத்திற்கு வலுவூட்டுவனவாகவே உள்ளன.</div>
<div style="text-align: justify;">
ஒற்றை ஆய்தம் மெய் போல அலகு பெறாமல் வரும்; உயிர் போல அலகு பெற்றும் வரும். ஆய்தம் ஒற்றளபெடை போல வந்தும் அலகு பெறுதல் உண்டு என ஆய்தம் அலகு பெறுவது பற்றிய இலக்கணத்தை விரிவுபடுத்திக் கொள்வதால் கேடு ஒன்றும் இல்லை. </div>
<div style="text-align: justify;">
ஆய்தம் உயிர் எழுத்துப் போல அலகு பெறும் என்றால் மாத்திரையில் சிக்கல் வருமோ என்னும் ஐயம் எழலாம். குற்றியலிகரமும் குற்றியலுகரமும் உயிர் எழுத்தாக இருப்பினும் அவை அரை மாத்திரை பெறும் என்பதையும் அசைக்கு உறுப்பாகி வந்து சில இடங்களில் குறில் எழுத்துப்போல அலகு பெற்று நிற்கும் என்பதையும் யாப்பிலக்கண நூல்கள் ஏற்றுக்கொண்டுள்ளன12. இதையே ஆய்தத்திற்கும் பொருத்திக் கொள்ளலாம். எனவே, ஆய்தம் அலகு பெற்று வருவதில் மாத்திரைக் குழப்பம் தேவையில்லை.</div>
<div style="text-align: justify;">
மேற்கண்டவை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கும்போது</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனிநிலை ஒற்றுஇவை தாம்அலகு இலவே</div>
<div style="text-align: justify;">
அளபெடை அல்லாக் காலை யான.</div>
<div style="text-align: justify;">
என்னும் யாப்பருங்கல நூற்பாவுக்குப் புறனடையாக</div>
<div style="text-align: justify;">
தளைசீர் வண்ணந் தூக்கோ(டு) இழுக்கின்</div>
<div style="text-align: justify;">
ஆய்தம் உயிரலகு பெறுதலும் வரையார்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னுமாறு புதியன தழுவி விதி இயற்றப்பட்டிருக்க வேண்டும். மூல நூலாசிரியனோடு மாறுபட்டுவிடக் கூடாது என்னும் அதீத எச்சரிக்கையால் ஏற்பட்ட புலமைத் தயக்கம் இலக்கணிகளின் கையைக் கட்டிப் போட்டுவிட்டதோ என்னவோ.</div>
<div style="text-align: justify;">
மொழியால் பக்குவப்பட்டு புதியதாகத் தோன்றும் ஒன்றை நம் மரபு மனம் எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை. இதனாலேயே தமிழ்ப் புலவர்கள் பெரும்பாலோர் மாற்றத்தை, வளர்ச்சியை அங்கீகரிக்கும் மனம் இன்றி எதையும் பழமைக்குள் அமிழ்த்தி விடுவர். தம் பிடிவாதத்தால் மொழியின் வளர்ச்சி தடைபடுமே என்கிற கவனம் இல்லாமலேயே தம் கருத்தை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டுவர். ஆய்த எழுத்து அலகு பெறுதல் பற்றிய நம் புலவர்களின் மனக்கருத்தும் இத்தகையதுதான். </div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7EOeFwBmBHzNzacxw5OiyuiJxPBp8TwditDmpnpbS5g1ENtW8tkhZGfu9TB5ljRKWorNioPnjHDPfRZDOpIo783rDR0rjHm4Bpv2-ffssexWdWv8MPpsg3CFZ6oumx1uZXIb_eg9M9F3V/s1600/aaytham.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7EOeFwBmBHzNzacxw5OiyuiJxPBp8TwditDmpnpbS5g1ENtW8tkhZGfu9TB5ljRKWorNioPnjHDPfRZDOpIo783rDR0rjHm4Bpv2-ffssexWdWv8MPpsg3CFZ6oumx1uZXIb_eg9M9F3V/s1600/aaytham.jpg" height="258" width="320" /></a></div>
பழமையைப் போற்றுகிற போர்வையில் புதிய வருகையைப் புறந்தள்ளிவிடக் கூடாது. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பும் மரபில் வந்தவர்கள் நாம். எனவே, வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி மொழிக்கு ஊறு விளைவிக்காத புதிய வரவுகளுக்கு ஏற்ப விதி செய்வதே மொழிக்கு நன்மை செய்வதாகும். </div>
<div style="text-align: justify;">
----------------------------------</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>மேற்கோள்கள்</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b>1.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>யாப்பிலக்கண நூல்கள்</b></div>
<div style="text-align: justify;">
1……… ஒற்றள பாய்விடின் ஓரலகாம் <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> யாப்பருங்கலக் காரிகை 51</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>தனிநிலை யொற்றிவை தாமல கிலவே</div>
<div style="text-align: justify;">
யளபெடை யல்லாக் காலை யான.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>யாப்பருங்கல விருத்தி நூற்பா 3 ப.38</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
3.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அளபெழி னல்லதை யாய்தமு மொற்று</div>
<div style="text-align: justify;">
மலகியல் பெய்தா வென்மனார் புலவர் அவிநயம் யா.வி.3மே. ப.38</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
4.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஆய்தமு மொற்று மளபெழ நிற்புழி</div>
<div style="text-align: justify;">
வேறல கெய்தும் விதியின வாகும் காக்கைபாடினியார் யா.வி.3 மே.ப.39</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
5.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>“தாமலகிலவே” என்றவழி ஏகார விதப்பினால் ஒற்றும் ஆய்தமும் அளபெழுந்து குற்றெழுத்தின் பயத்தவாய் ஓர் அலகு பெறுவது அல்லது முன்னும் பின்னும் நின்ற எழுத்தினோடு புணர்ந்து நிரையசை யாகாவெனக் கொள்க.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> யா.வி. நூற்பா 3 உரை ப.39</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>2.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஆய்தம் அலகு பெற்றுவரும் இடங்கள்(20)</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>திருக்குறள்</b></div>
