உலகக் கவிதைகள் தினம்

குறுகுறுக்கும் கருவிழி நிறையும்
தன்னிழல் தின்ன முயன்று
அலகு வலி தாளாமல் மருண்டு
கலங்கி நிற்கிறது குருவி
நினைவோடை நெடுவழியே
உலக ஆடியில் தெறிக்கும்
தன் மாயபிம்பம் வெல்ல
திக்கற்று
இடருறும் மானிடப் பறவை

குருவிகள் தின இரவின் மடியில் புலரும் கவிதைகள் தின வாழ்த்துக்கள்(21.03.2017).

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 16

வல்லிக்கண்ணன்                                              சென்னை 27-2-2002

அன்பு மிக்க ......, வணக்கம். 
         உங்கள் 16-2-2002 கடிதம் 20ஆம் தேதி வந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சலட்டை வரவேயில்லை.
     உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சோதனைகள், மாறுதல், உங்கள் முயற்சிகள், நம்பிக்கை பற்றி அறிந்தேன். வெற்றி கிடைக்கட்டும். வளர்ச்சி பெற்று முன்னேறுவதற்கு  காலம் துணைபுரியட்டும். வாழ்த்துகள்.      

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்