<div style="text-align: justify;">
1.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்</div>
<div style="text-align: justify;">
பெற்றான் பொருள்வைப் புழி<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> 226</div>
<div style="text-align: justify;">
2.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை</div>
<div style="text-align: justify;">
யாண்டு மஃதொப்ப தில் <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> 363</div>
<div style="text-align: justify;">
3.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற்</div>
<div style="text-align: justify;">
கொற்கத்தி னூற்றாந் துணை <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> 414</div>
<div style="text-align: justify;">
4.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அற்றா லளவறிந் துண்க அஃதுடம்பு</div>
<div style="text-align: justify;">
பெற்றான் நெடிதுய்க்கு மாறு<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> 943</div>
<div style="text-align: justify;">
5.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இன்பங் கடன்மற்றுக் காமம் அஃதடுங்கால்</div>
<div style="text-align: justify;">
துன்ப மதனிற் பெரிது <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> 1166</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>நாலடியார்</b></div>
<div style="text-align: justify;">
6.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நுண்ணுணர் வின்மை வறுமை யஃதுடைமை</div>
<div style="text-align: justify;">
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வ மெண்ணுங்காற்</div>
<div style="text-align: justify;">
பெண்ணவா யாணிழந்த பேடி யணியாளோ</div>
<div style="text-align: justify;">
கண்ணவாத் தக்க கலம்<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> 251</div>
<div style="text-align: justify;">
7.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>கடக்கருங் கானத்துக் காளைபின் னாளை</div>
<div style="text-align: justify;">
நடக்கவும் வல்லையோ வென்றி – சுடர்த்தொடீஇ</div>
<div style="text-align: justify;">
பெற்றா னொருவன் பெருங்குதிரை யந்நிலையே</div>
<div style="text-align: justify;">
கற்றா னஃதூரு மாறு.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> 398</div>
<div style="text-align: justify;">
பழமொழி நானூறு</div>
<div style="text-align: justify;">
8.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>பெரிய குடிப்பிறந் தாரும் தமக்குச்</div>
<div style="text-align: justify;">
சிறியா ரினமா யொழுகுதல் – எறியிலை</div>
<div style="text-align: justify;">
வேலொடு நேரொக்கும் கண்ணாய்! அஃதன்றோ</div>
<div style="text-align: justify;">
பூவொடு நாரியைக்கு மாறு.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> 88</div>
<div style="text-align: justify;">
9.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அற்றாக நோக்கி அறத்திற் கருளுடைமை</div>
<div style="text-align: justify;">
முற்ற அறிந்தார் முதலறிந்தார் – தெற்ற</div>
<div style="text-align: justify;">
முதல்விட் டஃதொழிந்தோர் ஓம்பா வொழுக்கம்</div>
<div style="text-align: justify;">
முயல்விட்டுக் காக்கை தினல்<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> 370<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>யாப்பருங்கல விருத்தி மேற்கோள்</b></div>
<div style="text-align: justify;">
10.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>எஃகொ டவன்காப்ப வேமாந்தாள் போதந்தாள்</div>
<div style="text-align: justify;">
அஃகுநீர்க் கான்யாற் றயன்மண லெக்கர்மே</div>
<div style="text-align: justify;">
லிஃதோநின் பாவை திருந்தடிப் பின்றை</div>
<div style="text-align: justify;">
யஃதோ விடலை யடி. <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> யா.வி. பகுதி 2 நூற்பா 95 ப.35</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>நந்திக்கலம்பகம்</b></div>
<div style="text-align: justify;">
11.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சென்றஞ்சி மேற்செங்கண் வேழம் சிவப்பச் சிலர்திகைப்ப</div>
<div style="text-align: justify;">
அன்றும் சினத்தார் இனமறுத் தார்போலும் அஃதஃதே</div>
<div style="text-align: justify;">
குன்றஞ்செய் தோள்நந்தி நாட்டம் குறிகுருக் கோட்டையின்மேல்</div>
<div style="text-align: justify;">
சென்றஞ்சப் பட்டதெல் லாம்படும் மாற்றலர் திண்பதியே. <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> 16</div>
<div style="text-align: justify;">
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி</div>
<div style="text-align: justify;">
12.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவு(ம்) அஃகா</div>
<div style="text-align: justify;">
பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்னகரும் – நான்கிடத்தும்</div>
<div style="text-align: justify;">
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே</div>
<div style="text-align: justify;">
என்றால் கெடுமாம் இடர்<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>77</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி</b></div>
<div style="text-align: justify;">
13.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அடிவண்ணந் தாமரை அன்றுலகம் தாயோன்</div>
<div style="text-align: justify;">
படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம் – முடிவண்ணம்</div>
<div style="text-align: justify;">
ஓராழி வெய்யோன் ஒளியு மஃதன்றே</div>
<div style="text-align: justify;">
ஆராழி கொண்டார்க் கழகு<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>5</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>நீதிநெறி விளக்கம்</b></div>
<div style="text-align: justify;">
14.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>எத்துணைய வாயினும் கல்வி இடமறிந்து</div>
<div style="text-align: justify;">
உய்த்துணர்வு இல்லெனின் இல்லாகும் – உய்த்துணர்ந்தும்</div>
<div style="text-align: justify;">
சொல்வன்மை இன்றெனின் என்னாம் அஃதுண்டேல்</div>
<div style="text-align: justify;">
பொன்மலர் நாற்ற முடைத்து <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> 5</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>நேமிநாதம்</b></div>
<div style="text-align: justify;">
15.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஆதியுயிர் வவ்வியையின் ஔவாம் அஃதன்றி</div>
<div style="text-align: justify;">
நீதியினால் யவ்வியையின் ஐயாகும்…. <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> 9</div>
<div style="text-align: justify;">
16.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>செயிரில் அஃறிணையாம் சென்று<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> 27</div>
<div style="text-align: justify;">
17.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>பாங்கில் அஃறிணைப்பா லாம்<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> 28</div>
<div style="text-align: justify;">
18.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஏய்ந்த அஃறிணைப்பாற் கீங்கு<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> 29</div>
<div style="text-align: justify;">
19.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அயர்வில் அஃறிணையே ஆம்<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> 33</div>
<div style="text-align: justify;">
20.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>எண்ணும் இருதிணையும் எய்தும் அஃறிணையா <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>34</div>
<div style="text-align: justify;">
21.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஆயிழாய் பன்மையினுஞ் செல்ல அஃறிணையின் <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>72</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
3.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>தெ.பொ.மீ. தமிழ் மொழி வரலாறு ப.126</div>
<div style="text-align: justify;">
4.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நா. முத்துநிலவனின் ‘திருக்குறளில் தளைப் பிழை இல்லை, பாட </div>
<div style="text-align: justify;">
பேதம் உண்டு’ கட்டுரை 05.08.13 valarumkavithai.blogspot.in</div>
<div style="text-align: justify;">
5.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>க. வெள்ளை வாரணனார் தொல்காப்பியம் – நன்னூல் </div>
<div style="text-align: justify;">
எழுத்ததிகாரம் ப. 28</div>
<div style="text-align: justify;">
6.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ச. பாலசுந்தரம் தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் உரைக்கொத்து ப.38</div>
<div style="text-align: justify;">
7.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>என். கே.வேலன் தமிழ்ப் பேரறிஞர் பா.வே. மாணிக்க நாயக்கர் ப.84</div>
<div style="text-align: justify;">
8. ச. பாலசுந்தரம் தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் உரைக்கொத்து பக். 157-170</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி</div>
<div style="text-align: justify;">
உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே (5)</div>
<div style="text-align: justify;">
ஈறுஇயல் மருங்கினும் இசைமை தோன்றும் (6)</div>
<div style="text-align: justify;">
உருவினும் இசையினும் அருகித் தோன்றும்</div>
<div style="text-align: justify;">
மொழிக்குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா</div>
<div style="text-align: justify;">
ஆய்தம் அஃகாக் காலை யான (7)</div>
<div style="text-align: justify;">
9.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>மேலது பக்.164,165</div>
<div style="text-align: justify;">
10.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>மேலது ப.169 </div>
<div style="text-align: justify;">
11.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>மேலது பக்.163,164</div>
<div style="text-align: justify;">
12.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>யா.வி. நூற்பா 4 ப.42; யா.கா. 51 ப. 175</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>துணை நூல்கள்</b></div>
<div style="text-align: justify;">
1.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>பழைய தமிழ்க் கவிதை இலக்கணம் யாப்பருங்கலம் விருத்தி பகுதி 1,2; ச.பவானந்தம் பிள்ளை ப.ஆ., 2001 முதல் பதிப்பு, சென்னை: டாக்டர். எம். தேன்மொழி.</div>
<div style="text-align: justify;">
2.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>யாப்பருங்கலக் காரிகை சு. சாமிஐயா ப.ஆ., 2003 நான்காம் பதிப்பு; அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.</div>
<div style="text-align: justify;">
3.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>தமிழ் மொழி வரலாறு தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், 2007 முதற்பதிப்பு, சென்னை: முல்லை நிலையம்.</div>
<div style="text-align: justify;">
4.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>திருக்குறளில் தளைப் பிழை இல்லை, பாட பேதம் உண்டு நா. முத்துநிலவன் கட்டுரை 05.08.13 valarumkavithai.blogspot.in</div>
<div style="text-align: justify;">
5.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>தொல்காப்பியம் – நன்னூல் எழுத்ததிகாரம் க. வெள்ளை வாரணனார், டிசம்பர் 2001 முதல் பதிப்பு, சிதம்பரம்: மெய்யப்பன் தமிழாய்வகம்.</div>
<div style="text-align: justify;">
6.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>தொல்காப்பியம் எழுத்ததிகார மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் கணேசையர் பதிப்பு, 2007 இரண்டாம் பதிப்பு, சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.</div>
<div style="text-align: justify;">
7.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் உரைக்கொத்து, தி.சா. கங்காதரன் ப.ஆ, ஆகஸ்டு 2007 முதல் பதிப்பு, தஞ்சாவூர்: சரசுவதி மகால் நூலகம், வெளியீட்டு எண் 501 .</div>
<div style="text-align: justify;">
8.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நேமிநாதம் உரையுடன் 2004 முதல் பதிப்பு, சென்னை: எம். வெற்றியரசி.</div>
<div style="text-align: justify;">
9.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>திருக்குறள் (ஜைன உரை) டிசம்பர் 1991, முதல் பதிப்பு, தஞ்சாவூர்: சரஸ்வதி மகால் நூல்நிலையம்.</div>
<div style="text-align: justify;">
10.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நாலடியார் தெளிவுரை 1982 முதல் பதிப்பு, திருநெல்வேலி: தமிழ்நாடு மாநிலத் தமிழ்ச் சங்கம்.</div>
<div style="text-align: justify;">
11.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>பழமொழி நானூறு ஆகஸ்டு 1941 முதல் பதிப்பு, மே 1968 மறு அச்சு, திருநெல்வேலி: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.</div>
<div style="text-align: justify;">
12.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நந்திக்கலம்பகம் நவம்பர் 2003 இரண்டாம் பதிப்பு, சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.</div>
<div style="text-align: justify;">
13.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>முதலாழ்வார் மூவர் இயற்பா டிசம்பர் 1988 முதல் பதிப்பு, சென்னை: ஆழ்வார்கள் அமுத நிலையம்.</div>
<div style="text-align: justify;">
14.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நீதிநூல் தெளிவுரை சூலை 2006 முதல் பதிப்பு, சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.</div>
<div style="text-align: justify;">
15.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>தமிழ்ப் பேரறிஞர் பா.வே. மாணிக்க நாயக்கர் மே 1972 முதல் பதிப்பு, திருநெல்வேலி: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். </div>
<div style="text-align: justify;">
16.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நேமிநாதத்தின் இலக்கண உருவாக்கம் முனைவர் பட்ட ஆய்வேடு, நா. அருள்முருகன், நவம்பர் 2010, சேலம்: பெரியார் பல்கலைக் கழகம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.com7